காலாவுக்காக பேச மாட்டாரா கமல்; அப்போ விஸ்வரூபம்.. பிரகாஷ்ராஜ் கேள்வி

காலாவுக்காக பேச மாட்டாரா கமல்; அப்போ விஸ்வரூபம்.. பிரகாஷ்ராஜ் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prakash Raj reaction towards Kamalhassan on Kaala ban in Karnatakaரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திற்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

படத்தின் வெளியீடு அன்று அதாவது வருகிற ஜீன் 7ஆம் தேதி படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து காவிரி நீர் தொடர்பாக ரஜினியின் நெருங்கிய நண்பர் கமல் பேசினார்.

அப்போது கர்நாடகாவில் காலா ரிலீஸ் தொடர்பான பிரச்சினை குறித்து கேட்டதற்கு காலா இப்போது முக்கியமல்ல. மக்கள் பிரச்சினையான காவிரிதான் முக்கியம் என பேசியிருந்தார்.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது….

ஒரு திரைப்பட கலைஞராக கமல் அப்படி சொல்லியிருக்க கூடாது. விஸ்வரூபம் படத்தின் பிரச்சினையின் போது எல்லாரும் துணை நிற்க வேண்டும் என அவர் எதிர்பார்த்தார்.

ஆனால் தற்போது அது அவருக்கு தேவையில்லாத பிரச்சினையாக போய்விட்டது. ஆனால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் என்ற முறையில் நான் நிச்சயம் பேச வேண்டும்.

அரசியலும் சினிமாவும் வேறு வேறு. இப்படி இரண்டையும் இணைத்து பார்க்க கூடாது” என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பின்குறிப்பு; கமல் நடித்த விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில் தடை ஏற்பட்ட போது இஸ்லாமிய அமைப்புகளுக்கு 2013ல் ரஜினிகாந்த் கடிதம் எழுதியிருந்தார்.

அதில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த கமல் என்ற மகா கலைஞனின் படத்தை தடை செய்ய கூடாது என வலியுறுத்தியிருந்தார்.

இந்த கடிதத்தை ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Prakash Raj reaction towards Kamalhassan on Kaala ban in Karnataka

கேப்டன் வாழ்த்தால் பெருமிதம் அடையும் புதுமாப்பிள்ளை சௌந்தர ராஜா

கேப்டன் வாழ்த்தால் பெருமிதம் அடையும் புதுமாப்பிள்ளை சௌந்தர ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Captain Vijayakanth wishes to new married couple Soundararaja and Tamannaநடிகர் சௌந்தர ராஜாவிற்கும் தமன்னாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவரது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, விஷால், அருண் விஜய் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

இந்நிலையில், விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றிருக்கிறார் சௌந்தரராஜா. இதுபற்றி சௌந்தரராஜா கூறுகையில்,

‘தமிழ் சினிமாவின் மிக அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சக மனிதரிடத்திலும் சினிமா குடும்பத்தினரிடமும் கேப்டன் அவர்கள் காட்டும் அன்பில் அவர் மிக உயர்ந்த மனிதர்.

அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவரிடம் நானும் என் மனைவியும் வாழ்த்துப்பெற்றதை பெருமிதமாக உணர்கிறேன்.

என்னையும் என் மனைவியையும் அன்போடு வாழ்த்திய விஜயகாந்த் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

Captain Vijayakanth wishes to new married couple Soundararaja and Tamanna

காலாவை விட காவிரி முக்கியம்; முதல்வர் முன்னிலையில் கமல் பேச்சு

காலாவை விட காவிரி முக்கியம்; முதல்வர் முன்னிலையில் கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cauvery water issue more important than Kaala release in Karnataka says Kamalகாவிரி பிரச்சனையில் நீர் வரத்து குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு சென்றார்.

இதையடுத்து, இன்று காலை அவர் குமாரசாமியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திலை வைத்து நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது கமல் கூறியதாவது,

“நான் மக்கள் பிரதிநிதியாக வந்துள்ளேன். நாங்கள் காவிரி உட்பட பல பிரச்சனைகள் குறித்து பேசினோம்.

இது கூட்டணிக்கான சந்திப்பு கிடையாது. குறுவை சாகுபடி தொடங்க இருக்கிறது.

(ரஜினிகாந்த் நடித்துள்ள) காலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது இப்போது தேவையற்றது. அதுபற்றி பேசவும் இல்லை. படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம்” என்றார்.

அப்போது குமாரசாமி கூறியதாவது:-

“இருமாநில விவசாயிகளையும் பாதிக்காதவாறு தமிழக அரசுடன் பேச்சு நடத்தி முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Cauvery water issue more important than Kaala release in Karnataka says Kamal

காக்க வருகிறாரா.? அழிக்க வருகிறாரா காலா.? கன்ப்யூஷனில் ரசிகர்கள்

காக்க வருகிறாரா.? அழிக்க வருகிறாரா காலா.? கன்ப்யூஷனில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala movie Rajinikanth punch dialogue and fans reactionரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனை முன்னிட்டு காலா படம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் மேக்கிங் வீடியோ ஆகியவை வெளியாகி வருகிறது.

அண்மையில் கண்ணம்மா என்ற பாடலின் புரமோ வெளியிடப்பட்டது.

மேலும் மற்றொரு புரோமோவில், “நான் காலன், எமன், எமராஜ்” என்று ரஜினி பேசும் டயலாக்கும் பாப்புலாராகி வருகிறது.

இந்த படடத்தில் தன் குப்பத்தை சேர்ந்த மக்களை காக்க காலா இருக்கிறார் என்ற தகவல்கள் வந்தன.

தற்போது நான் எமன் எமராஜ் என்று ரஜினி பேசியுள்ளார். எமன் என்றால் அழித்து விடுபவன். உயிரை எடுப்பான் என்று பொருள்படும்.

அப்படியென்றால் காலா காக்க வருகிறாரா? அழிக்க வருகிறாரா? என்ற சந்தேகம் எழலாம்.

கெட்டவர்களை அழித்து நல்லவர்களை காக்க வருகிறாராம் இந்த காலா என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

Kaala movie Rajinikanth punch dialogue and fans reaction

தாய் வயித்துல பொறக்கலடா.; நான் பூதம்டா… ரசிகர்களை மிரட்டிய விக்ரம்

தாய் வயித்துல பொறக்கலடா.; நான் பூதம்டா… ரசிகர்களை மிரட்டிய விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikrams Saamy Square trailer release updatesஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் விக்ரம் கீர்த்தி சுரேஷ், சூரி, பாபி சிம்ஹா,இ பிரபு, ஜான் விஜய், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இதன் டிரைலர் நேற்று வெளியானது.

இந்த டிரைலர் வெளியானது முதலே கலவையான விமர்சனங்கள் சந்தித்து வருகிறது.

பன்ச் என்ற பெயரில் விக்ரம் சாமி பூதம் என கடுப்பேற்றி விட்டார் என நடுநிலை ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் விக்ரம் ரசிகர்கயோ சாமி மீண்டும் கலக்குவார் என்கிறார்கள்.

இதுவரை 30 லட்சத்திற்கு மேற்பட்டோர் இந்த டிரைலரை பார்த்துள்ளனர்.

இதில் விக்ரம் பேசும் வசனமான, ‘நான் தாய் வயத்தில பொறக்கலடா… பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்லடா… பூதம்’ என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளதாம்.

Vikrams Saamy Square trailer release updates

மனோரமா இடத்தை பிடிக்க ஆசைப்படும் மலையாள நடிகை கலா

மனோரமா இடத்தை பிடிக்க ஆசைப்படும் மலையாள நடிகை கலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wish to became like Aachi Manorama says Kalaகேரள மாநிலத்தில் பிறந்த இவர், கலைத்துறையில் நடன இயக்குனராகவும் மாடலிங் துறையிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார் நடிகை கலா.

பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கூடியதால் “கருத்த முத்து” மற்றும் “நீலக்குயில்” ஆகிய பிரபல மலையாள சின்னத்திரை தொடர்களிலும், சில மலையாள படங்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.

மேலும் “நீதானா அந்த குயில்” என்ற தமிழ் திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் தற்போது “எதையும் செய்யோம்” உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடன இயக்குனராகவும், குணச்சித்திர நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.

கேரள நாட்டில் பிறந்தாலும் தமிழ் திரைப்படத்தை அதிகம் நேசிக்கும் இவர் ஆச்சி மனோரமாவின் நடிப்பை பார்த்து வியந்து அவரது ரசிகையாகவே மாறி விட்டாராம்.

அவரை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க ஆசைப்பட்ட இவரின் ஆசை நிறைவேறாமல் போனதை எண்ணி வருந்திய இவர் ஆச்சி மனோரமாவைப் போல ஒரு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாக தமிழ்த்துறையில் வலம் வர வேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார்.

வாழ்த்துக்கள் கலா.

I wish to became like Aachi Manorama says Kala

More Articles
Follows