‘ஜீரக பிரியாணியை.. விருந்தாக்கி ‘புதுப்புது சுகம்’ தேடும் கவிஞர் ஜெகன் கவிராஜ்

‘ஜீரக பிரியாணியை.. விருந்தாக்கி ‘புதுப்புது சுகம்’ தேடும் கவிஞர் ஜெகன் கவிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூம்புகார், பந்தபாசம், படித்தால் மட்டும் போதுமா உள்ளிட்ட படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் பழம்பெரும் கவிஞர் மறைந்த மாயவநாதன்.

அதே ஊரைச் சேர்ந்த கவிஞர் ஜெகன் கவிராஜ் என்பவரும் பாடலாசிரியராக களமிறங்கியுள்ளார்.

பிரபு ஜெயராம் இயக்கத்தில் 2021ல் வெளியான ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் ஜீரக பிரியாணி” பாடலை எழுதியிருந்தார் ஜெகன் கவிராஜ்.

இந்த படத்திற்கு குணா இசையமைத்து இருந்தார்.

அந்த பாடல் ரசிகர்களையும் முக்கியமாக பிரியாணி காதலர்களையும் கவர்ந்தது.

இந்த நிலையில் தற்போது ‘வெப்’ என்ற திரைப்படத்தில் ஓர் பாடலை எழுதி இருக்கிறார் ஜெகன்.

புது புது சுகம்… என்ற அந்த பாடல் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இயக்குநர் ஹாருன் இயக்கிய இந்த படத்தில் நட்ராஜ் & ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளனர்.

இதுகுறித்து ஜெகன் கூறியதாவது..

அய்யா இளையராஜாவின் முதல் ராஜாவான கார்த்திக் ராஜா அவர்கள் இசையில் அண்ணன் நட்டி நடித்துள்ள *Web* படத்தில் எழுதியிருக்கிறேன். பாடிய ஸ்வேதா மோகன் அவர்களுக்கும் அழகாக நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர் அவர்களுக்கும் நன்றி! வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹாருன் சாருக்கும், வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் Ksk செல்வா அவர்களுக்கு அன்பும் நன்றியும்❤️🙏

பாடல் லிங்:

வெப்

Pudhu Pudhu Sugam Song writeing Lyricist Jegan Kaviraj

விபத்து வழக்கு.. நீதிமன்ற அவமதிப்பு.; யாஷிகாவை கைது செய்ய ரெடியாகும் போலீஸ்

விபத்து வழக்கு.. நீதிமன்ற அவமதிப்பு.; யாஷிகாவை கைது செய்ய ரெடியாகும் போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஜாம்பி’ மற்றும் ‘கடமையைச் செய்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இவர் கடைசியாக பிரபுதேவாவின் ‘பாகீரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரைகளில் காணப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், யாஷிகா ஆனந்த் புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் போது மகாபலிபுரத்தில் விபத்துக்குள்ளானதில் அவரது தோழி வள்ளிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், மகாபலிபுரம் விபத்து வழக்கில் யாஷிகா ஆனந்துக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

யாஷிகா ஆனந்த் மீதான விபத்து வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இம்மாதம் 21ஆம் தேதி யாஷிகாவை நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

யாஷிகா ஆனந்த் ஆஜராகாததை அடுத்து, நடிகைக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஏப்ரல் 25ம் தேதி யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், அவரை போலீசார் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Court issues a warrant against Yashika Anand

பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ்.; சுசீந்திரன் – ஜிவி. பிரகாஷ் கூட்டணி

பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ்.; சுசீந்திரன் – ஜிவி. பிரகாஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையம் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள்.

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ள மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது அதனையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார்.

இப்படம் அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் ஜி வி பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Manoj to direct Bharathiraja to be produced by Suseeenthiran

IPL தீம் – வாரணம் ஆயிரம் – துப்பாக்கி கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் மரணம்

IPL தீம் – வாரணம் ஆயிரம் – துப்பாக்கி கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கிட்டார் வாசித்த பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ்.

2008 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த ‘பீமா’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கிடாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு கௌதம் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் கிடாரிஸ்டாக பணியாற்றினார்.

விஸ்வரூபம், துப்பாக்கி, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், டி இமான் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

இவர் கடந்த 2015- வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இவர் கடந்த சில மாதங்களாக மூளைக் கட்டியால் மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில், நேற்று இரவு கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Guitarist Steeve Vatz passes away

லைக்கா தயாரிப்பில் 2 ஹீரோயினுடன் ‘தீராக் காதல்’ செய்யும் ஜெய்

லைக்கா தயாரிப்பில் 2 ஹீரோயினுடன் ‘தீராக் காதல்’ செய்யும் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’.

இந்தப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார்.

தீராக் காதல்

கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்க,ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் தலைப்பும், தோற்றமும், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதனிடையே தமிழகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’, ‘தலைவர் 170’ என பிரம்மாண்ட பொருட் செலவில் திரைப்படங்கள் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தீராக் காதல்

Theera Kaadhal movie first look released of lyca

பொன்னியின் செல்வன் 2 டிரைலர் அப்டேட்டை வெளியிட்ட லைக்கா

பொன்னியின் செல்வன் 2 டிரைலர் அப்டேட்டை வெளியிட்ட லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன் 2’ இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. சமீபத்தில் ‘அக நக’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் மார்ச் 29-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. டிரெய்லரின் நேரம் சுமார் 3 நிமிடங்கள் மற்றும் 25 வினாடிகள் என்று கூறப்படுகிறது.

Mani Ratnam’s ‘Ponniyin Selvan 2’ trailer to arrive on this date?

More Articles
Follows