தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கும் ‘பவர்பாண்டி’ படத்தை தனுஷ் இயக்கவிருக்கிறார்.
இதில் பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்டோர் நடிக்க, சீன் ரோல்டான் இசையமைக்கிறார்.
ராஜ்கிரணின் மனைவியாக நதியா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக பணிபுரியும் கலைஞர்களை பற்றிய படம்தான் இது என தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த கலைஞர்களுக்கு வயதான பிறகு அவர்களின் வாழ்க்கை முறையை பற்றியும் சொல்லவிருக்கிறார்களாம்.
இப்படத்தின் இயக்குனர் தனுஷை ராஜ்கிரண் செல்லமாக மருமகன் என்றுதான் அழைப்பாராம்.