தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகம் மற்றும் புதுவை மாணவர்களுக்கான +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 97.12 முதலிடம் பெற்றுள்ளது.
தமிழகளவில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே முதலிடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் சென்ற வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி 3.6 சதவீதம் குறைவு என கல்வி துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள காமராஜர் வளாகத்தில் இன்று கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அச்சமயம் புதுச்சேரி மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுதிய 14 ஆயிரத்து 571 மாணவ, மாணவிகளில்13 ஆயிரத்து 306 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதம் .
இது கடந்தாண்டை விட 1.62 சதவீதம் குறைவு. புதுச்சேரி மாநிலத்தில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப்பள்ளியில் தேர்ச்சி 3.6 சதவீதம் குறைவாக உள்ளது. அதற்க்கு காரணம் ஆசிரியர்கள் பணியமர்த்துவதில் ஏற்படும் கோளாறுகளால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இது போன்ற சில காரணங்களால் தேர்ச்சி சதவிகிதம் கடந்தாண்டை விட குறைந்துள்ளது என கல்வி துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
Puducherry Education Minister Kamalakannan upset with Plus 2 result 2020