தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளரும் நடிகருமான கே. ராஜன் பேசியதாவது…
“சினிமா மோசமான சூழ்நிலையை அடைந்துள்ளது. தயாரிப்பாளர்கள் பெப்சி தொழிலாளர்களால் அவதிப்படுகிறார்கள்.
பெப்சி தொழிலாளர்கள் உழைக்கும் தோழர்கள்தான். அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் நாங்களும் நன்றாக இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது டிராவலிங் பேட்டா கேட்கிறார்கள். அதுவும் 24 மணி நேரம் டிராவல் செய்து சூட்டிங் வந்தால் டபுள் பேட்டா கேட்கிறார்கள்.
அதுவும் ஒரே ஒருவர் இப்படி செய்கிறார். அந்த மீட்டிங் போய்விட்டு வந்தேன். அதான் இங்கு வர நேரம் ஆகிவிட்டது.
இந்த விழாவுக்கு படத்தின் நாயகி இனியா வரவில்லை என்றார்கள். சில நடிகர்கள் நடிகைகள் இப்படிதான் செய்கிறார்கள். அவர்களுக்கு திமிரு.
அதான் தங்கள் படவிழாவுக்கு கூட வராமல் இருக்கிறார்கள். ஒரு நாள் கால்ஷீட் கூட கொடுக்க வேண்டாம். 3 மணி நேரம் வந்தால் போதும்.
எம்ஜிஆர். கலைஞர், ஜெயல்லிதா எல்லாரும் சினிமா துறையை சார்ந்தவர்கள். தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள்.
ஆனால் கேளிக்கை வரி கொடுக்க, ரூ. 5 லட்சம் லஞ்சமாக கேட்கிறார்கள். சரி அதையும் கொடுத்து தொலைக்கிறோம்.
படம் பார்க்க வந்தால், அவர்கள் வீட்டுக்கு கூட பார்சல் சாப்பாடு வாங்கி செல்கிறார்கள்.
எல்லா மாநிலத்திலும் கேளிக்கை வரியில்லை. அங்கே சினிமா நன்றாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி.
இங்கே அரசியல்வாதிகள் லஞ்சம் பேர்வழிகள்.
அம்மா ஆட்சி என்கிறார்கள். ஆனால் பணத்தாசை பிடித்து இருக்கிறார்கள்” என கடுமையாக பேசினார்.
Producer cum Actor K Rajan slams TN Govt Ministers and Officials