+2 ரிசல்ட் தனியார் பள்ளிகள் செஞ்சுரி; அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதம் குறைவு; கல்வி அமைச்சர் கவலை

+2 ரிசல்ட் தனியார் பள்ளிகள் செஞ்சுரி; அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதம் குறைவு; கல்வி அமைச்சர் கவலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Puducherry Education Minister Kamalakannan upset with Plus 2 result 2020தமிழகம் மற்றும் புதுவை மாணவர்களுக்கான +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 97.12 முதலிடம் பெற்றுள்ளது.

தமிழகளவில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே முதலிடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் சென்ற வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி 3.6 சதவீதம் குறைவு என கல்வி துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள காமராஜர் வளாகத்தில் இன்று கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அச்சமயம் புதுச்சேரி மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுதிய 14 ஆயிரத்து 571 மாணவ, மாணவிகளில்13 ஆயிரத்து 306 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதம் .

இது கடந்தாண்டை விட 1.62 சதவீதம் குறைவு. புதுச்சேரி மாநிலத்தில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப்பள்ளியில் தேர்ச்சி 3.6 சதவீதம் குறைவாக உள்ளது. அதற்க்கு காரணம் ஆசிரியர்கள் பணியமர்த்துவதில் ஏற்படும் கோளாறுகளால் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இது போன்ற சில காரணங்களால் தேர்ச்சி சதவிகிதம் கடந்தாண்டை விட குறைந்துள்ளது என கல்வி துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

Puducherry Education Minister Kamalakannan upset with Plus 2 result 2020

மீண்டும் இணையும் பகத் பாசில் & தியாகராஜன் குமாரராஜா

மீண்டும் இணையும் பகத் பாசில் & தியாகராஜன் குமாரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thiagarajan Kumararaja to team up with Fahadh Fassil againஆரண்ய காண்டம் என்ற படத்தை இயக்கி கோலிவுட்டில் கவனம் பெற்றவர் தியாகராஜன் குமாரராஜா. இந்த படம் 2011ல் ரிலீசானது.

அதன் பின்னர் எட்டு வருட இடைவெளிக்கு பின்னர் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தை இயக்கி 2019ல் வெளியிட்டார்.

இதில் சமந்தா, விஜய் சேதுபதி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதன்பின்னர் அவரது அடுத்த படத்திற்கு எத்தனை வருடம் ஆகுமோ? என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் ஃபகத் பாசில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் கண்டிப்பாக தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படத்தில் நடிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் படம் குறித்த தகவல்கள் வேறெதும் இல்லை.

Thiagarajan Kumararaja to team up with Fahadh Fassil again

லவ் ஸ்டோரி-க்காக டான்ஸ் மாஸ்டராகும் மலர் டீச்சர்

லவ் ஸ்டோரி-க்காக டான்ஸ் மாஸ்டராகும் மலர் டீச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malar Teacher Sai Pallavi turns choreographer for Love Storyலவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.

இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

விரைவில் சினிமா படப்பிடிப்புக்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் சூட்டிங் நடத்த தயாராகி வருகிறது படக்குழு.

இந்த நிலையில் லவ் ஸ்டோரி படத்தில் படமாக்கப்பட உள்ள ஒரு பாடலுக்கு சாய் பல்லவி நடனம் அமைத்து தரவுள்ளதாக கூறப்படுகிறது.

உங்களில் யார் அடுத்த பிரபு தேவா உள்ளிட்ட டிவி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் தான் இந்த சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு அதிரடி நடனம் போட்டு ரசிகர்கள் கவர்ந்துள்ளார்.

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக ரசிகர்கள் வசப்படுத்திய சாய் பல்லவி டான்ஸ் மாஸ்டராக ரசிகர்களை நிச்சயம் ஈர்ப்பார் என நம்புவோம்.

Malar Teacher Sai Pallavi turns choreographer for Love Story

காடுவெட்டி குரு-வின் வாழ்க்கை சினிமாவாகிறது..; இவர்தான் ஹீரோ!

காடுவெட்டி குரு-வின் வாழ்க்கை சினிமாவாகிறது..; இவர்தான் ஹீரோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh will be lead in Kaaduvetti Guru biopicபிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படமாக்குவது வழக்கமான ஒன்று தான்.

ஆனால் இது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு… தி ஐயன் லேடி, குயின் மற்றும் ‘தலைவி’ ஆகிய பெயர்களில் படமாகிறது.

இதில் கௌதம் மேனன் இயக்கிய குயின் வெப் சீரிஸ் ரிலீசாகிவிட்டது.

அதுபோல் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கிரிக்கெட் வீரர் எம்எஸ். தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களும் வெளியாகியது.

இந்த நிலையில் மறைந்த பாமக சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் வாழ்க்கையும் சினிமாவாகிறதாம்.

இதில் காடுவெட்டி குரு கேரக்டரில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்க, சாதிக் இசையமைக்கிறார்.

RK Suresh will be lead in Kaaduvetti Guru biopic

மணிரத்னத்துடன் 9 டாப் ஹீரோக்கள் 9 இயக்குனர்கள் இணையும் ‘நவரசா’

மணிரத்னத்துடன் 9 டாப் ஹீரோக்கள் 9 இயக்குனர்கள் இணையும் ‘நவரசா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maniratnam Suriya Vijay Sethupathi GV Prakash to team up for Web Seriesகொரோனா லாக் டவுன் முடிந்து பல தொழிலுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டி இருந்தாலும் சினிமா சூட்டிங் மற்றும் தியேட்டர்களுக்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை.

இதனையடுத்து முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் கவனம் ஓடிடி தளத்திற்கும் வெப் சீரிஸ் பக்கத்திற்கும் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் பிரம்மாண்டமான முறையில் 9 நடிகர்களை வைத்து 9 இயக்குநர்கள் வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவிருக்கிறார்களாம்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்க உள்ள இந்த வெப் சீரிஸை 9 பிரபல இயக்குநர்கள் இயக்க உள்ளனர்.

கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி, கெளதம் மேனன், கார்த்திக் நரேன், சித்தார்த், சுதா கொங்கரா, ஜெயந்திரா ஆகியோர் இயக்கவுள்ளனர்.

தயாரிப்பாளர் மணிரத்னமும் ஒரு எபிசோட்டை இயக்க உள்ளாராம்.

முன்னணி ஹீரோக்கள் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

‘180’ படத்தை இயக்கிய ஜெயந்திரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

அரவிந்த்சாமி இயக்க உள்ள தொடரில் சித்தார்த் நடிக்கிறார்.

தமிழில் விக்ரமை வைத்து ‘டேவிட்’, துல்கர் சல்மானை வைத்து ‘சோலோ’ படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் விஜய் சேதுபதியை இயக்க உள்ளார்.

‘சூரரைப் போற்று’ புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளார்.

மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த தொடர்களை அமேசான் பிரைமில் வெளியிடவுள்ளார் மணிரத்னம்.

Maniratnam Suriya Vijay Sethupathi GV Prakash to team up for Web Series

பிரச்சினைக்கு தீ மூட்டுவதில் உள் நோக்கம்; கந்த சஷ்டி கவசம் விவகாரம் பற்றி ராஜ்கிரண்

பிரச்சினைக்கு தீ மூட்டுவதில் உள் நோக்கம்; கந்த சஷ்டி கவசம் விவகாரம் பற்றி ராஜ்கிரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajkiran talks about Kanda Shashti Kavacham controversyகடந்த சில நாட்களாகவே கந்தர் சஷ்டி கவசம் பற்றிய சர்ச்சை வீடியோவை பாத்திருப்போம். அதற்கு ஆதரவும் முக்கியமாக பலத்த எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகரும் இயக்குனருமான ராஜ்கிரண் தெரிவித்துள்ளதாவது…

ஒவ்வொரு மனிதனுக்கும்,
எந்த வகையிலேனும்,
தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள
உரிமை இருக்கிறது.

அது, அவனது சுதந்திரம்.

முருகப்பெருமானை நம்புவோர்க்கு,
“கந்தர் சஷ்டி கவசம்” என்பது,
“ஒரு பாதுகாப்பு அரண்”.

இதை ஆழ்ந்து படித்தால்,
அறிவியல்பூர்வமான,
மனோதத்துவரீதியான
ஆத்ம பலன்கள் இருக்கின்றன…

இறைவனை நம்பாதோர்க்கு,
“நம்பாமை” என்பது,
அவர்களின் சுதந்திரம்.

நம்பிக்கை கொண்டோர்க்கு,
“நம்புதல்” என்பது,
அவர்களின் சுதந்திரம்.

இதில், அவரவர் எல்லையோடு
அவரவர்கள் நின்று கொள்வது தான்,
மேன்மையானது.

தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்
புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
மிகவும் கீழ்மையானது…

இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில்,
நோயோடும், நோய் பயத்தோடும்,
பொருளாதார சீர்கேட்டோடும்,
உண்ண உணவின்றி
கோடிக்கணக்கான நம் மக்கள்
தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,

இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில்,
யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம்
இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.

என ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

Rajkiran talks about Kanda Shashti Kavacham controversy

More Articles
Follows