தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விரைவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் தலைவர் பதவிக்கு ஐந்து அணிகளை சேர்ந்தவர்கள் போட்டியிட உள்ளார்கள்.
இந்நிலையில் ஒரு அணியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும், ராதாகிருஷ்ணன் அவர்கள் அணியினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அதன் விரவம் வருமாறு…
குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட திரைப் படங்களுக்கு, சில வருடங்களாக, வழங்கப்படாமல் இருந்த மானியத் தொகையை, தயாரிப்பாளர்களுக்கு வழங்ககோரியும், திருட்டு வீ.சி.டி / கேபிள் டி.வி யில் அனுமதி பெறாமல் ஒளிபரப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தயாரிப்பாளரும், நடிகருமான, ஜே.கே. ரித்தீஷ் அவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிடும், ராதாகிருஷ்ணன், செயலாளர் பதவிக்கு போட்டியிடும், சிவசக்தி பாண்டியன், ஜே.எஸ்.கே. சதீஷ் குமார், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும், கே. ராஜன், சுரேஷ் காமாட்சி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும், விஐய முரளியும், மற்றும் தயாரிப்பாளர் சௌந்தர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளர்கள் அனைவரும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் மனு அளித்தனர்.
மாண்புமிகு முதல்வர் அவர்களும் ஆவண செய்வதாக கூறியுள்ளார்கள். ஆக தமிழக அரசுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்திருக்கிறது.
தயாரிப்பாளர்கள் தங்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறமுடியும். என்று தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னே ஆக்ஷனில் இறங்கிய இராதாகிருஷ்ணன் தலைமையிலான “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி”க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.