அப்துல்கலாம் மணிமண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

அப்துல்கலாம் மணிமண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Artist sridhar at APJ Abdul Kalam Memorial hall Rameswaramதொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, இந்தியாவின் 11வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இன்றைய, நாளைய இளைஞர்களின் விடிவெள்ளி என்று அனைவராலும் கருதப்படுபவர் டாக்டர் அப்துல் கலாம்.

இன்று அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினம் நாடெங்கிலும் போற்றப்படுகிறது. மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் அவரது சமாதி அருகே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டபத்தில் இந்திய ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர் தன்னுடைய படைப்புகளால் அழகு சேர்த்திருக்கிறார்.
இந்த மணிமண்டபத்தில் மொத்தம் 95 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மேலும் அப்துல் கலாமின் 2 சிலிக்கான் சிலையையும் உருவாக்கி இருக்கிறார்.

மணிமண்டபத்தை உருவாக்க 400 பேர் இணைந்து பணியாற்றியுள்ளனர். இதில் 15 பேர் கொண்ட குழுவைக் கொண்டு ஓவியங்களை உருவாக்கி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர்.

இந்த ஓவியங்களை பார்த்த முக்கிய பிரபலங்கள் பலரும் வியந்து பாராட்டியுள்ளார்கள்.

மேலும் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்துமுகமது மீரா மரைக்காயர் அவர்கள் ஏ.பி.ஸ்ரீதரை பாராட்டி ஆசி வழங்கியுள்ளார்.

அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி மணிமண்டபத்தைத் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்த மண்ணிற்கு நான் வந்ததை பாக்கியமாக கருதுகிறேன் என தமிழில் பேசினார் நரேந்திர மோடி.

மேலும் ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் நிச்சயம் மணிமண்டபத்தை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அப்துல்கலாம் மணிமண்டபம்- சிறப்பு தகவல்கள்…

1.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவகம், ஒன்பது மாதங்களில் பிரமாண்டமாகவும், பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் வகையிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

2.நாட்டின் ஒருமைப்பட்டை வலியுறுத்தும் வகையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல், கலாம் நினைவகப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

3.50 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த நினைவிடத்தின் நுழைவுவாயிலானது, பிரிட்டிஷார் அமைத்த ‘இந்தியா கேட்’ போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4.இதன் தரைதளம் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட உயர் ரக கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

5.நினைவு மண்டபத்தின் வெளிப்பகுதி முழுவதும் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் கிரானைட் மற்றும் ஆக்ரா சிவப்பு கிரானைட் கற்களால் பதிக்கப்பட்டுள்ளது.

6.கடற்கரைப் பகுதி என்பதால் உப்புக் காற்றினால் நினைவிடம் பாதிக்கப்படாமல் இருக்க, வழக்கத்தைவிட பல மடங்கு கூடுதலான கன அளவு கொண்ட கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

7.நினைவு மண்டபத்தின் உள்ளே அமைந்துள்ள நான்கு அரங்குகளில் கலாமின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியக் காட்சிகளும், வரையப்பட்ட படங்களும் வைக்கப்பட்டுள்ளன.

8.இவை முழுக்கமுழுக்க காய்கறிகள் மற்றும் மூலிகைச் சாறினைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.

9.கலாமின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரதான கூடத்தின் மேல் ஜனாதிபதி மாளிகையை நினைவுகூரும்வகையில் 12 மீட்டர் உயரத்தில் 9.62 மீட்டர் விட்டம் கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

11.இதன்மேல் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. நினைவகத்தின் மேற்பரப்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஷெகவாட்டி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

12.நினைவகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள், கோள்கள், அறிவு மரம், ஒற்றுமையை எடுத்துக்காட்டும் பொம்மைகள் வைக்கப்பட்டிருப்பதுடன், ராஜமுந்திரியில் இருந்து கொண்டுவரப்பட்ட செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டுள்ளன.

13.இவற்றுக்கு முத்தாய்ப்பாக கலாமின் வெண்கலச்சிலை அருகே அவரால் கண்டுபிடிக்கப்பட்ட அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவயம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள

14.கலாம் நினைவிட நுழைவு வாயிலை காரைக்குடி செட்டிநாட்டில் செய்யப்பட்ட மலேசிய தேக்குமரக் கதவுகள் அலங்கரிக்கின்றன.

15.தான் வாழும்போது இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். மறைவுக்குப் பின் உருவாக்கப்பட்டிருக்கும் அவரின் நினைவிடத்தில், கலாமின் பணிகளைத் தொடரும்வகையில் கோளரங்கம், நூலகம், அறிவுசார் மையம் என பல மையங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கலாம் ஆன்தம்

கவிஞா் வைரமுத்துவின் பாடல் வாரிகளில் உருவாகியுள்ள “கலாம் கலாம் சலாம் சலாம்“ என்ற பாடல் திரையிடப்பட்டது.

கலாமின் புழை வெளிப்படுத்தும் விதமாக தபால் துறை சார்பில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.

மேலும் 1964-ம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயல் காரணமாக பல்வேறு வழிபாட்டு தளங்கள், கட்டிடங்கள் இடிந்து நாசமான நிலையில் 52 ஆண்டுகளுக்கு பின்பு தனுஷ்கோடி முதல் அரிச்சல் முனை பகுதி வரை 59 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பிரதமா் திறந்து வைத்தார்.

Prime Minister Narendra Modi Inaugurates APJ Abdul Kalam Memorial at Rameswaram

APJ Abdul Kalam Memorial at Rameswaram

 

ஆன்மிகத்தில் அப்பா வழியா? அக்கா வழியா? – அக்ஷராஹாசன்

ஆன்மிகத்தில் அப்பா வழியா? அக்கா வழியா? – அக்ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal familyகமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷராஹாசன் அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் சமீபத்திய பேட்டியில் இவரது ஆன்மிக நம்பிக்கை குறித்து கேட்கப்பட்டது.

அதில்… ‘‘உங்கள் அப்பா பகுத்தறிவாளர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அக்கா ஸ்ருதியோ கடவுள் நம்பிக்கை உள்ளவர். நீங்கள் எப்படி?’’ என்று கேட்டனர்.

அதற்கு அக்ஷராஹாசன் பதிலளித்துள்ளதாவது…

‘‘கடவுள் நம்பிக்கை விஷயத்தில் நானும் அப்பா ஒரே மாதிரிதான். எனக்கும் நம்பிக்கை இல்லை.

ஆனால், கடவுளை நம்புகிறவர்களுக்கு நாங்கள் மதிப்பளிப்போம்.

எனக்கு புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்த வழிபாடு அல்ல.

வாழ்வியலோடு கலந்த அதில் நிறைய விஷயங்களை கற்றுவருகிறேன்.’’ என்றார்.

Aksharahassan revealed her thoughts of Faith in God

ரஜினி-விஜய்-அஜித்-தனுஷ்-சிம்பு ஆகியோர் பற்றி சிவகார்த்திகேயன்

ரஜினி-விஜய்-அஜித்-தனுஷ்-சிம்பு ஆகியோர் பற்றி சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan chatவேலைக்காரன் படத்தை தொடர்ந்து பொன்ராம் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவற்றில் சில இதோ உங்களுக்காக…

  • விகடன் விருது விழாவில் ரஜினி சாருக்கு அருகில் நின்றேன். தயக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என் வாழ்வில் மறக்கமுடியாத நாள் அது.
  • விவேகம் படத்தில் அஜித் லுக் டிரெப்பிக். நிறைய ஆச்சரியங்கள் படத்தில் இருப்பதாக கேள்விபட்டேன். அந்த படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க நினைத்திருக்கிறேன்.
  • நான் டிவியில் பண்புரிந்த போதே என்னை உற்சாகப்படுத்தியவர் விக்ரம். நான் சினிமாவில் ஹீரோவாக வருவேன் என அப்போதே அவர் நம்பினார்.
  • விஜய் இந்திய சினிமாவில் சிறந்த எண்டர்டெயினர்
  • சிம்பு திறமையானவர்
  • தனுஷ் ஒரு சிறந்த நடிகர்
  • ஹன்சிகா சிறந்த தோழி
  • சதீஷ் கூட இருந்தா சிரிக்காமல் இருக்க முடியாது. அவருக்கு நகைக்சுவை உணர்வு அதிகம்.
  • அருண்ராஜா காமராஜ் என் நெருங்கிய நண்பர். அவர் விரைவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.
  • என் வெற்றிக்கு காரணம் அம்மா மற்றும் என் மனைவியின் அன்பே காரணம்.
  • அப்பா இல்லாதது வருத்தம் அளிக்கிறது. அவரையும் அவரது அன்பையும் இழந்து நிற்கிறேன்.
  • என்னுடன் படித்த நண்பர்களே என் பலம். இன்றும் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்.

என பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Sivakarthikeyan talks about Rajini Vijay Ajith Dhanush Simbu

பில்லாவாக மாறும் கெட்டவன்.? சிம்பு ரியாக்சன் என்ன தெரியுமா?

பில்லாவாக மாறும் கெட்டவன்.? சிம்பு ரியாக்சன் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu clarifies his next project and request to Mediaசிம்பு நடித்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

எனவே அதிரடியான ஹிட் படத்தை உடனே கொடுக்க வேண்டியில் நிலையில் சிம்பு இருக்கிறார் என்பதை பார்த்தோம்.

அப்படம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கெட்டவன் படமாக இருக்கும் என சில தகவல்களும் அல்லது பில்லா3 படமாக இருக்கும் எனவும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் கெட்டவன் என்ற படமே பில்லா3 படமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து கூறியுள்ள சிம்பு, நானே என் படத்தை பற்றி சொல்கிறேன். அதுவரை மீடியாக்கள் பொறுமை காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Simbu clarifies his next project and request to Media

STR‏Verified account @iam_str
Kind & humble request to media, pls stop speculating about my next project. Thanks for your support and pls wait for official announcement.

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் அயன்2 அப்டேட்ஸ்

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் அயன்2 அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayan suriya posterகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா தமன்னா இணைந்து நடித்த படம் அயன்.

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் சார்ப்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இப்படத்தின் வசனங்களை சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் இணைந்து சுபா என்ற பெயரில் எழுதியிருந்தனர்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் அயன்2 படம் உருவாக வாய்ப்புள்ளதாக இவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

Suriya KV Anand combo Ayan movie sequel updates

திமுகவை ஆதரிக்கிறாரா..? உளறியவர்களுக்கு உலகநாயகன் பதிலடி

திமுகவை ஆதரிக்கிறாரா..? உளறியவர்களுக்கு உலகநாயகன் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am against corruption not support any political party says Kamalhassanஅதிமுக ஆட்சியில் நடைபெற்று வரும் தமிழக அரசின் ஊழல்களை கமல் விமர்சித்திருந்தார்.

எனவே கமல் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன் ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
என் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்.

மேலும் புரட்சியாளர்கள் தோல்வியையும் மரணத்தையும் கண்டு பயப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

I am against corruption not support any political party says Kamalhassan

More Articles
Follows