புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல்படை

புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல்படை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Puducherry Rajini fans created a team for Abroad Rajini fansவெளிநாட்டு ரசிகர்களை ஒருங்கிணைக்க புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல் படை தொடங்கப்பட்டுள்ளது.

இதனை பிரான்ஸ் நாட்டு ரஜினி ரசிகர் திறந்து வைத்தார்.

இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுச்சேரியில் முதல் 3 இடம் பெறுவோருக்கு ரஜினிகாந்த் கையால் சிறப்புப் பரிசு தரவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் ரஜினி சங்கர் கூறியதாவது..

“புதுச்சேரி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பலர் பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அதில் பலரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைக்க உள்ளனர். தற்போது வெளிநாட்டிலிருந்து வந்த ரசிகர் பிரகாஷ், புதுச்சேரிக்காரர்.

அவர் இந்த ஒருங்கிணைப்புப் பணியை செய்ய உள்ளார். அதற்காக தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் பிரான்ஸ் ரசிகர் பிரகாஷ் கூறுகையில்… “வெளிநாட்டில் ரஜினி ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை ஒருங்கிணைக்கவே இம்முயற்சி.

தன் கட்சி தொண்டர்கள் இனி காவலர்கள் போல் இருக்க வேண்டும் என்று ரஜினி கூறியதால் இப்பெயரை வைத்துள்ளோம்” என கூறினார்.

Puducherry Rajini fans created a team for Abroad Rajini fans

rajini kaval padai puducherry

தில்லுக்கு துட்டு பட 2ஆம் பாகத்தை தொடங்கினார் சந்தானம்

தில்லுக்கு துட்டு பட 2ஆம் பாகத்தை தொடங்கினார் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhanams Dhillukku Dhuttu part2 shooting startsHand Made Films சந்தானம் நடித்து, தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற “ தில்லுக்கு துட்டு “திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் நாயகன் சந்தானம், நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா , ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி, இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.

Santhanams Dhillukku Dhuttu part2 shooting starts

 

 

Dhillukku Dhuttu

தமிழ் புத்தாண்டில் தடம் பதிக்க வரும் அருண்விஜய்

தமிழ் புத்தாண்டில் தடம் பதிக்க வரும் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay plans to release his Thadam movie on Tamil New Yearகுற்றம் 23 படத்தை தொடர்ந்த நடிகர் அருண்விஜய் மற்றும் தயாரிப்பாளர் இந்திரகுமார் இணைந்துள்ள திரைப்படம் தடம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படத்தில் அருண்விஜய்யுடன் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான “தடையறத் தாக்க” பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் “தடம்” படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.

படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது “தடம்” படத்தின் டப்பிங் இன்று துவங்கியது.

இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் “தடம்” தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arun Vijay plans to release his Thadam movie on Tamil New Year

விஜய்யுடன் செல்ஃபி எடுக்க ஆசையா..? அப்படின்னா இதை படிங்க

விஜய்யுடன் செல்ஃபி எடுக்க ஆசையா..? அப்படின்னா இதை படிங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SMACAR Mobile App used to take Selfie with Actor Vijayநடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் தமிழகத்தில் உள்ளனர்.

இவர்களுக்கு விஜய்யை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் அவருடன் போட்டோ அல்லது செல்ஃபி எடுக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசையாக இருக்கும்.

இவர்களின் ஆசையை ஓரளவுக்கு நிறைவேற்றி வைக்க வந்துவிட்டது புது மொபைல் ஆப்.

ஒரு ஆன்ரைடு APP ஒன்று அவரது ரசிகர் விஷால் ராகவ் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்ரைடு APP “SMACAR” என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த APP ஆன்ரைடு மொபைல்களில் PLAYSTORE இல் DOWNLOAD செய்து பயன்படுத்தலாம் .

இந்த APP இல் போட்டோ எடுத்தால் தளபதி விஜயுடன் செஃல்பி எடுப்பதுபோல் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

SMACAR Mobile App used to take Selfie with Actor Vijay

அப்புறமென்ன… விஜய்யுடன் செல்ஃபி இனி உங்க வாட்ஸ் அப் டீபியாக இருக்க போகிறதுதானே…

காவலர்களை நேரடியாக சந்திக்க திட்டம்; ரஜினியின் அடுத்த அரசியல் மூவ்

காவலர்களை நேரடியாக சந்திக்க திட்டம்; ரஜினியின் அடுத்த அரசியல் மூவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini going to meet his TN fans district wise regarding Political eventசில மாதங்களுக்கு முன் தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்தார் ரஜினிகாந்த்.

அப்போது தன் ரசிகர்களை இனி தொண்டர்கள் என அழைக்கமாட்டேன். அவர்கள் காவலர்கள் என்றார்.

இதன் முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.

எனவே தன் அரசியல் கட்சிக்கு மாவட்ட தோறும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, குமரி என சுமார் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கான மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகிகள் கூடும் ஆலோசனை கூட்டத்திற்கு தன் வாழ்த்துக்களையும் தன் அறிவுரைகளையும் வீடியோ மூலம் அனுப்பி வந்தார்.

இதனிடையில் திடீரென ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கும் வந்தார்.

இந்நிலையில் தற்போது மாவட்டம் தோறும் சென்று நிர்வாகிகளை நேரடியாக சந்திக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கான பயண திட்டம் விரைவில் மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajini going to meet his TN fans district wise regarding Political event

மனுசனா நீ பட திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் ஓனர் அரெஸ்ட்

மனுசனா நீ பட திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் ஓனர் அரெஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manusanaa Nee director Ghazali about piracy issue in Theatresகஸாலி தயாரித்து இயக்கிய மனுசனா நீ திரைப்படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தை ஒரு தியேட்டரில் திரையிடும்போது அதன் உரிமையாளரே படம் எடுத்து திருட்டு விசிடி தயாரித்துள்ளார்.

அவர் தற்போது கைது ஆகியுள்ளார். அதுபற்றி கஸாலி கூறியதாவது…

நான் ‘மனுசனா நீ’ என்ற மருத்துவத் துறை சம்பந்தமான கதையம்சமுள்ள தமிழ் திரைப்படம் எடுத்து கடந்த வாரம்,

பிப்ரவரி 16, 2018 ஆம் தேதி தமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் வெளியிட்டேன்.

வெளிநாட்டு உரிமை கொடுத்தால் இணையத்தில் வந்துவிடுகிறது என்று வெளிநாட்டு உரிமையைக் கொடுக்கவில்லை.

தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் வெளியிடவில்லை. மேலும், வேறு மொழியில் டப்பிங் செய்தும் வெளியிடவில்லை.

ஆனாலும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது. எனது பார்வைக்கு இந்தச் செய்தி வந்தவுடன், அந்த இணையத்திலிருந்து ஒரு பிரதி எடுத்து, தியேட்டருக்குப் படம் வெளியிடும் சேவை கம்பெனியான “கியூப் டிஜிட்டல் டெக்னாலஜி”க்குக் கொடுத்து FWM எனப்படும் ஃபாரன்சிக் வாட்டர்மார்க் முறையில் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி “எந்தத் திரையரங்கம், எத்தனை மணிக்கு கேமரா வைத்து பிரதி எடுக்கப்பட்டது என்று வழங்கக் கேட்டிருந்தேன். அவர்கள் முறைப்படி ஆய்வு செய்து கீழ்க்கண்ட தகவல்களைக் கொடுத்திருக்கின்றனர்:

திரையரங்கத்தின் பெயர்: முருகன் திரையரங்கம்
ஊர்: கிருஷ்ணகிரி
எடுக்கப்பட்ட நாள்: 16.02.2018
எடுக்கப்பட்ட நேரம்: மாலை 07.05.39 லிருந்து 08.57.01 வரை.

நான் கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தைத் தயாரித்து, மேலும் பல லட்சங்கள் செலவு செய்து சொந்தமாகப் படத்தை விளம்பரப்படுத்தி ரிலீஸ் செய்தேன்.

நல்லவிதமான எதிர்பார்ப்பு வந்து, படத்துக்குப் பல இடங்களிலிருந்தும் வியாபார வாய்ப்பு வந்த நேரத்தில் இவர்கள் செய்த செயலால் பெரிய அளவில் நஷ்டப்பட்டு, என்ன செய்வது என்று தெரியாத நிலையில் “அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு” – க்கு மனு கொடுத்து சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர் மற்றும் ஆப்பரேட்டர் ஆகியோர்மேல் புகார் கொடுத்தேன்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

எனக்கு இப்போது பல கோடி நஷ்டம். கேபிள் மூலமும், வெளிநாடுகளுக்கு சப்டைட்டில் போட்டு பிரித்து விற்பதன் மூலமும், பல இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடு செய்திருந்த நிலையில் எனது எல்லா முயற்சிகளும் வீணாகி, ஏறக்குறைய 5 கோடி வரை நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.

அது மட்டுமல்லாமல், ஏறக்குறைய எல்லா தமிழ் படங்களையும் சில மூன்றாம் தர சமூக விரோதிகள் தொடர்ந்து திரையங்கங்களில் படமெடுத்து இணையத்தில் வெளியிடுவதால் வருடத்துக்கு தமிழ் சினிமா மட்டும் 500 – 600 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கிறது.

இது, தயாரிப்பாளர்களைத் தெருவில் நிறுத்துவது மட்டுமல்லாமல், புதிதாய் திரைப்படம் தயாரிக்க யாரும் முன் வராத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனது இந்த முயற்சி அனைத்து தவறான திரையரங்கங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அருகிலிருக்கும் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் தியேட்டர் பைரஸி அறவே இல்லை. அந்த நிலையை நம் தமிழ் சினிமாவுக்கும் ஏற்படுத்த வேண்டும்.

ஊடக நண்பர்கள் இந்தச் செய்தியை பெரிய அளவில் வெளியிட்டு நம் தமிழ் சினிமாவுக்கு பாதுகாப்பான, சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கடிதத்துடன் கீழ்க்கண்ட நகல்களை இணைத்துள்ளேன்:

1. “கியூப்” நிறுவனத்திடமிருந்து பெற்ற திரையரங்க விபரம்
2. முருகன் திரையரங்க உரிமையாளர் மேல் போட்ட ‘முதல் தகவல் அறிக்கை’

இப்படிக்கு,

கஸாலி
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்

More Articles
Follows