கமலின் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

கமலின் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director GN RangaRajanஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘மகராசன்’, ’கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன்.

இவையில்லாமல் ‘முத்து எங்கள் சொத்து’, ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’, ‘மனக்கணக்கு’, ‘பல்லவி மீண்டும் பல்லவி’ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது அவருக்கு வயது 90் ஆகிறது.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை காலமானார்.

ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் ‘ஹரிதாஸ்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் தந்தை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Producer GN Ranga Rajan passed away

முதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் ராஜமௌலி

முதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mahesh babuஉலக சினிமாவை கலக்கிய பாகுபலி படத்தை தொடர்ந்து ‘ஆர்ஆர்ஆர்’ என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி.

தற்போது கொரோனா தொற்று ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.்

இந்த ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி படத்தை வெளியிடயிருந்த நிலையில் கொரோனா பிரச்னையால் அடுத்த ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தை முடித்து விட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ள ஒரு படத்தை ராஜமௌலி இயக்கவிருக்கிறாராம்.

இந்த படத்திற்கான திரைக்கதை பணியை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது்

தற்போது நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா என்ற படத்தையும் திரிவிக்ரம் இயக்கும் படத்தையும் முடித்துவிட்டு தான் ராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ளாராம் மகேஷ் பாபு.

இவர்கள் இருவரும் முதன்முறையாக இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajamouli to direct Super Star Mahesh Babu’s next film

800 காவலர்களுக்கு மாஸ்க் சானிடைசர் வழங்கி தடுப்பூசி பாடல் தந்த க்ரிஷ்

800 காவலர்களுக்கு மாஸ்க் சானிடைசர் வழங்கி தடுப்பூசி பாடல் தந்த க்ரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singer krishநடிகர், இசையமைப்பாளர் க்ரிஷ், தன் பன்முக திறமையினால், தமிழ் சினிமாவில், புகழ் மிக்க படைப்பாளியாக, கவனம் குவித்து வருகிறார்.

சமீபத்தில் முருக கடவுள் குறித்து, ஆன்மிக பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்தார்.

மிகப்பெரும் வெற்றியை குவித்த, அந்த ஆல்பம் பல முனைகளில் இருந்தும் பாராட்டுக்களையும் குவித்தது.

இந்த நிலையில் தற்போது நம் சமூகத்திற்கு அவசியமான, கோவிட் தடுப்பூசி குறித்த, விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஒரு அற்புதமான பாடலை உருவாக்கியுள்ளார்.

SP Dr. சிவக்குமார் IPS, இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

பாடல் குறித்து இசையமைப்பாளர் க்ரிஷ் கூறியதாவது….

மதிப்புமிக்க, அற்புதமான இந்த விழிப்புணர்வு பாடலில், பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

மனிதகுலம் வரலாற்றில் பல விதமான போர்களையும், போராட்டங்களையும் கடந்தே வந்திருக்கிறது.

ஆனால் தற்போதைய நமது போராட்டம், முற்றிலும் மாறுபட்டது. இப்போது காலம் நம் மீது தொடுத்திருக்கும் போர் மிகப்பெரும் சவால் அளிக்ககூடியது.

இந்தப் போரில் நாம் அனைவருமே போர் வீரர்கள் தான். நம்முடைய கேடயம் என்பது சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாகும்.

மேலும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதும், மாஸ்க் அணிவதும், இந்தப்போரில் நமது தலையாய கடமையாகும்.

ஆனால் இந்தப்போரில் வெல்ல, இவையனைத்தையும் விட முக்கியமானது, ஒவ்வொருவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்வதே ஆகும். தடுப்பூசியால் மட்டுமே நாம் இந்த கொடிய காலத்தை கடந்து செல்ல முடியும்.

இப்பாடல் இந்த சமூக கருத்தை வலியுறுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை எழுதிய SP Dr. சிவக்குமார் IPS அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் இப்பாடலை தயாரித்த ஆற்காடில் உள்ள ‘Sri Kanishk Collections’ நிறுவனத்தாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

இந்த அற்புதமான தடுப்பூசி விழிப்புணர்வு பாடலை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், மாஸ்க் மற்றும் சானிடைஸர் ஆகியவற்றை 800 க்கும் மேற்பட்ட முன்கள காவல் துறை பணியாளர்களுக்கு வழங்கியுள்ளார் க்ரிஷ்.

Singer Krish awareness song for covid 19

சிம்புக்கு 1.. சிவகார்த்திகேயனுக்கு 2.. நயன்தாராவுக்கு 2.. அதுல்யாவுக்கு 1.. ஆனால் விஜய்சேதுபதிக்கு மட்டும் 5..

சிம்புக்கு 1.. சிவகார்த்திகேயனுக்கு 2.. நயன்தாராவுக்கு 2.. அதுல்யாவுக்கு 1.. ஆனால் விஜய்சேதுபதிக்கு மட்டும் 5..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiகொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

வரும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பே இல்லை.

செப்டம்பர் வரை தியேட்டர்களுக்கு தடை இருக்கலாம். அப்போது திறக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் அவ்வளவாக இருக்காது.

மேலும் தடுப்பூசிகள் பற்றாக்குறை இருப்பதால் கொரோனா தொற்று பயமும் முழுவதுமாக நீங்கி விடவில்லை.

எனவே தியேட்டர்களுக்கு மக்கள் பழையபடி வருவார்கள் என்ற அச்சம் திரைப்பட தயாரிப்பாளர்கள் & தியேட்டர்கள் உரிமையாளர்களிடம் நிலவுகிறது.

இந்த நிலையில் முக்கிய படங்களை ரிலீஸ் செய்ய ஓடிடி தளங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்தந்த படத்தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாகவும் சிலரிடம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

தற்போது வரை தகவல்கள் படி.. (சில படங்கள் தியேட்டர்களில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.)

இதோ அதன் விவரம்..

ஐங்கரன் – ஜிவி பிரகாஷ்

மஹா – ஹன்சிகா & சிம்பு

எப்ஐஆர் ( விஷ்னு விஷால்)

நரகாசூரன் (அரவிந்த்சாமி)

பிரண்ட்ஷிப் (அர்ஜுன்)

முருங்கைக்காய் சிப்ஸ் (அதுல்யா)

ராங்கி (த்ரிஷா)

நயன்தாரா 2 படங்கள்..

ராக்கி (ரிலீஸ் உரிமை)

நெற்றிக்கண்

சிவகார்த்திகேயன் 2 படங்கள்

டாக்டர்

வாழ் (தயாரிப்பு)

விஜய்சேதுபதி 5 படங்கள்

துக்ளக் தர்பார்

லாபம்

மாமனிதன்

கடைசி விவசாயி

யாவதும் ஊரே யாவரும் கேளீர்

Vijay Sethupathi in 5 films to release in OTT

ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து..; அரசு அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி

ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து..; அரசு அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

+2 exam studentsமாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ CBSE பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று பாரத பிரதமர் மோடி அறிவித்தார்.

எனவே தமிழகத்திலும் +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? என மாணவர்கள் எதிர்ப்பார்த்தனர்.

கல்வியாளர்களுடன் தமிழக அரசு ஆலோசனையில் உள்ளதால் இதுபற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் புபேந்திர சின் சுதாசமா அறிவித்துள்ளார்.

இவர்களை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் அந்த மாநில மாணவ மாணவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழக மாணவர்களே காத்திருங்கள்…

Gujarat government cancels 12th exams

நடிகரும் கல்வியாளருமான ஐசரி கணேஷ் முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் உதவி

நடிகரும் கல்வியாளருமான ஐசரி கணேஷ் முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ishari Ganeshதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது எனலாம்.

இதனிடையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் நிவாரண நிதி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

அதன்படி சாமானியன் முதல் பிரபலங்கள் வரை பலரும் நிதி அளித்து வருகின்றனர். இதுவரை நிதி வசூல் 200 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளரும் வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ஐசரி கணேஷ் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.

அப்போது அவருடன் அவருடைய மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ப்ரீத்தா ஆகியோர் உடனிருந்தனர்.

Producer Ishari Ganesh donates Rs 1 crore to corona relief fund

More Articles
Follows