தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா இன்று நடைபெறுகிறது.
சென்னை மாகாணத்தில் 1921ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அன்று சட்டமன்றம் தொடங்கிவைக்கப்பட்டது.
1967ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா ஆட்சியின் போது, சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது.
சட்டமன்றம் 100 ஆண்டுகள் நினைவுப்படுத்தும் வகையில் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது
இந்த விழாவையொட்டி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறக்கப்படுகிறது.
இன்று (02/08/2021) மாலை 05.00 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற்கான விழா நடைபெறும்.
சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி தலைமைச் செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ்நாடு சட்டப்பேரவை அரங்கில் ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட 15 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
16வதாக, தமிழ்நாட்டில் முதல்வராக 5 முறையும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய கருணாநிதியின் முழுஉருவப்படம் திறக்கப்படுகிறது.
இன்று கலைஞரின் திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளார்.
விழா முடிந்ததும், மீண்டும் ஆளுநர் மாளிகை செல்லும் குடியரசுத் தலைவர், இரவு அங்கேயே தங்குகிறார். நாளை காலை, சென்னையில் இருந்து கோவை வழியாக ஊட்டிக்கு செல்கிறார்
இந்த விழாவில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
President Ram Nath Kovind will unveil the portrait of former Chief Minister late M. Karunanidhi at the Legislative Assembly