பணம் இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ வழி சொல்லும் திருப்பதிசாமி குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம்.G , ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா இணைந்து வழங்கும் படம் “திருப்பதிசாமி குடும்பம்“

இந்த படத்தில் ஜே.கே, ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறியதாவது…

ஒரு குடும்பத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை இது. நிறைய பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கை நிம்மதியா வாழலாம் என்று நினைகிறார்கள். அனால் பணம் இல்லா விட்டாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய கதை.

அப்படி வாழும் ஒரு குடும்பத்திற்கு சில சமூக விரோதிகளால் நிறைய பிரச்னைகள் உருவாகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் புத்திசாலி தனமாக பிரச்னைகளை சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை.

காக்கா முட்டை, பசங்க, கோலிசோடா வரிசையில் திருப்பதி சாமி குடும்பமும் வெற்றி பெற்று பாராட்டை பெரும் என்று நம்பிக்கையுடம் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் பாபுராஜா.

படம் இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

ஒளிப்பதிவு – Y.M.முரளி / இசை – சாம் டி.ராஜ்

எடிட்டிங் – ராஜா முகமது / நடனம் – தினேஷ், ஹபீப் / ஸ்டன்ட் – பயர் கார்த்திக்

இணை தயாரிப்பு – திருப்பூர் K L K.மோகன்

தயாரிப்பு – பாபுராஜா, B.ஜாஃபர் அஷ்ரப்

இயக்கம் – சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செயல் பட ஹீரோவின் அடுத்த படம் குமாரு வேலைக்கு போறான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர் ரவி.

இவர் பல வருடங்கள் இடைவேளைக்கு பின்னர் 2வது இயக்கியுள்ள படம் செயல்.

இப்படம் நாளை மே 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதில் நாயகனாக ராஜன் தேஜேஸ்வர் என்பவர் அறிமுகம் ஆகிறார். இவரின் தந்தை சி.ஆர்.ராஜன் தான் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் வருவதற்குள் அடுத்த படத்திலும் கமிட்டாகிவிட்டார் இந்த நாயகன்.

இந்த படத்தையும் அவரது தந்தையே தயாரிக்கிறாராம்.

சமுத்திரகனியின் உதவியாளர் சாய் சங்கர் இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘குமாரு வேலைக்கு போறான்’ என தலைப்பிட்டுள்ளனர்.

தனுஷ் படத்தில் பாட்ஷா ஸ்டைலில் அசத்தும் சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் `மாரி-2′

இப்படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் கிருஷ்ணா, வரலட்சுமி, டோவினோ தாமஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம்.

அதற்காக சில நாட்கள் ஆட்டோ ஓட்டி சிறப்பு பயிற்சியும் எடுத்து இருக்கிறார் சாய்பல்லவி.

ஜூலை மாதத்திற்குள் சூட்டிங்கை முடித்து நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆட்டோ டிரைவர் என்றாலே ரஜினியின் பாட்ஷா படம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இனி சாய் பல்லவியும் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகையர் திலகம் படத்தை எதிர்க்கும் ஜெமினிகணேசனின் முதல் மனைவி குடும்பத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை படமான ‘நடிகையர் திலகம்’ என்ற படம் அண்மையில் வெளியானது.

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ்ம், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் சாவித்ரிக்கு ஜெமினி கணேசன் திடீர் தாலி கட்டுவது, சாவித்ரிக்கு அதிக படங்கள் குவிந்ததால் ஜெமினி கணேசனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு குடிக்க தொடங்குவது உள்ளிட்ட காட்சிகள் உள்ளன.

மேலும் சாவித்ரியையும் மது குடிக்கும்படி தூண்டி அவரையும் குடிகாரர் ஆக்குவது போன்றும் கிட்டதட்ட ஜெமினியை வில்ல்ன் போல சித்தரித்து இருந்தனர்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை இப்படம் பெற்றாலும் ஜெமினி கணேசனின் குடும்பத்தாரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

அவர் கூறும்போது, “சாவித்ரிக்கு அப்பாதான் மது குடிக்க கற்றுக்கொடுத்தார் என்று படத்தில் காட்சி வைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டேன்.

அவரால் எந்த பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தன்னை விரும்பிய பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த எதிர்ப்பு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ராஜன் தேஜேஸ்வருடன் இணைந்த விஜய்யின் ஷாஜகான் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘செயல்’ படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தாக வேண்டும் என்கிற வெறியோடு களத்தில் குதித்திருக்கிறார்.

இது இவருக்கு முதல் படம் என்றாலும் அடுத்தடுத்து படங்கள் செய்யவிருக்கும் எதிர்காலத் திட்டத்தோடு இருக்கிறார்.

செயல் படத்தை C.R. கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நிர்மலா ராஜன் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.

மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், தீனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகியிருக்கிறார்.

ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், நடனம் – பாபா பாஸ்கர், ஜானி, கலை – ஜான் பிரிட்டோ, தயாரிப்பு நிர்வாகம் – ஏ.பி.ரவி, தயாரிப்பு – C.R.ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர்.

தன்னுடைய சினிமா பிரவேசம் பற்றி புதுமுக நடிகர் ராஜன் தேஜேஸ்வர் பேசும்போது,

“எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது.

அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாகவே மாறிவிட்டது. சினிமாவைத் தவிர வேறு எந்தத் துறையையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

சினிமாவில் நடிக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்கிற ஒரே திட்டத்தோடு இருந்தேன்.

அந்த நேரத்தில்தான் இயக்குநர் ரவி அப்புலுவை சந்தித்தேன். எனது லட்சியத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த அவர் எனக்காகவே உருவாக்கப்பட்டதை போன்ற ஒரு கதையை சொன்னார்.

எனக்கு எந்த மாதிரியான கதையில் நடிக்கனும்னு ஆர்வம் இருந்ததோ, அதற்கு ஏற்ற மாதிரியான கதையாக அது இருந்ததால் எனது முதல் படமாக அதையே தீர்மானித்து ஓ.கே. சொன்னேன். அதுதான் இந்த ‘செயல்’ திரைப்படம்.

விஜய்யை வைத்து ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி அப்புலு 14 வருடங்களுக்குப் பிறகு அடுத்ததாக இயக்குகிற இந்த இரண்டாவது படத்தில் நான் நடிக்கும் பாக்யம் கிடைத்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

அப்படியும் அந்தக் கதைக்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே ‘செயல்’ படத்தைத் தயாரிக்க முன் வந்தார். அப்படி ஆரம்பித்த ‘செயல்’ படம் மே 18-ம் தேதி வெளியாக உள்ளது.

முதல் படத்திலேயே பக்காவான கமர்ஷியல் கதை எனக்குக் கிடைச்சிருக்கு. இந்த படத்தில் எனக்கு ஆக்‌ஷன் இருக்கு. காமெடி இருக்கு. காதலும் இருக்கு. யானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண சராசரியான ஒருவன் மோதி சாய்ப்பதுதான் கதை.” என்றார் ராஜன் தேஜேஸ்வர்.

Rajan Tejaswar teams up with Shajahan director for Seyal movie

சூர்யாவுடன் ஜோடி போடும் கார்த்தி-விஜய் சேதுபதி பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் 37வது படத்தையும் இயக்குகிறார் கே.வி.ஆனந்த்.

முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சூர்யா ஜோடியாக சாயிஷா சாய்கல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர் தற்போது ஆர்யாவுடன் கஜினிகாந்த், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதியுடன் ஜூங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sayesha Saigal romance with Suriyas 37th movie

More Articles
Follows