தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரளாவில் பிரபலமான பலவற்றில் யானையும் ஒன்று. யானைகள் இல்லாத பெரிய கோயில்களே இல்லை எனலாம்.
திருச்சூர் பூரம் திருவிழா என்றால் யானைகளை பார்ப்பதற்காகவே பெருமளவில் கூட்டம் கூடும். ஆனா அதே கேரளாவில் யானை ஒன்று கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காட்டுள்குள் உணவு கிடைக்காத யானை ஒன்று ஊருக்குள் சுற்றித் திரிந்துள்ளது. அது கர்ப்பிணி யானை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த யானைக்கு மக்கள் சிலர் அண்ணாச்சி பழத்தில் பட்டாசு வைத்து கொடுத்துள்ளனர்.
அதை அறியாமல் தின்ற யானை பட்டாசு வெடித்து பலத்த காயமடைந்து அந்த சூடு தாங்காமல் அருகேயுள்ள ஆற்று தண்ணீரில் இறங்கி நின்று உயிருக்கு போராடியுள்ளது.
பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் பெண் யானையை மீட்க போராடியுள்ளனர் வனத்துறையினர்.
ஆனால் முயற்சி தோல்வியில் முடிய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த நிகழ்வு நடந்தாலும் சில தினங்கள் ஆனாலும் தற்போது தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மே 27 மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது. பின்னர் அதன் உடலை மீட்டு வன பகுதிக்குள் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவத்தினை வனத்துறை ஊழியர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனைப் பார்த்த அனைரும் சம்பந்தப்பட்டவர்களை மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஆஷிக் அலி என்பவர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளதாவது..
காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக பட்டாசுகளை நிரப்பிய அண்ணாச்சி பழங்களை வயலில் பயன்படுத்துவார்கள்.
உணவு தேடி ஊருக்குள் நுழைந்த யானை அந்த பழத்தை சாப்பிட்டு இருக்கிறது.
யானையின் வாயில் பட்டாசு வெடித்ததையடுத்து யானையின் உடல் நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் யானையால் ஒன்று செய்ய முடியாமல் தவித்துள்ளது.
தன்னுடைய வாயில் ஏற்பட்ட காயத்தை சரி செய்து கொள்ள அல்லது பட்டாசு காயத்தால் ஈக்கள் மற்ற பூச்சுகள் தீண்டுவதை தவிர்க்க யானை நீரில் நின்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Pregnant elephant dies after being fed pineapple stuffed with crackers