சூப்பர் ஸ்டார் எப்போ வர்றாரோ; ஆனால் பவர் ஸ்டார் இப்போ வந்துட்டார்..

சூப்பர் ஸ்டார் எப்போ வர்றாரோ; ஆனால் பவர் ஸ்டார் இப்போ வந்துட்டார்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துவிட்டார். சட்டமன்ற தேர்தலே என் இலக்கு எனவும் தெரிவித்து விட்டார்.

ஆனால் இப்போது அரசியல் களத்தில் பவர் ஸ்டார் குதித்துள்ளார்.

தமிழக மக்களால் பவர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் சீனிவாசன்.

இவர் பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளார்.

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது… , “1½ ஆண்டுகளுக்கு முன்பே நான் இந்திய குடியரசு கட்சியில் (அத்வாலே) இணைந்துள்ளேன். கட்சி துணைத்தலைவராக இருக்கிறேன்.

தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற உள்ளேன். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன்.

மற்ற நடிகர்களை போல் பதுங்காமல், நான் துணிந்து களம் காண்கிறேன். இந்த பவர்ஸ்டாரை மக்கள் ஆதரிப்பார்கள்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிம்புவின் ‘மாநாடு’ படம் நிறுத்தம்..? சுரேஷ் காமாட்சி விளக்கம்

சிம்புவின் ‘மாநாடு’ படம் நிறுத்தம்..? சுரேஷ் காமாட்சி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

இப்படத்தை தொடர்ந்து ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு.

இதில் சிம்புவுடன் ஜெய் மற்றும் ராஷி கண்ணா நடிக்கவுள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கவுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது..

இதுகுறித்து இப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது…

‘வதந்திகளை நிறுத்துங்கள். ஒரு படத்தை தொடங்குவது அவ்வளவு எளிதானது அல்ல. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என கூறியுள்ளார்.

‘காப்பான்’ பிரதமருடன் நடித்தது மகிழ்ச்சி.. சூர்யா ஓபன் டாக்

‘காப்பான்’ பிரதமருடன் நடித்தது மகிழ்ச்சி.. சூர்யா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, சாயிஷா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் காப்பான்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் மோகன்லால் தனக்கான காட்சிகளை முடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்துக்காக மோகன்லாலின் முகநூல் பக்கத்தில் இருந்து லைவ் வீடியோ ஒன்றுவெளியானது.

இதில் மோகன்லால் மற்றும் சூர்யா கலந்துக் கொண்டனர்.

அப்போது சூர்யா பேசும்போது… ’பிரதமராக மோகன்லால் சார் நடித்திருக்கிறார். அவரைப் பாதுகாக்கும் கமாண்டோ வீரராக நான் நடித்திருக்கிறேன்.

மோகன்லால் சாரோடு நடித்தது பெரும் மகிழ்ச்சி. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என சூர்யா பேசினார்.

விமல் – வரலட்சுமி இணைந்துள்ள கன்னிராசி படத்திற்கு யு சர்ட்டிபிகேட்

விமல் – வரலட்சுமி இணைந்துள்ள கன்னிராசி படத்திற்கு யு சர்ட்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)விமல் மற்றும் வரலட்சுமி இணைந்து நடித்துள்ள படம் ‘கன்னிராசி’.

இவர்களுடன் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

முத்துக்குமரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இப்பட சூட்டிங் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலைல் சென்சாரில்ல் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

எனவே விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை எதிர்பார்க்கலாம்.

தன் மகன் சூர்யாவை திருடனாக அறிமுகப்படுத்தும் விஜய்சேதுபதி

தன் மகன் சூர்யாவை திருடனாக அறிமுகப்படுத்தும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் சினிமாவில் அறிமுகமாகிறார். அதன் பற்றிய விவரம் வருமாறு…

விஜய்சேதுபதி, அஞ்சலி இணைந்து நடிக்கும் படம் சிந்துபாத்.

இப்படத்தை அருண்குமார் என்பவர் இயக்குகிறார்.

இவர் விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கியவர்.

இதில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்யும் சிறுவனாக நடிக்கிறார்.

மேலும் சேதுபதி திரைப்படத்தில் நடித்த லிங்காவும் இதில் நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னாவும் நடிக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

எளிமையாக வாழ நினைக்கும் ஒருவனுக்கு இந்த சமூகம் தடையாக உள்ளது என்பதையும், அதற்கான தீர்வையும் சொல்லும் படமாக இது இருக்குமாம்.

‘அக்னி தேவி’யில் நான் நடிக்கலே.. பாபி சிம்ஹா போலீசில் புகார்

‘அக்னி தேவி’யில் நான் நடிக்கலே.. பாபி சிம்ஹா போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)ஜான் பால்ராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி தயாரித்துள்ள படம் அக்னி தேவி.

இதில் பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜாக்கீஸ் பிஜாய் இசையமைக்க, ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நாளை மறுநாள் 22ந் தேதி படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அக்னி தேவி படத்தில் நான் நடிக்கவில்லை என படத் தயாரிப்பாளர் மீது பாபிசிம்ஹா பரங்கிமலை காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில்…

கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் இயக்கும் அக்னிதேவி (அக்னிதேவ் என்று முன்பு பெயரிட்டு இருந்தனர்) படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். 5 நாட்கள் தான் நடித்தேன்.

என்னிடம் சொல்லப்பட்ட கதையை மாற்றி வேறு மாதிரி எடுத்தனர். எனவே காட்சிகளை போட்டு காட்ட கூறினேன். ஆனால் காட்டவில்லை. எனவே படத்திலிருந்து விலகி விட்டேன்.

இது தொடர்பாக கோவை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது படத்தின் பெயரை அக்னி தேவி என்ற பெயரில் மாற்றி வருகிற 22ந் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்து விளம்பரம் செய்து வருகின்றனர்.

விளம்பரங்களில் என்னுடைய போட்டோக்களும் உள்ளது.

மேலும் எனக்கு பதிலாக டூப் போட்டு சில காட்சிகளை எடுத்து கிராபிக்ஸ் செய்துள்ளனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜான்பால்ராஜ் மீது ஆள்மாறாட்டம், மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் அக்னிதேவி படம் 22ந் தேதி வருமா? எனத் தெரியவில்லை.

More Articles
Follows