பயணங்கள் முடிவதில்லை.: தனியார் ரயில்கள் தலைவலியா.? ஒரு பார்வை

பயணங்கள் முடிவதில்லை.: தனியார் ரயில்கள் தலைவலியா.? ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

private trainsஅண்மைக்காலமாகவே அரசின் பல துறைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த வரிசையில் ரயில்வேயும் இணைந்துள்ளது.

151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாருக்கு விட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

இந்த ரயில்களை, இரு வழிகளில் தினமும் இயக்கவும், வாரத்தில்,ஒரு நாள், இரண்டு நாள் மற்றும் மூன்று நாட்கள் இயக்கவும் அழைப்பு கோரப்பட்டுள்ளது.

இதே போல் தினசரி ரயில் இயக்க, தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மங்களூர் – சென்னைக்கு வாராந்திர ரயில், சென்னை – மும்பைக்கு வாரம் இருமுறை, கொச்சுவேலி கவுஹாத்தி இடையே வாரத்தில் மூன்று நாட்கள் என, 14 வழித்தடங்களில் ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகத்தால் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வேயில், தமிழகம்,கேரளா மற்றும் ஆந்திராவில், 14 வழித்தடங்களில், 26 தனியார் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட உள்ளது.

35 ஆண்டுகளுக்கு தனியாருக்கு லைசென்ஸ் தரப்படவுள்ளது.

இதில் தனியார் ரயில்களே கட்டணம் நிர்ணயம் செய்துகொள்ள முடியும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.

(கையில் போதிய பணமின்றி பஸ் பயணத்தை தவிர்த்து ரயிலை நம்பியவர்கள் தற்போது மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்படுவார்கள் எனத் தெரிகிறது.)

இந்த தனியார் ரயில்களில் டிரைவரும் கார்டும் (பாதுகாவலர்கள்) மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

மற்ற ஊழியர்கள் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஊழியர்களாக இருப்பார்கள்.

ஒரு ரயில் 16 பெட்டிகளுடன் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயண நேரம் பெரிய அளவில் குறையும்.

தற்போது உள்ளது போல இல்லாமல் தனியார் ரயில்கள் நவீன தொழில்நுட்ப வசதியுடன் வடிவைக்கப்படும்.

இந்த தனியார் ரயில் சேவை தொடர்பாக ரயில்வேயின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது…

இந்த நவீன ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.

ரயில்வேயில் பாதுகாப்பை அதிகப்படுத்தி, உலகத் தரம்வாய்ந்த பயணத்தைப் பயணிகளுக்கு வழங்கவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

முதல்கட்டமாக 109 வழித்தடங்களில், 151 நவீன ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும்.

ரயிலை நிர்வாகம் செய்யும் தனியார் துறையினர், குறித்த நேரத்தில் இயக்குதல், நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல், ரயிலைப் பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடுமுழுக்க பல்வேறு வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க மும்பை – 2, டெல்லி -2, சண்டிகார், சென்னை, செகத்திராபாத், ஜெய்பூர், பெங்களூர் உட்பட 14 தொகுப்புகளாக என பிரிக்கப்படவுள்ளன.

சென்னை தொகுப்பில் மட்டும் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை – மதுரை, சென்னை – மங்களூர், சென்னை – கோயம்புத்தூர், திருச்சி – சென்னை, கன்னியாகுமரி – சென்னை, சென்னை – புதுடெல்லி, சென்னை – புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

एक दो तीन … हवा हवा… பாடல் புகழ் டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் மரணம்

एक दो तीन … हवा हवा… பாடல் புகழ் டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saroj Khan who made Sridevi Madhuri dance passed away30-40 வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவை ஹிந்தி பாடல்களே ஆக்ரமித்து இருந்தன.

அந்த சமயத்தில் பாலிவுட்டில் பிரபலமான ‘ஏக் தோ தீன்’, (एक दो तीन ), ‘ஹவா ஹவா’ हवा हवा ‘தம்மா தம்மா’ போன்ற பாடல்கள் தென்னிந்தியாவில் மிகப்பிரபலம்.

இந்த சூப்பர் டூப்பர் பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் தான்.

ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீட்சித் ஆகிய நடிகைகளின் நடனத்திற்கு இவர் தான் ஆஸ்தான நடன இயக்குர்.
இவர் மூன்று முறை தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஏற்பட்ட திடீர் மரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார்.

இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையிலும் கொரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளது.

சரோஜ் கானுக்கு ராஜு கான் என்ற மகனும், சுகையான கான் என்ற மகளும் உள்ளனர்.

சரோஜ் கானின் இயற்பெயர் நிர்மலா. இந்துவாகப் பிறந்து பின்னர் முஸ்லிம் மதத்துக்கு மாறினார்.

சரோஜ் கான் தனது 13 வயதில், நடன இயக்குநர் சோஹன்லாலைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது சோஹன் லாலுக்கு 41 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Saroj Khan who made Sridevi Madhuri dance passed away

சாத்தான்குளம் 4 போலீஸ் மீது இரட்டைக் கொலை வழக்கு; 5 போலீஸ் கைது

சாத்தான்குளம் 4 போலீஸ் மீது இரட்டைக் கொலை வழக்கு; 5 போலீஸ் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SI Raghu Ganeshசாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் வழக்கில் தொடர்புடையதாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தை இரட்டை கொலை வழக்காக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் அடுத்தடுத்த நாட்களில் இறந்ததால் தனித்தனியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

சிபிசிஐடி போலீசார் நேற்று கொலை வழக்காக பதிவு செய்த நிலையில் தற்போது இரட்டை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் வாக்குமூலம் கொடுத்த தலைமை பெண் காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவருக்கும் கொடுக்கப்பட்ட சிகிச்சை, உடல்நிலை குறித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீசார் திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friends of Police விசாரணையில் தலையிட முடியாது; சினிமா ஸ்டைலில் போலீஸ் பணி; IG முருகன் ஓபன் டாக்

Friends of Police விசாரணையில் தலையிட முடியாது; சினிமா ஸ்டைலில் போலீஸ் பணி; IG முருகன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IG Muruganசாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் இருவரும் போலீசாரின் சித்ரவதையால் உயிரிழந்தனர்.

இதனையடுத்து காவல் துறையில் பலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில்… தென் மண்டல காவல் துறை தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளேன். சிபிசிஐடி போலீசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.

லாக்அப் மரணங்களை காவல்துறை ஆதரிக்கவில்லை. அது தடுக்கப்பட வேண்டும்.

தற்போது பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. நீதிமன்ற கட்டளைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதில் உண்மையல்ல.

சாட்சியாக மாறிய காவலர் ரேவதிக்கு தேவையான பாதுகாப்பும் ஒரு மாத விடுப்பும் ஊதியத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக வரும் உதவி ஆய்வாளர்கள் சினிமா பட பாணியில் செயல்படுகிறார்கள் என்கின்றனர். அது ஓரளவு உண்மை தான். இனி பயிற்சியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

Friends of Police ற்கு காவல்துறைக்கான உரிமை இல்லை. காவல்துறை விசாரணையில் அவர்கள் தலையிட முடியாது. தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”.

எனப் பேசினார்.

அரசுப் பள்ளிகளை ரேஷன் கடைகளாக மாற்றிய புதுச்சேரி அரசு; ஆசிரியர்களே அரிசி அளக்கும் அவலம்..!

அரசுப் பள்ளிகளை ரேஷன் கடைகளாக மாற்றிய புதுச்சேரி அரசு; ஆசிரியர்களே அரிசி அளக்கும் அவலம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pondicherry governmentபுதுச்சேரி மாநிலத்தில் (காரைக்கால், மாஹி, ஏனாம்) மொத்தம் 3.36 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.

அதில் 1.8 லட்சம், சிவப்பு குடும்ப அட்டைகள், 1.56 லட்சம் மஞ்சள் குடும்ப அட்டைகள் உள்ளன.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலானதால் புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு 9,425 மெட்ரிக் டன் அரிசி, பருப்பு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு அரிசி, பருப்பு ஆகியவற்றை நியாயவிலைக் கடை மூலமாக தராமல் அரசு ஊழியர்கள் மூலம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன.

இதனால் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடை மூலம் இலவச அரிசி தர புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து, மற்றவர்களுக்குத் தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி தந்தார்.

இதைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரி அரசு ரூ.5.28 கோடியை ஒதுக்கீடு செய்தது.

அரசு ஊழியர்கள் தவிர்த்து மீதமுள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணி ஊரடங்கு தொடங்கிய பிறகு தற்போது தொடங்கியுள்ளது.

மாநில அரசு முடிவின்படி நியாய விலைக்கடை மூலம் அரிசி வழங்கப்படவில்லை.

நியாய விலைக்கடை ஊழியர்களைத் தவிர்த்து, மீண்டும் பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர்கள் மூலமாக அரசுப் பள்ளிகளில் வைத்து துணைநிலை ஆளுநர் உத்தரவின்படி அரிசி விநியோகம் இன்று (ஜூலை 1) தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக நியாய விலைக்கடை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில்…

“புதுச்சேரியில் 507 நியாய விலைக்கடைகள் முழுவதும் மூடப்பட்டு அங்கு பணிபுரியும் 800 பேரின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கெனவே 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை.

ஆனாலும் கொரோனா காலத்தில் நாங்கள் வேலை செய்யத் தயாராக இருக்கிறோம்.

இருந்தபோதிலும் அரசு எங்களுக்கு பணி வழங்கவில்லை.

ரேஷன் கடைகளில் அரிசி விநியோகத்தை ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்கின்றனர்.

ரேஷன் கடைகளின் செயல்பாடும், ஊழியர்களின் வாழ்வும் முற்றிலும் மாறிவிட்டது.’ என்கின்றனர்.

தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்

தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

devayaniதேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரப்படம் தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

இதுபற்றி தேவயானி கூறியதாவது.

“இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விளம்பரப் படத்தில் தேசிய விருதுபெற்ற ஆடுகளம் ஜெயபாலன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு தந்தை மகளுக்கான பாசப்பிணைப்போடு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு “பாரதி” படத்தில் எனக்கு மருமகனாக நடித்து இப்போது “கட்டில்” படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு இந்த விளம்பரத்தை எழுதி இயக்கியிருக்கிறார். செழியன் குமாரசாமி தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்கிறார்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் எனது குடும்பத்தோடு அந்தியூர் அருகிலுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். இடைப்பட்ட நாட்களில் அரசு அனுமதியோடு சென்னைக்கு வந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சென்றிருக்கிறேன். கிராமங்களின் வாழ்க்கையை முழுமையாக நான் இப்போது அனுபவித்து வருகிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது. கிராமத்து சமையல் செய்வது, குழந்தைகளோடு, கணவனோடு விளையாடுவது, தினமும் இரவு நேரத்தில் என் மூத்த மகள் பகவத்கீதை வாசிக்க அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது, குழந்தைகளுக்கான கல்வி இப்படி வாழ்க்கையின் அர்த்தங்களை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம். மகாபாரதம் ராமாயணம் போன்ற தொடர்கள் தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பாகிறது. இதை குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்து வருகிறோம்.

கொரோனா வைரஸிடமிருந்து நாமெல்லாம் மீண்டு ஊரடங்கு தளர்த்தப் பட்ட பிறகு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் முழுவீச்சுடன் நான் செயல்படுவேன். நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காக நான் காத்திருக்கிறேன்.

நிச்சயமாக தமிழக மக்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன்.” இவ்வாறு தேவயானி கூறினார்

More Articles
Follows