தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில மாதங்களாகவே தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி சங்கம் இடையே மோதல் இருந்து வருகிறது.
எனவே பெப்சி அமைப்பினர் இல்லாமலும் சூட்டிங்கை நடத்திக் கொள்ளுங்கள் என அறிவித்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.
இதனால் பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
இதனால் கடந்த சில நாட்களாக எந்த விதமான சூட்டிங்கும் நடைபெறவில்லை.
இந்நிலையில் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில், சங்கத் தலைவர் விஷால் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பெப்சி அமைப்பினர் போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
Producer Council willing to work with FEFSI team Strike cancelled