அடுக்கடுக்கான புகார்களை கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து பி.எல்.தேனப்பன் விலகல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விலகியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விஷாலுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

நான் இதுவரை தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக ஒரு முறையும், துணைத் தலைவராக ஒரு முறையும், பல முறை செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளேன்.

இப்பொழுது இருக்கும் நிர்வாகத்தில் எதிர்க்கட்சி அணியிலிருந்து செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சில உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

இதுவரை என்னால் முடிந்த அளவிற்கு இந்த நிர்வாகத்திற்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்கத் தவறியதில்லை.

இப்போது நான் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்குழு உறுப்பினராகத் தொடர விரும்பாததால் அப்பதவியை ராஜினாமா செய்ய முடி வெடுத்துள்ளேன்.

முதலில் தி.நகர் அலுவலகம் தனியாக அமைக்கப்பட்டு அதற்கு தனியாக ஊழியர்களை நியமித்து பெரும் பண விரயம் செய்யப்படுவதில் எனக்கு உடன் பாடில்லை.

சில மூத்த வயதான தயாரிப்பாளர்களுக்கான பென்சன் பணத்தை தராமல் நிறுத்தி அவர்களை கஷ்டப்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது சிலருக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாததில் எனக்கு உடன்பாடில்லை.

செயற்குழுவின் ஒப்புதல் இல்லாமலேயே இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகை 4 லட்சத்திலிருந்து 2 லட்சமாக குறைக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை.

வேலை நிறுத்தம் எந்தக் காரணத்திற்காக நடத்தப்பட்டதோ அவை நிறைவேறாமலேயே வேலை நிறுத்தம் தன்னிச்சையாக வாபஸ் பெறப்பட்டு 48 நாட்கள் தேவையில்லாமல் தயாரிப்பாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டது.

வேலை நிறுத்தத்தினால் கியூப் கட்டணம் குறைக்கப்பட்டதாக சொன்னாலும் முன்பு இருந்த கட்டண முறையை மாற்றி வாரம் ரூ.5000 முறையில் வசூலிக்கப்படுகிறது.

4 வாரங்கள் ஓடும் படங்களுக்கு மொத்த கட்டண அடிப்படையில் கணக்கிடும் பொழுது, இவை முன்பு இருந்த கட்டணத்தை விடவும் அதிகம்.

நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த மூத்தத் தயாரிப்பாளர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுவதால் எனக்கு ஓட்டளித்த தயாரிப்பாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த நிர்வாகத்தின் அங்கமாக நான் தொடர விரும்பவில்லை.

எனவே என் செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Producer PL Thenappan resigned his post from Producer Council

தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விக்ரம் படக்குழுவினர் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் `சாமி ஸ்கொயர்’.

இதன் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எனவே இன்று மே 26ஆம் தேதி படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்திருந்தனர்.

ஆனால், தற்போது டிரைலர் வெளியிட்டை மாற்றி இருப்பதாக தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதால், இது கொண்டாடுவதற்கான நேரம் இல்லை என டிரைலர் வெளியீட்டி தள்ளி வைத்திருப்பதாகவும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் சாமி ஸ்கொயர் பட டிரைலரின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Saamy square team postponed their Trailer release due to Tuticorin sterlite issue

ஆந்திர அரசுக்கு ரூ. 50 லட்சம் கொடுத்த நடிகையர் திலகம் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதன் தெலுங்கு பதிப்பு மகாநதி என்ற பெயரில் வெளியானது.

நாக் அஷ்வின் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சுமார் ரூ. 25 கோடி ரூபாய் செலவில் தயாரான இப்படம் 50 கோடியை வசூலித்துள்ளது.

இந்நிலையில் இப்படக் குழுவினரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டி கவுரவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர்கள் அஷ்வினி தத், ஸ்வப்னா, பிரியங்கா, படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின், கீர்த்தி சுரேஷ், சாவித்ரியின் மகள் விஜய் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தயாரிப்பாளர்கள் ஆந்திரத் தலைநகராக உருவாகி வரும் அமராவதியின் வளர்ச்சிக்கு 50 லட்ச ரூபாய் நன்கொடையாக அளித்தனர்.

Andhra CM Chadnrababu Felicitates Mahanati Team In Amaravathi

ஜுங்கா படத்தில் ரமணி அம்மாளுக்கு வாய்ப்பளித்த சித்தார்த் விபின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்து வரும் படம் ‘ஜுங்கா’.

இதில் நாயகியாக சாயிஷா நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இதன் சூட்டிங்கை நடத்தியுள்ளனர்.

இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார்.

இதில் இடம் பெறும் ஒரு பாடலை பிரபல தொலைக்காட்சியில் புகழ் பெற்று வரும் ரமணியம்மாள் பாடியிருக்கிறார்.

விஜய் சேதுபதி – கோகுல் கூட்டணியில் ஏற்கனவே ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதால், இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

Famous Singer Ramani ammal sung in Vijay Sethupathis Junga movie

கதையை கேட்காமல் ரஜினி படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா மற்றும் 2.0 படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதுகுறித்து விஜய்சேதுபதி கூறுகையில்…

ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று கார்த்திக் சுப்பராஜ் சொன்னார். அதைக்கேட்டதுமே ஓகே சொல்லிட்டேன்.

காரணம் கார்த்திக் சுப்பராஜ் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. அதனால் எனது கேரக்டர் பற்றி கேட்காமல் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன்.” என்றார் விஜய் சேதுபதி.

I dont know about my character and story line in Rajini movie says Vijay Sethupathi

விரைவில் சிம்பு பாடிய பெரியார் குத்து பாடல் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் பிரபல நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார் சிம்பு.

இதனிடையில் ஓவியா நடிக்கும் ஒரு படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், ‘பெரியார் குத்து…’ என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்த குத்து பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி என்பவர் இசையமைக்க மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.

தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளனர்.

இது குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த பாடல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Simbu Next Single Periyar Kuthu song Coming Soon

More Articles
Follows