தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சேலத்தை சேர்ந்த ராஜா, புஷ்பா தம்பதிகளின் மகனான யோகேஷ்வரனின் பெயரில் உள்ள யோகம் அவரது வாழ்க்கையில் இல்லை.
போராட்டத்தில் வீரமான அந்த இளைஞன் ரயில் விபத்தில் அடிபட்டு இறந்து விட துடி துடித்து போனார்கள் பெற்றோர்கள்.
தங்களது கனவெல்லாம் தளர்ந்து விட்ட சோகத்தில் இருந்த யோகேஷ்வரனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் சொன்ன லாரன்ஸ், நான் உங்க மகனாக இருந்து அவர் செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்கிறேன் என்று ஆறுதல் கூறினார்..
சொன்னதோடு நின்று விடாமல் யோகேஸ்வரனின் தங்கையின் படிப்புக்காக ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது அவர்களின் குடும்பத்தினருக்காக ஒரு இடத்தை வாங்கி அதில் அழகாக இருபத்தந்து லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீட்டையும் கட்டி கொடுத்திருக்கிறார் லாரன்ஸ்.
லாரன்ஸின் சேவை தொடர அவரை நாம் வாழ்த்துவோம்…