கமல் பாடலை பாடி ஷங்கர் மகாதேவனிடம் வாய்ப்பு பெறும் கூலித்தொழிலாளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலின் விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்ற “உன்னை காணாத…” பாடல் மிகவும் பிரபலம். கமலும், ஷங்கர் மகாதேவனும் இணைந்து பாடியிருந்தனர்.

இந்த அழகான பாடலை எவரும் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில், கேரளாவில் தோட்டத்தில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளி ஒருவர், இந்தப்பாடலை மிக அழகாக பாடி சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை எல்லாரும் பகிர ஆரம்பித்துள்ளனர்.

இது அந்த ஒரிஜினல் பாடகர் ஷங்கர் மகாதேவனை சென்றடைந்துள்ளது.

எனவே அவர் தன் ட்விட்டரில் அந்த வீடியோவை ரீ-டுவீட் செய்து, “யாராவது இவரை கண்டுபிடிக்க உதவுங்கள், இவருடன் இணைந்து பாட ஆசை” என கூறியிருந்தார்.

தற்போது அந்த இளைஞர் யார் என்ற விபரம் தெரியவந்துள்ளது. இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ராகேஷ் உன்னி நூரநாடு என தெரியவந்துள்ளது.

அதோடு அவரின் மொபைல் நம்பரும் இணையதளங்களில் வெளியானது.

எனவே ஷங்கர் மகாதேவனும், ராகேஷை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறாராம்.

விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Raakeshs melodious singing goes Viral impresses Shankar Mahadevan

Exclusive: கே.வி. ஆனந்த் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

இப்படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா தயாரிக்கிறது.

இதன் பூஜையில் அண்மையில் நடைபெற்றதை தொடர்ந்து இதன் சூட்டிங் லண்டனில் நடந்து வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் ஆர்யா இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமில்லை.

Arya to play Suriyas villain in KV Anand film

*குருதிப்புனல்* வரிசையில் அதர்வாவின் *குருதி ஆட்டம்*.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கியவர் ஸ்ரீகணேஷ்.

இந்த படத்தை தொடர்ந்து அதர்வாவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம்.

இந்த படத்துக்கு ‘குருதி ஆட்டம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறதாம்.

23 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு பெயரில் கமலின் *குருதிப்புனல்* படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி படத்தை இயக்கும் மிஷ்கின்; ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதியும், தமன்னாவும் இணைந்து நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என கூறப்படுகிறது.

நயன்தாராவுக்கு ஆல்பம் கொடுத்து அசத்திய தல அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஸ்வாசம் படத்தில் அஜித், நயன்தாரா ஆகியோருடன் தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சிவா இயக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தனது சக நடிகர்களுடன் இயல்பாக பழகும் பழக்கம் கொண்ட அஜித், நயன்தாராவிற்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

பின்பு அந்த புகைப்படங்களை ஆல்பமாக உருவாக்கி அவருக்கு பரிசளித்துள்ளார்.

இதனைக் கண்டு நயன்தாரா நெகிழ்ந்து போனதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக வீரம் படத்தில் நடித்த அப்புக்குட்டியை வைத்து அஜித் புகைப்படம் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

மும்பையில் ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மும்பைக்கு பயணம் மேற்கொண்ட லதா ரஜினிகாந்த், சிவாஜி பார்க் பகுதியிலுள்ள ராஜ் தாக்ரேவின் இல்லத்துக்கு இன்று சென்றார்.

அங்கு ராஜ் தாக்ரே மற்றும் அவரது மனைவி ஷர்மிலாவை லதா ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார்.

அரசியல் வழக்கம்போல இது நட்பு ரீதியிலான சந்திப்பு என சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த், சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்ரேவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

கடந்த 2010-ஆம் ஆண்டு பால் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த் பால் தாக்ரே தனக்குக் கடவுளைப் போன்றவர் என்றும் கூறியிருந்தார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில், அவரது மனைவி லதா, நவநிர்மான் சேனாவின் தலைவரும் மறைந்த பால் தாக்ரேவின் மருமகனுமான ராஜ் தாக்ரேவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

More Articles
Follows