தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு முன்பு அமுல்படுத்தியது.
ஆனால் ஜிஎஸ்டி வரியுடன் தற்போது சினிமா டிக்கெட்டுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி 10% விதித்துள்ளது.
எனவே இந்த வரியை ரத்து செய்யக் கோரி, தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் இந்த வரியை நீக்கும்வரை புதிய படங்களை திரையிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அதிரடியாக அறிவித்திருந்தார்.
இதனால் அடுத்த வாரம் தீபாவளி (அக். 18) தேதி அன்று படங்கள் வெளியாகுமா? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்றுமுதல் (13 அக்டோபர், 2017) முதல் சில விதிமுறைகளை தியேட்டர்கள் பின்பற்ற வேண்டும் என விஷால் தெரிவித்துள்ளார்.
அவை…
- அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கப்படவேண்டும்
- கேண்டீனில் MRP விலைக்குதான் உணவு பொருட்களை விற்கவேண்டும்
- அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்
- தண்ணீர் கொண்டு வர பொது மக்களை அனுமதிக்கவேண்டும்
- கார், பைக் உள்ளிட்டவைகளுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது
- விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
- மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
என விஷால் அறிவித்துள்ளார்.
இந்த விதிமுறைகளை தியேட்டர்கள் அதிபர்கள் கடைப்பிடிப்பார்களா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..?
Producer Council President Vishal order 7 conditions to Theatre owners