தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்கி தயாரித்து இருந்தார் மணிரத்னம்.
இதில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, காளிதாஸ் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லைகா புரொட்க்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
கடந்த மாதம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் முதல் பாகம் வெளியானது.
இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களும் பலத்த எதிர்பார்ப்பும் இருந்ததால் முதல் நாளிலேயே ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.
இரண்டு நாட்களிலேயே 100 கோடியை தாண்டியது இந்த படம்
முதல் வார முடிவில் ரூ.309 கோடியை வசூலித்தது.
மேலும் தற்போது 10 நாட்களை நெருங்கிய நிலையில் உலகம் முழுக்க ரூ.350.80 கோடியை PS1 வசூலித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கும்பகோணத்தில், ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களின் வேடமணிந்த ரசிகர்கள் திரையரங்கில் படம் பார்த்தனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.