பட்டாசு மறைத்து வைக்கப்பட்ட பழத்தை தின்ற கர்ப்பிணி யானை மரணம்

பட்டாசு மறைத்து வைக்கப்பட்ட பழத்தை தின்ற கர்ப்பிணி யானை மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pregnant elephant dies after being fed pineapple stuffed with crackers கேரளாவில் பிரபலமான பலவற்றில் யானையும் ஒன்று. யானைகள் இல்லாத பெரிய கோயில்களே இல்லை எனலாம்.

திருச்சூர் பூரம் திருவிழா என்றால் யானைகளை பார்ப்பதற்காகவே பெருமளவில் கூட்டம் கூடும். ஆனா அதே கேரளாவில் யானை ஒன்று கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காட்டுள்குள் உணவு கிடைக்காத யானை ஒன்று ஊருக்குள் சுற்றித் திரிந்துள்ளது. அது கர்ப்பிணி யானை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த யானைக்கு மக்கள் சிலர் அண்ணாச்சி பழத்தில் பட்டாசு வைத்து கொடுத்துள்ளனர்.

அதை அறியாமல் தின்ற யானை பட்டாசு வெடித்து பலத்த காயமடைந்து அந்த சூடு தாங்காமல் அருகேயுள்ள ஆற்று தண்ணீரில் இறங்கி நின்று உயிருக்கு போராடியுள்ளது.

பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் பெண் யானையை மீட்க போராடியுள்ளனர் வனத்துறையினர்.

ஆனால் முயற்சி தோல்வியில் முடிய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த நிகழ்வு நடந்தாலும் சில தினங்கள் ஆனாலும் தற்போது தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மே 27 மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது. பின்னர் அதன் உடலை மீட்டு வன பகுதிக்குள் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவத்தினை வனத்துறை ஊழியர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனைப் பார்த்த அனைரும் சம்பந்தப்பட்டவர்களை மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஆஷிக் அலி என்பவர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளதாவது..

காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக பட்டாசுகளை நிரப்பிய அண்ணாச்சி பழங்களை வயலில் பயன்படுத்துவார்கள்.
உணவு தேடி ஊருக்குள் நுழைந்த யானை அந்த பழத்தை சாப்பிட்டு இருக்கிறது.

யானையின் வாயில் பட்டாசு வெடித்ததையடுத்து யானையின் உடல் நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் யானையால் ஒன்று செய்ய முடியாமல் தவித்துள்ளது.

தன்னுடைய வாயில் ஏற்பட்ட காயத்தை சரி செய்து கொள்ள அல்லது பட்டாசு காயத்தால் ஈக்கள் மற்ற பூச்சுகள் தீண்டுவதை தவிர்க்க யானை நீரில் நின்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Pregnant elephant dies after being fed pineapple stuffed with crackers

பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை சினிமாவாகிறது

பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை சினிமாவாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karnam malleswari biopicதேசிய தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படமாக்கி வருவது தற்போது அதிகரித்து வருகிறது-

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாகிறது.

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கில் ‘ராஜு காடு’ என்கிற படத்தை இயக்கிய சஞ்சனா ரெட்டி இந்தப்படத்தை இயக்க உள்ளார். கோனா பிலிம் கார்ப்பரேஷன் இந்தப்படத்தை தயாரிக்கிறது.

பல மொழிகளில் இந்தப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

கர்ணம் மல்லேஸ்வரியாக நடிக்கப்போவது யார்? என்ற அறிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி தனது 13 வயதில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார்..

2000-ல் சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில் 69 கிலோ. எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே பெண்மணி என்ற பெருமையை பெற்றார். ஆந்திர பிரதேசத்தின் இரும்புப்பெண்’ என்கிற பெருமையும் இவருக்கு உள்ளது.

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் சூர்யா கார்த்தி.?.; குழப்பத்தில் ரசிகர்கள்

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் சூர்யா கார்த்தி.?.; குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya karthiபிரித்விராஜ், பிஜுமேனன் இருவரும் இணைந்த அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாள படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் கைப்பற்றியுள்ளார்.

இதன் ரீமேக்கில சரத்குமார் – சசிகுமார் இருவரும் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது.

பின்னர் சசிகுமார் – ஆர்யா என சொல்லப்பட்டது.

ஆனால் ஆர்யா இதில் நடிக்கவில்லை என மறுத்துவிட்டார்.

இப்போது அண்ணன் தம்பியான சூர்யாவும் கார்த்தியும் இதில் இணைந்து நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது-

ஆனால் இவர்களின் தரப்பும் இதை மறுத்துள்ளது.

இதனால் கோலிவுட் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த யூகங்களுக்கு விரைவில் கதிரேசன் முடிவு கட்டுவார் என நாம் நம்பி காத்திருப்போம்.

டிவி சூட்டிங்கு அரசு அனுமதி விவகாரம்..: SV சேகர் & குஷ்பூ மோதல்

டிவி சூட்டிங்கு அரசு அனுமதி விவகாரம்..: SV சேகர் & குஷ்பூ மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushboo Sve Sekarகொரோனா பொது முடக்கம் தற்போது வரை அமலில் இருந்தாலும் சில தளர்வுகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பை, 60 பேருடன் துவக்க, தமிழக அரசு அனுமதித்துள்ளது.

திருமணத்திற்கு 50 பேர், இறுதிச்சடங்குக்கு 50 பேர் அரசு அனுமதிள்ளது.

ஆனால் சினிமாவுக்கு 60 பேரை அனுமதிக்கலாம் என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ‘டிவி படப்பிடிப்பில், 10 வயதுக்குள் மற்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றக்கூடாது என, அரசு ஏதாவது அறிவிப்பு வெளியிட்டதா’ என, நடிகர் எஸ்.வி.சேகர் ‘டுவிட்டரில்’ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு நடிகை குஷ்பு, ‘சார், இதில் எந்த வயதிலும் நீங்கள் வர மாட்டீர்கள். கவலைப்படாமல் ஓய்வெடுங்கள்’ என, கூறி கிண்டலடித்து உள்ளார்.

அதன் பின்னர் எஸ்.வி. சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர்களின் உரையாடல் இதோ…

எஸ்வி. சேகர்… : இன்றய சூழலில் தொலைக்காட்சித்தொடரில்10 வயதுக்குள், 60 வயதுக்கு மேல் பணியாற்ற கூடாது என அரசின் அறிவிப்பு வந்துள்ளதா

குஷ்பு…: Sir you don’t fit in any of the age group. So you can relax.

எஸ்வி. சேகர்… : Thank u very much for ur concern. I am coming under above 60 group. (26-12-1950). Ok. Now answer my Question

குஷ்பு…: Story and screenplay is done by us and not the govt Sir.. they cannot decide on actors..may god bless you with a long and healthy life.. my love to all at home.

இசைஞானியே வெண்பா இயற்றிய தமிழ் ஞானியே; சீனுராமசாமி வாழ்த்துப்பா

இசைஞானியே வெண்பா இயற்றிய தமிழ் ஞானியே; சீனுராமசாமி வாழ்த்துப்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seenu Ramasamys birth day wishes to Isaignani Ilayarajaஇசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை 77வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இயக்குனர் சீனு ராமசாமி பிறந்த நாள் வாழ்த்தை கவிதையாக கொடுத்துள்ளார்.

இவர்கள் இருவரும் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் மாமனிதன் படத்திற்கு இணைந்து பணி புரிந்து வருகின்றனர்.

இசைக்கு
ஒரு வாழ்த்துப்பா…
………………………………………..

எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப்
பாணனே
மேற்குத்தொடர்ச்சி
மலையிலே
மிதந்து வந்த மேகமே

உமது வருகையை
எதிர்பார்த்து
இசையின் வாசல்
காத்திருந்தது

கருப்பு வெள்ளை
அன்னக்கிளியாள்
பாட்டிசைக்க
எங்கள் இதயத்தில்
வண்ணக்கிளிகள் பறந்தன

அன்று பெய்யத் தொடங்கிய மழை
இசையின் சிரபுஞ்சியானது

தவிலின் நாவுகளைப்
பேச வைத்தாய்
தமிழிசைக்கே அது
முதுகெலும்பானது

உமது மூச்சு
புல்லாங்குழலுக்கு சுவாசம்

உமது வயலின்கள்
சலனப்படமென
எங்கள் சாலைகளை
உயிர்ப்புறச் செய்தது

உமது சங்கீதம் எங்கள்
நினைவுத் தடத்தில்
பூத்த பூ
காலத்தின் பிம்பம்
கடிகாரத்தின்
பென்டுல சப்தம்
தூக்கத்திற்கு முன்
எம்மைத் தீண்டும்
அமைதித் தென்றல்

நீர் ஆர்மோனியத்தில்
விரல் வைத்தீர்
எங்கள் செங்காட்டு பூமியில்
பெயர் தெரியாச்
செடி ஒன்று
பூ பூத்தது

இசைஞானியே
வெண்பா இயற்றிய
தமிழ் ஞானியே
நீர் சுற்றியதால்
கிரிவலம்
இசைத்தட்டானது

எனதன்பு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்…..

இயக்குனர் சீனுராமசாமி

Seenu Ramasamys birth day wishes to Isaignani Ilayaraja

ஒளிப்பரப்பை தொடங்கியது ரஜினி70 டிவி.; முழுக்க முழுக்க ரஜினியிசம் (வீடியோ)

ஒளிப்பரப்பை தொடங்கியது ரஜினி70 டிவி.; முழுக்க முழுக்க ரஜினியிசம் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini 70 TV channel will be available on Astro CH100சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

திரைத்துறையில் என்றும் மங்காத சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாலிவுட் என அனைத்திலும் பல சூப்பர் ஸ்டார்கள் மாறிக் கொண்டே இருக்க ரஜினியோ எவரும் அசைக்க முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

கோலிவுட்டில் ஜெய்சங்கர், சிவகுமார் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்.

கமல், ராமராஜன், மோகன் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

விஜய், அஜித் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

தனுஷ் சிம்பு காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி காலத்திலும் ரஜினியே சூப்பர் ஸ்டார்.

எனவே தான் அவரை பாலிவுட் கான்களே தலைவா என்று அழைக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினி பாடல்கள், படங்கள், ரஜினி பற்றி செய்திகளுக்காகவே பிரத்யேகமாக ரஜினி 70 என்ற டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேனல் மலேசியாவில் தன் ஒளிப்பரப்பை நேற்று ஜீன் 1 முதல் தொடங்கியுள்ளது.

இந்த சேனலின் நம்பர் 100 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ரஜினியே தன் கட்சிக்காக ஒரு புதிய சேனலை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு ரஜினி டிவி, தலைவர் டிவி, அல்லது சூப்பர் ஸ்டார் டிவி என்ற பெயர் வைக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அந்த சேனலின் ஓரிரு காட்சிகள் இதோ….

Rajini 70 TV channel will be available on Astro CH100

More Articles
Follows