மிக மிக அவசரம்… தமிழ் சினிமா பார்த்திராத கதை! – சுரேஷ் காமாட்சி

மிக மிக அவசரம்… தமிழ் சினிமா பார்த்திராத கதை! – சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Kamatchiதமிழ் சினிமாவின் இன்றைய பரபரப்பு நாயகன். குறிப்பாக தயாரிப்பாளர்கள் – நடிகர்கள் மத்தியில் சுரேஷ் காமாட்சி பெயருக்கு தனி கவனம் உண்டு.

அமைதிப்படை 2, கங்காரு என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார்.

அவர் முதல் முறையாக இயக்கும் படத்துக்கு மிக மிக அவசரம் என தலைப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு பிரச்சினையை இந்தப் படத்தில் முன்வைத்திருப்பதாகச் சொல்கிறார் சுரேஷ் காமாட்சி.

இயக்குநர் சுரேஷ் காமாட்சியுடன் ஒரு நேர்காணல்…

தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியது ஏன்?

முதலில் நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் இருந்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும் கூட. அமரர் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படைக்கு தயாரிப்பாளரானேன். கங்காரு படத்துக்குப் பிறகு புதிய படம் செய்ய கதைகளை யோசித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஜெகன் சொன்ன இந்தக் கதை கவனத்தை ஈர்த்தது. அதைத்தான் மிக மிக அவசரம் எனப் படமாக்கியுள்ளேன்.

அப்படி என்ன கதை இது?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகளிர் போலீசாரின் பாதுகாப்புக்காக எத்தனையே ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் உண்மையில் அதற்கு நேர்மாறான விஷயங்கள்தான் நடக்கின்றன. அதை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

மிக உணர்வுப்பூர்வமான கதை. திரையில் வரும்போது அதிர்வுகளை ஏற்படுத்தும்.

நடிகர் நடிகைகள்…

இந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களில் நடித்த ஸ்ரீஜா (ஸ்ரீபிரியங்கா) நாயகியாக நடித்துள்ளார்.

கோரிப்பாளையம் ஹரீஷ், வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணன் சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்ததா.. ஏதேனும் சுவாரஸ்ய நிகழ்வுகள்?

99 சதவீதம் முடிந்துவிட்டது. இந்தப் படம் முழுவதுமே பவானிக்குப் பக்கத்தில் உள்ள கோனேரிப்பட்டி அணையில்தான் நடந்தது. பாக்யராஜ் சார் பவுனு பவுனுதான் படத்தை இங்குதான் எடுத்திருந்தார்.

அதன் பிறகு 25 ஆண்டுகள் வேறு படங்களுக்கு அங்கே அனுமதி தரவில்லை. போராடி நாங்கள் அனுமதி வாங்கி படமாக்கினோம். அந்த அணையும் ஒரு பாத்திரமாகவே வருகிறது இந்தப் படத்தில். படப்பிடிப்பின்போது அந்தப் பகுதி மக்கள் தந்த அபார ஒத்துழைப்பை மறக்க மாட்டேன்.

ஒரு இயக்குநராக உங்கள் அனுபவம் எப்படி?

எனக்கு திரை இயக்கம் புதிதில்லை. இயக்கம் – சுரேஷ் காமாட்சி என போட்டுக் கொள்வது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். என் திரைப் பயணம் சினிமா இயக்கத்துடன் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. படத்தின் கதை வசனத்தை ஜெகன் எழுதியுள்ளார் (புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை இயக்குநர்).
திரைக்கதை எழுதி இயக்கியுள்ளேன். நல்ல ஆர்டிஸ்டுகள் அமைந்துவிட்டார்கள். ஸ்ரீஜாவுக்கு இந்தப் படம் வேறு ஒரு தளத்தை உருவாக்கித் தரும் என நம்பலாம்.

வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த் என எல்லோருமே பிரமாதமான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். என் வேலையைச் சுலபமாக்கியிருக்கிறார்கள்.

முதல் படமே ஹீரோயினை மையப்படுத்தி உருவாக்கியது ஏன்?

பெண்களை மையப்படுத்தி என்பதை தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. நம்மை இயக்கும் அச்சே பெண்தான். அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட, அவர்களுக்கு எதிரான சீண்டல்கள், தொல்லைகள் ஓய்வதில்லை. அதை என் முதல் படத்திலேயே சொல்ல முயற்சித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றுதானே…

நீங்க எப்போ ஹீரோவாக களமிறங்கப் போறீங்க…?

அது அமைகிற வாய்ப்புகளைப் பொறுத்தது!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பரபரப்பு… நடிகர் சங்க பஞ்சாயத்து என ஒன்றையும் விட்டு வைக்க மாட்டேன் என்கிறீர்கள்.. இயக்க எப்படி நேரம் கிடைத்தது?

நானாக வலிந்து போய் எந்தப் பிரச்சினையையும் இழுப்பதில்லை. நான் வளர்ந்த, இருக்கிற சூழல் திரைத்துறையில் நடக்கிற கூத்துக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க விடவில்லை.

நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் திரைத்துறையில் சிஸ்டம் சரியாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முயற்சிக்கிறேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது வெறும் பரபரப்பாகத் தெரியும். உள்ளே இருப்பவர்களுக்கு என்னைப் புரியும்.

அதனால்தான் விஷயமறிந்த அத்தனைப் பேரும் என்னை ஆதரிக்கிறார்கள். இதுவே என் முழு நேர வேலையில்லை. பட இயக்கம், தயாரிப்புதான் பிரதானம். அதனால் நேரம் ஒரு பிரச்சினையில்லை.

‘நடிகைகளுக்கு புதிய சங்கம்…’ வரலட்சுமி சரத்குமார் அதிரடி

‘நடிகைகளுக்கு புதிய சங்கம்…’ வரலட்சுமி சரத்குமார் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi Sarathkumarநடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் தொல்லை செய்யப்பட்டது தொடர்பாக அந்த குற்றவாளிகளை கேரளா போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து நடிகை காதல் சந்தியாவும் தனக்கு இப்பிரச்சினை இருந்தது என பேட்டியளித்தார்.

இதனிடையில் பாவனாவுக்கு ஆதரவாக தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அதில் கடுமையாக சாடியிருந்தார்.

varu sarathkumar‏Verified account @varusarath Feb 19
What the hell is going on??!!! #WomenSafety has become a joke.. hang those bloody b@st@rds.. strength to #bhavna … they will be punished

இதனைத் தொடர்ந்து தற்போது பெண்களுக்காகவும் நடிகைகளுக்காகவும் ஒரு சங்கம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

வருகிற மார்ச் 8ஆம் தேதி இந்த சங்கம் தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அன்றைய தினத்தில், Save Sakthi என்ற பெயரில் திட்டத்தை தொடங்கி அன்றைய நாள் முழுவதும் தனக்கு ஆதரவளிப்பவர்கள் கையெழுத்து வாங்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

Varalakshmi Sarathkumar going to start Actress Association on Womens day

ஓரிரு தினங்களுக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு குறித்து தன் ட்விட்டரில் வரலட்சுமி பதிவிட்ட கடிதம் இதோ…

varu letter

 

 

விவசாயிகளுக்காக குரல் கொடுக்க நெடுவாசல் செல்லும் விஷால்

விவசாயிகளுக்காக குரல் கொடுக்க நெடுவாசல் செல்லும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishalதமிழகம் என்ன பாவம் செய்தததோ? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சினைகளாக சந்தித்துக் கொண்டே இருக்கிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை தமிழகம் பரபரப்பாக இருக்கிறது.

தற்போது ஹைட்ரோகார்பன் என்னும் மீத்தேன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இதற்கு ஆதரவளிக்க இன்று நெடுவாசல் சென்று விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவிருக்கிறார் விஷால்.

இதனை நேற்று நடைபெற்ற ‘ஒரு கனவு போல’ இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

அப்போது பேசியபோது, அரசியல்வாதிகளுக்கு நான் இதை முக்கிய வேண்டுகோளாக முன்வைக்கிறேன். ‘விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள். எனவும் தெரிவித்தார்.

இவருடன் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் பேரரசு ஆகியோரும் செல்லக்கூடும் எனத் தெரிகிறது.

Vishal going to Neduvasal to support Tamilnadu farmers in HydroCarbon issue

மார்ச் 3ல்… தமிழர்களுக்கு ரஜினியும் கன்னடர்களுக்கு அஜித்தும் விருந்து

மார்ச் 3ல்… தமிழர்களுக்கு ரஜினியும் கன்னடர்களுக்கு அஜித்தும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Ajithதிரையுலகில் ரஜினி மற்றும் அஜித் படங்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு எப்போதும் இருந்து வருகிறது.

இந்நிலையில் கிட்டதட்ட 22 வருடங்களுக்கு பிறகு, ரஜினியின் பாட்ஷா தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி ரீரிலீஸ் ஆகிறது.

அதுபோல் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் கன்னட டப்பிங் வருகிற மார்ச் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கௌதம் மேனன் இயக்கிய இப்படம் கன்னடத்தில் சத்யதேவ் ஐபிஎஸ் என்ற பெயரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் தமிழக மற்றும் கன்னட ரசிகர்கள், தங்கள் அபிமான நடிகர்களின் பட ரிலீசை கொண்டாட இருக்கிறார்கள்.

Rajini and Ajith movies release treat on 3rd March 2017

baasha rajini ajith

 

ரஜினி பாராட்டு; எமன் வசூல்… விஜய் ஆண்டனி மகிழ்ச்சி

ரஜினி பாராட்டு; எமன் வசூல்… விஜய் ஆண்டனி மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and vijay antonyபிச்சைக்காரன், சைத்தான் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான எமன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

முற்றிலும் அரசியல் விருந்தான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் ஒரு கோடி வசூலை கடந்துள்ள இப்படம் தமிழகத்தில் மூன்றே நாட்களில் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

‘எமன்’ படத்தின் வரவேற்பை அறிந்த ரஜினி படத்தை பார்த்தாராம்.

அவரும் படக்குழுவினருக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் வசூல் வேட்டை மற்றொரு பக்கம் ரஜினியின் பாராட்டு என இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம் விஜய் ஆண்டனி.

சாந்தனுவின் ‘முப்பரிமாணம்’ படத்தை பார்த்த சுசீந்திரன் கடிதம்

சாந்தனுவின் ‘முப்பரிமாணம்’ படத்தை பார்த்த சுசீந்திரன் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

_Suseenthiranசாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடித்துள்ள படம் முப்பரிமாணம்.

அதிரூபன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

வருகிற மார்ச் 3ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளனர்.

அப்படத்தை பார்த்த இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளதாவது…

படத்தின் இடைவேளை வரை இதுவும் பொழுதுபோக்கு படம்தான் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் இடைவேளைக்கு பிறகு இப்படம் முற்றிலும் வேறு ஒரு கதைகளத்தில் இருந்தது.

சாந்தனு மற்றும் ஸ்ருஷ்டியின் நடிப்பு அருமை என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

Suseenthiran letter about Shanthanus Mupparimanam movie

அந்த கடிதம்…

susee letter

More Articles
Follows