பாகுபலி2 வசூல் 1000 கோடி; ராஜமவுலிக்கும் ரசிகர்களுக்கும் பிரபாஸ் நன்றி

பாகுபலி2 வசூல் 1000 கோடி; ராஜமவுலிக்கும் ரசிகர்களுக்கும் பிரபாஸ் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali Prabhasஇந்திய சினிமாவில் எந்த சினிமாவும் செய்யாத சாதனை பாகுபலி 2 விரைவில் செய்யும் என்பதை முன்பே பார்த்தோம்.

கடந்த ஏப்ரல் 28ல் வெளியான இப்படம் நேற்றோடு (மே 6, 2017) ரூ. 1000 கோடியை வசூலித்துள்ளது.

இந்த வசூல் தகவலை பாகுபலி படக்குழு உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து இப்பட நாயகன் பிரபாஸ் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

என்னை அன்பு மழையால் நனைய வைத்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் என் அன்பை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் அன்பை ஈடுகட்ட என்னால் முடிந்த கடின உழைப்பை கொடுத்து பாகுபலி 2 படத்தில் நடித்தேன்.

என் மீது நம்பிக்கை வைத்து, இந்த வரலாற்று படைப்பில் எனக்கொரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் ராஜமௌலிக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார் பிரபாஸ்.

Prabhas thanks to Fans and Rajamouli for Baahubali2 collects 1000 crores

1000c baahubali2

‘ரஜினி அரசியலுக்கு வந்தால் சிறந்த தலைவராக இருப்பார்’ – நக்மா

‘ரஜினி அரசியலுக்கு வந்தால் சிறந்த தலைவராக இருப்பார்’ – நக்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Nagma meetசுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினி – நக்மா நடிப்பில் வெளியாகி தமிழக சினிமாவை அரசியலையும் கலக்கிய படம் பாட்ஷா.

இப்படம் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியானது. அண்மையில் இதன் டிஜிட்டல் வெர்ஷனும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இன்று நக்மா ரஜினியை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து, நடிகை நக்மா கூறியதாவது…

“ரஜினி என்னுடைய நண்பர். அவரை நட்பு ரீதியாக சந்திக்க வந்தேன்.

நாங்கள் அரசியல் குறித்து பேசவில்லை. ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது.

அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது. நிச்சயம் வெற்றி பெறுவார், சிறந்த தலைவராக இருப்பார். என்பது என் தனிப்பட்ட கருத்து” என்றார்.

இவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Everyone Wish Rajini must enter in Politics says Nagma

rajini nagma meet

‘காதல் கண் கட்டுதே’ கதாநாயகனுக்கு கல்யாணம்

‘காதல் கண் கட்டுதே’ கதாநாயகனுக்கு கல்யாணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadhal Kan Kattudhe hero KG marriageகாதல் கண்கட்டுதே என்ற பெயரிடப்பட்ட படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதற்கு முக்கிய காரணம் படத்தின் நாயகன் கே.ஜி. மற்றும் நாயகி அதுல்யாவின் கெமிஸ்ட்ரிதான்.

இதன் பாடல்கள் மற்றும் இப்படம் வெளியாகி காதலர்களின் ஆதரவை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகன் KG விரைவில் திருமணம் செய்யவிருக்கிறாராம். இதனை அவரே தெரிவித்து இருக்கிறாராம்.

சாப்ட்வேர்ட் இன்ஜினியரான நந்தினி ஸ்ரீனிவாசன் என்ற பெண்ணை மணமுடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Kadhal Kan Kattudhe hero KG getting married

வைரலாகும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட ஸ்டில்கள்

வைரலாகும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட ஸ்டில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theeran adhigaram ondruதோழா, காஷ்மோரா ஆகிய படங்கள் கார்த்தியின் கேரியரில் மிகப் பெரிய பங்கை வகுத்த நிலையில் காற்று வெளியிடை படத்தில் ஒப்புக் கொண்டார்.

மணிரத்னம் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

இதனையடுத்து தற்போது சதுரங்க வேட்டை பட இயக்குனர் இயக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார்.

‘சிறுத்தை’ படத்திற்கு பிறகு இதில் மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக ராகுல் பிரித்தி சிங் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இவை தற்போது வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் விஷால், சாயிஷா உடன் நடிக்கவிருக்கிறார் கார்த்தி.

Karthi starring Theeran Adhigaram Ondru stills goes viral

முதன் முறையாக சிரஞ்சீவி ஜோடியாக ஐஸ்வர்யா ராய்

முதன் முறையாக சிரஞ்சீவி ஜோடியாக ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rai to romance Chiranjeevi in Uyyalawada Narasimha Reddyமுன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமா ஐஸ்வர்யா ராய், குழந்தை பெற்றபின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

தவிர்க்க முடியாத வேடங்களில் மட்டும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன் முறையாக தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

’கைதி நம்பர் 150’ படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிக்க உள்ள ஒரு வரலாற்றுப் படத்தில்தான் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

”உய்யலவாடா நரசிம்ம ரெட்டி” என்ற சுதந்திர போராட்ட வீரரின் கதைதான் இப்படம் என தெரிய வந்துள்ளது.

Aishwarya Rai to romance Chiranjeevi in Uyyalawada Narasimha Reddy

‘பாகுபலி’ விஜயேந்திர பிரசாத்-லாரன்ஸ் கூட்டணியில் காஜல் அகர்வால்

‘பாகுபலி’ விஜயேந்திர பிரசாத்-லாரன்ஸ் கூட்டணியில் காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence to romance Kajal Aggarwal in his next‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மற்றும் ‘சிவலிங்கா ஆகிய படங்களை முடித்துவிட்டு தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் லாரன்ஸ்.

இப்படத்தை பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் உதவி இயக்குனர் மகாதேவ் இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்திற்கு ‘பாகுபலி’ புகழ் கதை ஆசிரியரும் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் நாயகியாக பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Raghava Lawrence to romance Kajal Aggarwal in his next

More Articles
Follows