தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டன. வெளியீட்டுக்குத் தயாராக இருந்த படங்கள் திரையரங்குகளுக்கு செல்லாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டன.
இந்தியாவில் தற்போது தான் திரையரங்குகளை திறக்கப்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான தனஞ்செயன் ஓடிடி தளங்களின் பெயர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு வேதனையாக தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
”உங்கள் படங்களில் ‘ஹாட் ஸ்டார்ஸ்’ இல்லையெனில் அவற்றை ஓடிடி தளங்களுக்கு விற்பது எளிதல்ல.
ஒரே வழி என்னவென்றால் அவற்றை ‘நெட்’ விலையை விடக் குறைவான விலையில் விற்பது அல்லது வருவாய் பங்கீடு அடிப்படையில் விற்பது. ‘அமேசிங்’காக இருக்கிறது இல்லையா? சிறிய நடிகர்களைக் கொண்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற ஒரு ‘ஜீ’ பூம்பா தேவைப்படுகிறது”.
இவ்வாறு தனஞ்ஜெயன் கூறியுள்ளார்.
Producer Dhananjayan on movies releasing in oTT