பிரபுதேவா சத்யராஜ் நயன்தாரா காஜல் அகர்வால் கூட்டணி.; 8 படங்களை தயாரிக்கும் அபிஷேக் பிலிம்ஸ்

பிரபுதேவா சத்யராஜ் நயன்தாரா காஜல் அகர்வால் கூட்டணி.; 8 படங்களை தயாரிக்கும் அபிஷேக் பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பில்

பிரபுதேவா, சத்யராஜ், நயன்தாரா, காஜல் அகர்வால், ரம்யாகிருஷ்ணன், லட்சுமி ராய், அனுசுயா நடிப்பில்

டான்சேண்டி – ராகவன் – ராஜா சரவணன் – கல்யாண் – விப்பின்,
இயக்கத்தில் 8 புதிய கதையம்சமுள்ள, பிரமாண்டமான படங்கள்.

பிரபுதேவா நடிப்பில் மூன்று படங்கள், நயன்தாரா நடிப்பில் இரண்டு படங்கள், காஜல் அகர்வால் நடிப்பில் ஒரு படம்.

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி–1, சென்னை–28 2ம் பாகம், இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி.பிள்ளை தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக 8 புதிய படங்களை தயாரிக்கிறார்.

சமீபத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சசி இயக்கத்தில்
சிவப்பு – மஞ்சள் – பச்சை என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெற்றி பெற்றதுடன் தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மற்றும் ‘திரிஷ்யம்’ பட வெற்றி கூட்டணியான மோகன்லால் – ஜீத்து ஜோஸப் மற்றும் திரிஷா நாயகியாக நடிக்க மும்மொழிகளில் உருவாகும் ‘ராம்’ படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

நல்ல கதைகளும், உணர்வுப்பூர்மான காட்சியமைப்புகளும் என்றென்றும் வெற்றிபெறும் என்ற ஃபார்முலாவில் விநியோகம், தயாரிப்பு என தொடர்ந்து செய்து வரும் ரமேஷ் பி.பிள்ளை இன்றைய சூழலில் மட்டுமல்ல எந்த சூழலிலும் இந்த ஃபார்முலா வெற்றி பெறும் என உறுதிபட முடிவெடுத்து சினிமா மீது உள்ள பேஷன் மற்றும் திறமையான கலைஞர்களை வெளிக்கொண்டு வரும் முடிவில் நல்ல கதையம்சத்தோடு, காட்சிக்கு தேவையான பிரம்மாண்டமான பொருட்செலவில் 8 புதிய படங்களை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.

Prabhu Deva and Nayanthara joins for a new film

பிளாக்செயின் பின்னணியில் பாடல்களை ஏலம் விடும் ஜி.வி.பிரகாஷ்

பிளாக்செயின் பின்னணியில் பாடல்களை ஏலம் விடும் ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைனான்ஸ் ஆப்பில் பாடல்களை ஏலத்தில் விடுகிறார் ஜி.வி.பிரகாஷ்.

டிஜிட்டல் உலகில் இது புது முயற்சி. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக என்எஃப்டி முறையில் ஏலம் விடுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

6 பாடல்களை அவர் ஏலம் விடுகிறார். அதன் ஆரம்ப விலையாக 5 எரித்தீயம் என நிர்ணயித்துள்ளார்.

டிஜிட்டல் சொத்துகளுக்கு முக்கியத்துவம் பெருகிவரும் சூழலில் என்எஃப்டி பற்றி புரிந்துகொண்டால் ஜிவி பிரகாஷின் முயற்சியும் புரியும்.

இதன் பின்னணியில் இருப்பது பிளாக்செயின் தொழில்நுட்பம்.

பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கிரிப்டோகரன்ஸி, என்எஃப்டி போன்றவை செயல்படுகிறது.

பரிமாற்றம் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால் வங்கிகள் போன்ற இடைத்தரக அமைப்புகளின் தேவையை பிளாக்செயின் தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடுகிறது. ஆனால், பிட்காயினைவிட என்எஃப்டி சற்றே வித்தியாசமானது.

ஒவ்வொரு என்எஃப்டிக்கும் ஒரு மதிப்பு. ஒரு பிட்காயினைக் கொடுத்து இன்னொரு பிட்காயின் வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு என்எஃப்டியைக் கொடுத்து இன்னொரு என்எஃப்டி வாங்க முடியாது.

என்எஃப்டி முதன்முதலாக 2017-ம் ஆண்டு கிரிப்டோகிட்டீஸ் என்ற ஆன்லைன் கேமில் தான் அறிமுகமானது.

அந்த ஆன்லைன் கேமில் வரும் பூனைகளை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இப்படித்தான் என்எஃப்டி நடைமுறைக்கு வந்தது.

பூனையில் ஆரம்பித்தது தற்போது மெய்நிகர் ரியல் எஸ்டேட் அளவு வளர்ந்து இருக்கிறது.

தற்போது நிஜ உலகில் நிலம் வாங்குவது எல்லாம் பழைய கதையாக மாறிவிடும் அளவுக்கு மெய்நிகர் உலகில் (virtual reality) நிலம் வாங்கும் போக்கு ஆரம்பமாகி இருக்கிறது.

இதைத்தான் இப்போது ஜிவி பிரகாஷ் முயற்சித்திருக்கிறார். மெய்நிகர் உலகில் தனது படைப்புகளை அவர் ஏலம் விடுகிறார்.

GV Prakash becomes first music director in India to auction songs

ரஹ்மானின் சினிமா வாழ்க்கைக்கு ‘புது புது அர்த்தங்கள்’ கொடுத்த இயக்குனர் சிகரம்

ரஹ்மானின் சினிமா வாழ்க்கைக்கு ‘புது புது அர்த்தங்கள்’ கொடுத்த இயக்குனர் சிகரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor rahmanஇன்று கே பாலசந்தர் சாரின் 91 – வது பிறந்த நாள்.

என் வாழ்கையில் மறக்க முடியாத, நான் என்றும் வணங்கும் குருநாதருக்கு நிகரானவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள்.

ஒவ்வொரு நடிகனும் நடிகையும் அவரது படத்தில் முகம் காட்ட ஆசையுடன் காத்திருந்த காலத்தில் தான் எனக்கு வரமாக அவரது புது புது அர்த்தங்கள் என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஏற்கனவே நான் தமிழ் சினிமாக்களில் நடித்திருந்தாலும் இந்த படம் எனக்கு தென்னிந்திய சினிமாவில் ஒரு தனி அடையாளத்தை கொடுத்து , என் சினிமா வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்பதில் நன்றியுடன் பெருமைப்படுகிறேன்.

கேபீ சாரின் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே பாக்யம் என்றிருக்க எனக்கு மீண்டும் அவரது பாடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிஷ்டம்.,!
அவருடைய எல்லா படங்களுமே காலத்தை வென்று நிற்பவை.

இன்றும் தினமும் ரசிகர்களிடமிருந்து புது புது அர்த்தங்ள் படத்துக்கு பாராட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது.

கேபீ சார் நம்முடன் இல்லை
என்றாலும் அவர் என்னை போன்ற கலைஞ்ர்கள் மனதிலும் ரசிகர்கள் மனதிலும் என்றென்றும் வாழ்கிறார்.

– Actor Rahman

Actor Rahman remember his idol on his birth anniversary

OFFICIAL ஜூலையில் ஓடிடி-யில் ரிலீசாகும் சிவகார்த்திகேயன் & ஆர்யா படங்கள்

OFFICIAL ஜூலையில் ஓடிடி-யில் ரிலீசாகும் சிவகார்த்திகேயன் & ஆர்யா படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா, சத்யராஜ் நடித்த ‘கனா’ மற்றும் ரியோ நடித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஆகிய படங்களை தயாரித்து வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.

இவை இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது இவர் தயாரித்துள்ள 3-வது படம் ‘வாழ்’.

இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கி உள்ளார்.

கடந்த ஒரு வருடமாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்த நிலையில் இப்படத்தை ஜூலை 16ல் சோனி லைவ் செயலி மூலம் உலகமெங்கும் ரிலீஸ் செய்கின்றனர்.

நாளை ஜூலை 09ல் இசை மற்றும் ட்ரைலரை வெளியிடவுள்ளதாக சற்றுமுன் அறிவித்தனர்.

அதுபோல் பாக்ஸராக ஆர்யா நடித்துள்ள ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தை ஜூலை 22ல் அமேசான் ப்ரைமில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கபாலி, காலா போன்ற படங்களை அடுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் ரஞ்சித்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ரஞ்சித்தே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அமேசான் ஓடிடியில் தங்களது ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தை நேரடியாக ரிலீஸ் செய்ய முடிவு செய்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyan and Arya films to release in OTT

முதன்முறையாக ஜெயம் ரவியுடன் டூயட் பாட ரெடியாகும் பிரியா பவானி சங்கர்

முதன்முறையாக ஜெயம் ரவியுடன் டூயட் பாட ரெடியாகும் பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூமி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘பூலோகம்’ இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி.

(பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் குறுகிய கால படப்பிடிப்பில் நடிக்க விரும்புகிறாராம் ரவி)

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ஜூலையில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இது உறுதியானால் ஜெயம் ரவி – ப்ரியா பவானி சங்கர் இணையும் முதல் படமாக இது அமையும் என எதிர்ப்பார்க்கலாம்.

Jayam Ravi to romance Priya Bhavani Shankar

மீண்டும் இணையும் ஹாட்ரிக் கூட்டணி.; தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள் இவர்கள் தான்

மீண்டும் இணையும் ஹாட்ரிக் கூட்டணி.; தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள் இவர்கள் தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர்.

இவை மூன்றும் ஹாட்ரிக் ஹிட் படங்களாக அமைந்தன.

தற்போது மீண்டும் தனுஷுடன் மீண்டும் இணைய உள்ளார் மித்ரன் ஜவஹர்.

இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.

கடந்த 5-6 ஆண்டுகளாக அனிருத்தும் தனுஷும் இணைந்து பணிபுரியவில்லை.

இந்த நிலையில், இதில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷ் – ஹன்சிகா ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தனர்.

Dhanush to act in this hit director direction?

More Articles
Follows