நடிகர்களே நுகர்வோர்கள்.; இனி சதவீத அடிப்படை சம்பளம் – KS தங்கசாமி அறிக்கை

நடிகர்களே நுகர்வோர்கள்.; இனி சதவீத அடிப்படை சம்பளம் – KS தங்கசாமி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer KS ThangaSamyசமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மூடப்பட்ட திரையரங்குகள், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் என்று பல சிக்கல்கள். இந்த சிக்கலான சூழ்நிலையில் நேற்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் ஒரு எளிய தீர்வை முன்வைத்தது மிகவும் வரவேற்புக்குரியது.

தனது இந்த முன்னெடுப்பிற்கு பிரமிட் நடராஜன் சாரும், ஆர்.பி. சவுத்ரி சாரும் காரணமாக அமைந்ததாக தனது பேச்சில் குறிப்பிட்டார். அவர்களுக்கும் மிக்க நன்றி.

திருப்பூர் சுப்ரமணியன் முன்வைத்த தீர்வு சதவீத அடிப்படையில் சம்பளம், சிறுசிறு பங்குதாரர்கள், விற்பனையில் பங்கு, வெளிப்படையான டிக்கெட் விற்பனை மற்றும் வெளிப்படையான நிதி நிர்வாகம் என்பதே.

ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் சதவீத அடிப்படையில் சம்பளம். யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது படத்திற்கு படம் மாறுபடும். அதை ஒவ்வொரு பட ஆரம்பத்திலும் பேசி முடிவு செய்து கொள்ளலாம். சம்பளம் முடிவு செய்த பிறகு வெளிப்படையான நிதிநிலை என்பதால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. நடிகர்களுக்கு தங்கள் பங்கு கிடைத்து விடும்.

சதவீத அடிப்படை சம்பளம் என்பதால் தயாரிப்பாளர்கள் பல படங்களை எடுக்க ஆர்வத்துடன் முன்வருவார்கள். நிறைய படங்கள் வெளிவரும். வாய்ப்புகள் அதிகம் ஆவதால் நடிகர்கள் தங்களுக்கு பிடித்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்கலாம்.

ஆப்ஷன்கள் அதிகமானால் அதன் பயன் நுகர்வோருக்கு தானே! இங்கு நடிகர்களே நுகர்வோர்கள். பல படங்களில் நடிப்பதால் வருவாய் பெருகுவதற்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு. அதே நேரத்தில் பல புது தயாரிப்பாளர்களையும் ஊக்கம் பெற, பயப்படாமல் ஆர்வமுடன் வர இது வழிவகை செய்கிறது.

இது நடிகர்கள் மட்டும் இல்லாமல், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், துணை நடிகர்கள் என ஆரம்பித்து அனைவருக்கும் வருமானம் பல்கி பெருகி அவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் பணியாற்ற அற்புதமான பணி சூழ்நிலையை அளிக்கிறது. இதன் வழியாக படைப்பின் தரமும் மேம்படும்.

யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் அனைவரும் வாழ வழி செய்யும் சதவீத சம்பளம் என்பதை சிறிய, பெரிய நடிகர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஏற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

பெரிய நடிகர்கள் இதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்து நடித்து கொடுத்தால் அவர்கள் சினிமாவை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்றுகிறார்கள். தங்களை வளர்த்த சினிமாவிற்கும் நன்றிக்கடன் ஆற்றுகிறார்கள், ரசிகர்கள் தங்களை பல படங்களில் கண்டு மகிழ்வதற்குமான வாய்ப்பினையும் வழங்குகிறார்கள்.

அடுத்து சிறுசிறு பங்குதாரர்கள். அடுத்தடுத்த சினிமாக்கள் வெளிவருவதற்கு மிக பெரிய தடையே முதலீடு தான். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதன் தயாரிப்பாளர் மொத்தமாக முடங்கும் அவலம் இப்போது இருக்கிறது.

சினிமாத்துறைக்கு வருவதற்கு பலரும் அஞ்ச காரணம் அது எதிர்ப்பார்க்கும் பெரிய அளவிலான முதலீடுதான். அது இவ்வாறு சிறு சிறு பங்குகளாக பிரிக்கப்படும்போது மிக பெரிய உதவியாக அமையும். நலிந்த நிலையில் இருக்கும் பல தயாரிப்பாளர்களுக்கு பேருதவியாக இது அமையும். முதலீட்டிற்கு ஏற்ப பங்கு பிரித்து அளிக்கப்படுகிறது.

நஷ்டமும் பெரிதாக அவர்களை பாதிக்காது. ஒரு படம் தோல்வி அடைந்தாலும் அடுத்த முயற்சியில் ஈடுபடுவார்கள். இதில் சில சிக்கல்கள் இருக்கலாம், வரலாம். அதை களைவதற்கு ஒரே வழி, இது போன்ற முறையில் படங்கள் தொடர்ந்து தயாரிப்பதே. அப்போதுதான் குறைகளை அடையாளம் கண்டு தீர்க்க முடியும்.

வெளிப்படையான டிக்கெட் விற்பனை காலத்தின் கட்டாயம். ஒரு படத்தின் உண்மையான கிளைமாக்ஸ் என்பது தியேட்டர் டிக்கெட் விற்பனையில்தான் இருக்கிறது. அதுவும் இன்டர்நெட் உலகில் எதுவும் நொடியில் நம் கைகளில் கிடைக்கும் போது இது எப்போதோ செய்து இருக்கப்பட வேண்டிய விஷயம்.

கம்ப்யூட்டர் சர்வரில் இணைத்து விட்டால் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே தமிழகம் முழுவதும் உள்ள டிக்கெட் விற்பனையை நிமிடத்திற்கு நிமிடம் பார்க்க முடியும். இதனால் ஒரு படத்தின் வெற்றி/தோல்வி, லாப/நஷ்டம் துல்லியமாக கணக்கிட படுகிறது.

அதே போல் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் சொல்லும் இன்னொரு விஷயம் வெளிப்படையான நிதி அறிக்கை, அதாவது அனைத்து பணப்பரிமாற்றங்களும் வங்கியின் வழியே மட்டுமே.

இந்த வெளிப்படைத்தன்மை படத்தில் முதலீடு செய்தவர்கள் ஆரம்பித்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வரை எல்லோருக்கும் சரியான தகவல்கள் கிடைக்க பெறுகிறது. அவரவர் தங்கள் நியாயமான பங்கை பெற்று கொள்ள வழி செய்யப்படுகிறது.

மேலே சொன்ன அனைத்து சீர்திருத்தங்களும் இதற்கு முன்பே பல வருடங்களாக பலரால் பேசப்பட்டவைதான். இரண்டு படங்களின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகிய நானும் சக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிக நண்பர்களிடம் பல சந்தர்ப்பங்களில் இதை எல்லாம் வலியுறுத்தி இருக்கிறேன். இந்த புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் பற்றி ஏற்கனவே நிறைய விவாதித்து இருக்கிறோம்.

இந்த பேரிடர் காலத்தில் இதற்கு ஒரு வழி அமைந்ததாகவே நான் கருதுகிறேன். எத்தனையோ வருடங்களாக நான் இதுசம்பந்தமாக பலரிடம் பேசியும் வேண்டுகோள் விடுத்தும், ஏன் அந்த முயற்சியில் நானும் இறங்கியும் அடுத்த கட்டத்திற்கு நகராமல் வெறும் பேசுபொருளாக தேக்க நிலையிலேயே இருந்தது. சரி, எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் அல்லவா!

இது வெறும் செய்தியாக மட்டும் கடந்துபோகாமல் வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டுமே என்பதுதான் சினிமாவை நேசிக்கும் அனைவரது எதிர்பார்ப்பும், ஆதங்கமும்.நேர்மையான முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும் ஆதரவுடனும்…

கே.எஸ். தங்கசாமி,
இயக்குநர் / தயாரிப்பாளர்

ராட்டினம் / எட்டுத்திக்கும் மதயானை

தந்தையை வைத்து 1200 கிமீ சைக்கிள் ஓட்டிய 15 வயது ஜோதி; இந்திய விளையாட்டு ஆணையம் அழைப்பு

தந்தையை வைத்து 1200 கிமீ சைக்கிள் ஓட்டிய 15 வயது ஜோதி; இந்திய விளையாட்டு ஆணையம் அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CFI will give an opportunity to Jyothi who reached 1200 kms on cycle with her father கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் ஏழை மக்கள் வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் தொழிலுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு வேறு மாநிலங்களில் சிக்கியுள்ளனர்.

பீகாரை சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதி குமாரி. 8-ம் வகுப்பு மாணவி தனது தந்தை மோகன் பஸ்வானுடன் அரியானா மாநிலம் குர்கானில் (குருகிராம்) வசித்து வந்தார்.

மோகன் பஸ்வான், ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார்.

கொரேனா ஊரடங்கால் இவரிடம் இருந்த ஆட்டோ ரிக்‌ஷாவை அதன் உரிமையாளர் திரும்ப பெற்றுக்கொண்டார்.

இதனால் சொந்த ஊருக்கே செல்ல தீர்மானித்துவிட்டார் மோகன்.

தன் சொந்த ஊர் 1200 கி.மீ. தொலைவில் இருப்பதால் எப்படி செல்வது என யோசித்துள்ளார்.

இதனையடுத்து ஒரு சைக்கிளை வாங்கி அதில் செல்ல தீர்மானித்துள்ளார்.

தன் தந்தை மோகனை சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு, ஜோதி குமாரி 7 நாட்கள் இரவும், பகலும் தொடர்ந்து சைக்கிள் ஓட்டியுள்ளார்.

இந்த செய்தியும் புகைப்படங்களும் வீடியோவும் வைரலானது.

இந்த செய்தி டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள உள்ள தேசிய சைக்கிளிங் பெடரேசன் அமைப்புக்கு தெரிய வந்துள்ளது.

இந்த அமைப்பு இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.

சிறுமியின் இந்த தொடர் சைக்கிள் ஓட்டம் பற்றி இந்த அமைப்பின் தலைவர் ஓங்கர் சிங் தெரிவித்துள்ளதாவது…

“ஒரு எட்டாம் வகுப்பு மாணவி இதை செய்திருக்கிறார் என்பது வியக்க வைக்கிறது. அந்தச் சிறுமியிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இல்லையென்றால் 1,200 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டுவது என்பது சாதாரணமானது அல்ல.

அந்தச் சிறுமியை அழைத்து கணினிமயமாக்கப்பட்ட சைக்கிளில் அமர வைத்து சோதிப்போம்.

நாங்கள் தேர்ந்தெடுக்கும் தேர்ச்சி பெறுகிறாரா என்று பார்ப்போம். தேர்ச்சி பெற்று விட்டால், ஜோதிகுமாரி பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்க முடியும்.” என தெரிவித்துள்ளார்.

CFI will give an opportunity to Jyothi who reached 1200 kms on cycle with her father

சலூன் & ப்யூட்டி பார்லர்ஸ் திறக்க அரசு அனுமதி; இந்த கண்டிசன்ஸ் படிங்க

சலூன் & ப்யூட்டி பார்லர்ஸ் திறக்க அரசு அனுமதி; இந்த கண்டிசன்ஸ் படிங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Salons beauty parlours can function from 24th May except in containment zonesகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது முடக்கம் வருகிற மே 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

இருந்த போதிலும் சில விதிமுறைகள் மற்றும் தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நாளை மே 24 முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன் கடைகள் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என சலூன் கடைக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு அம்மா அவர்களின்‌ அரசு, தமிழ்நாட்டில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. மேலும்‌, கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றின்‌ தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்‌ எடுத்து வருகிறது.

தற்போது, பொதுமக்களின்‌ வாழ்வாதாரத்தை கருத்தில்‌ கொண்டு, நோய்‌ பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

ஏற்கனவே ஊரக பகுதிகளில்‌ முடி திருத்தும்‌ நிலையங்கள்‌ 19.5.2020 அன்று முதல்‌ இயங்குவதற்கு நான்‌ அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன்‌.

தற்போது முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலைய தொழிலாளர்களின்‌ கோரிக்கையை மாண்புமிகு அம்மாவின்‌ அரசு கனிவுடன்‌ பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத்‌ தவிர, இதர மாநகராட்சிகள்‌, நகராட்சிகள்‌ பேரூராட்சிகளில்‌ முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்கள்‌ 24.5.2020 அன்று முதல்‌ (தினமும்‌ காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை மட்டும்‌) இயங்குவதற்கு
அனுமதிக்கப்படுகிறது.

எனினும்‌, தடை செய்யப்பட்ட பகுதிகளில்‌ உள்ள முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்கள்‌ இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக்‌ கூடாது.

ஏற்கனவே ஊரக பகுதிகளில்‌ முடி திருத்தும்‌ நிலையங்கள்‌ 19.5.2020 அன்று முதல்‌ இயங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்‌, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட ஊரக பகுதிகளைத்‌ தவிர தமிழ்நாட்டின்‌ அனைத்து ஊரக பகுதிகளில்‌ தற்போது அழகு நிலையங்களும்‌ 24.5.2020 முதல்‌ (தினமும்‌ காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை மட்டும்‌) இயங்குவதற்கு அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

இந்த முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்களில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்‌.

இந்நிலையங்களில்‌ பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கோ அல்லது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கோ காய்ச்சல்‌, சளி, இருமல்‌ போன்ற அறிகுறிகள்‌ இருந்தால்‌ அவர்களை இந்நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக்கூடாது.

வாடிக்கையாளர்கள்‌ அனைவருக்கும்‌ கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும்‌, முககவசங்கள்‌ அணிவதை உறுதி செய்யுமாறும்‌, கடையின்‌ உரிமையாளர்‌ முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்களில்‌ ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும்‌, வாடிக்கையாளர்களும்‌, பணியாளர்களும்‌ அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறும்‌ நான்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. குளிர்சாதன வசதி இருப்பின்‌ அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.

மேலும்‌, முடி திருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்களை இயக்குவதற்கான விரிவான வழிமுறைகளை தனியாக வழங்கப்படும்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Salons beauty parlours can function from 24th May except in containment zones

வேண்டாம் விபரீதம்.; விமான சேவையை நிறுத்த மோடிக்கு எடப்பாடி கடிதம்

வேண்டாம் விபரீதம்.; விமான சேவையை நிறுத்த மோடிக்கு எடப்பாடி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modi epsகொரோனா பொது முடக்கம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது.

தற்போது சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

வருகிற ஜீன் 1ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்காக அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களும் தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 25ஆம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா பாதிப்பு இன்னும் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால், ஜூன் மாதத்திற்கு பிறகு விமான சேவையை தொடங்கலாம் என முதல்வர் அதில் கேட்டு கொண்டுள்ளார்.

மே 25 முதல் சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டதும் இங்கே கவனிக்கத்தக்கது.

2 மாதங்கள் வெளிநாட்டில் சிக்கிய பிருத்விராஜ் கேரளா திரும்பினார்

2 மாதங்கள் வெளிநாட்டில் சிக்கிய பிருத்விராஜ் கேரளா திரும்பினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prithvi rajதமிழில் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகர் பிருத்விராஜ்.

இவர் அண்மையில் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

இவர் பிளஸ்ஸி இயக்கும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மார்ச் மாதம் ஜோர்டான் நாட்டுக்கு சென்றிருந்தார்.

அதன்பின்னர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பொது முடக்கம் அமலுக்கு வந்தது.

இதனால் பிருத்விராஜால் இந்தியா திரும்ப முடியவில்லை.

ஜோர்டான் நாட்டில் ஒரு தீவில் சிக்கினாலும் அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தார்.

சூட்டிங் முடிந்தவுடன் எங்கும் செல்லமுடியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதன்படி பிருத்விராஜ் படக்குழுவினர் உள்ளிட்ட 57 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இன்று காலை கேரளாவில் உள்ள கொச்சியை அவர்கள் வந்தடைந்தனர்.

லூசிபர் ரீமேக்.; சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் விஜய்-தனுஷ் பட நடிகை

லூசிபர் ரீமேக்.; சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் விஜய்-தனுஷ் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chiranjeevi geneliaசந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், சச்சின், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா.

கடந்த 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

தற்போது சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுக்கவிருக்கிறாராம்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிபர் படத்தை தெலுங்கில் உருவாக்கவுள்ளனர்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கிய இந்த படத்தில் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். நாயகியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இதன் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க அவருக்குதான் ஜெனிலியா ஜோடியாக நடிக்கிறாராம்.

சாஹோ பட இயக்குனர் சுஜித் இந்த படத்தை இயக்க உள்ளார்.

More Articles
Follows