தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்களுக்கே பெரியளவில் பேரும் புகழும் கிடைக்கும். கிடைத்து வருகிறது. ஆனால் ஹீரோக்களை மீறி வில்லன்கள், காமெடியன்கள் என ஒரு சிலரே அந்த புகழை அடைகின்றனர்.
அதில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு பாதையை வகுத்தவர்களில் முக்கியமானர் பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா.
இவர் வில்லன் வேடங்களை தொடர்ந்து செய்து வந்தாலும் அதில் நகைச்சுவையுடன் சிந்திக்க தகுத்த கருத்துக்களை கூறி பகுத்தறிவை வளர்த்தார். மேலும் பல மேடை நாடகங்களிலும் நடித்து மக்களை கவர்ந்து வைத்திருந்தார்.
இவருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் தொழில் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் போட்டி நிலவியது.
நடிகவேள் எம்ஆர். ராதாவின் வாழ்க்கையை படமாக்கும் பேரன் ஐக்
ஒரு கட்டத்தில் நிஜ வாழ்க்கையிலேயே எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டவர் எம்.ஆர்.ராதா.
அதன்பின்னரே எம்.ஜி.ஆர் தன் குரல் வளத்தை இழந்தார். சரியாக பேச முடியாமல் வார்த்தைகளை குளறியபடியே பேசுவார். அப்படியிருந்தும் தமிழக அரசியலில் மக்களை கவர்ந்து மக்களின் முதல்வராக பதவி வகித்தார்.
எம்ஜீஆரை சுட்ட குற்றத்திற்காக எம்.ஆர்.ராதாவுக்கு சிறை தண்டனையும் கிடைத்தது.
இந்த நிலையில் எம்ஜிஆர் மற்றும் எம்ஆர். ராதா மோதலை மையப்படுத்தி வெப் சீரிஸை ஒன்றைத் தயாரிக்க போகிறாராம் எம்ஆர். ராதாவின் மகள் நடிகை ராதிகா.
எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையை மைப்படுத்தியே இந்த படம் இருக்கும் என ஒரு பிரபல தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார் ராதிகா.
இதில் எம்ஜீஆர் மற்றும் எம்ஆர். ராதா கேரக்டர்களில் நடிப்பவர்கள் யார்? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
ராதாரவி, எம்ஆர்ஆர். வாசு, ராதிகா மற்றும் நிரோஷா உள்ளிட்ட 8 பேர் எம்ஆர். ராதாவின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Raadhika plans a web series on father MR Radha’s life