தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக விஷால் நடத்தினார்.
இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
மேலும் மலையாள, தெலுங்கு, கன்னட, ஹிந்தி திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், கே.ராஜன், எஸ்.வி.சேகர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அவர்கள் கூறியதாவது:
இளையராஜா 75 நிகழ்ச்சியில் பல முறைகேடுகள் நடந்துள்ளன.
அவருக்கு பாராட்டு விழா என்றால் விருது கொடுத்து இருக்கலாம். ஆனால் 3½ கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளனர்.
தயாரிப்பாளர்கள் இளையராஜாவுக்கு சம்பளம் கொடுத்துள்ளனர்.
அவர்தான் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை செய்திருக்க வேண்டுமே தவிர, அந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே மூன்றரை கோடி வாங்கியுள்ளார்.
மேலும் விஷாலுக்கு நெருக்கமான நண்பர்கள் நடிகர்கள் நந்தா, ரமணா மீதும் குற்றம் சாட்டியுள்ளனர்.
நடிகர் ரமணா மூன்றரை கோடி கான்ட்ராக்ட் எடுத்து விழா மேடைகளை அமைத்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.
எத்தனையோ தயாரிப்பாளர்களின் பணம் அது. அந்தப் பணத்தை முறைகேடாகச் செலவு செய்வது என்பது திருட்டுக்குச் சமமான விஷயம். அதை தான் விஷால் செய்துள்ளார்.” என்றும் எதிரணியினர் விஷால் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
Producers S V Sekar JSK K Rajan slams Vishal and Ilayaraja 75 show