ரஜினி ஒரு பணம் காய்க்கும் மரம்.. போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.. – ‘ஜென்டில்மேன் KT குஞ்சுமோன்

ரஜினி ஒரு பணம் காய்க்கும் மரம்.. போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.. – ‘ஜென்டில்மேன் KT குஞ்சுமோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthரஜினி மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, என ஓரிரு தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார்.

அவரின் முடிவை வரவேற்று அறிக்கை வெளியிட்டுட்டுள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஜென்டில்மேன் ‘KT குஞ்சுமோன்.

அவரது அறிக்கை இதோ…

மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு.. அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

உலகமெங்கும் வாழும் அவரது அனைத்து ரசிகர்களையும் மகிழச் செய்திருக்கும் என்பது நிச்சயம்.

சூப்பர் ஸ்டாரின் முடிவு, தெளிவான சிந்தனை, வருடத்திற்கு அவரது இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால்தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர்களும் மகிழ்வார்கள்.

சினிமா செழிக்கும், வியாபாரம் சிறக்கும்.
அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக்கிறது.

இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங்களில் தேனை வார்க்கிறது.

ஒரு விநியோகஸ்தராக, ‘தங்கமகன்’, ’மூன்று முகம்’, படிக்காதவன்’, ’ஊர்க்காவலன்’, ’எஜமான்’, போன்ற அவரது நடிப்பில் வெளியான பல படங்களை நான் வெளியிட்டுள்ளேன்.

என்னைப் போலவே எத்தனையோ தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களால் லாபம் சம்பாதித்துள்ளனர்.

அவருடனான எனது பழக்கம் 40 வருடங்களுக்கும் மேலானது.

சினிமாவில் ரஜினி ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப் புதையல், அனைவராலும் போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

பூரண ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் நலத்தோடும், அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். சினிமாவின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.!

*வெல்டன் அண்ணாத்த.!*

Popular producer KT Kunjumon praises super star Rajinikanth

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குனருடன் பிரபுதேவா வரலட்சுமி ரைசா கூட்டணி

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குனருடன் பிரபுதேவா வரலட்சுமி ரைசா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், இயக்குனருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் புதிய படம் இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.

‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் இப்பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார் தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

Prabhu Deva and raiza joins for director Santhosh’s next

WEEK END STRESS BUSTER..; ‘ஜீன்ஸ்’ பிரசாந்த்திற்கு பிறகு ‘ரேணிகுண்டா’ நிஷாந்த்

WEEK END STRESS BUSTER..; ‘ஜீன்ஸ்’ பிரசாந்த்திற்கு பிறகு ‘ரேணிகுண்டா’ நிஷாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஊரடங்கு, சமூக விலகல், மாஸ்க்குகளிலிருந்து விடுபட்டு மக்கள் வாழ்க்கையைக் கொண்டாட நண்பர்கள் ஆண்டனி வாங் மற்றும் ரேமண்டுடன் சேர்ந்து பாப் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

‘ரேணிகுண்டா’ நிஷாந்த் மோஹந்தாஸ்.
ஜீன்ஸ் படத்தில் ‘கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு’ பாடலுக்குப் பின் பிரத்யேகமாக விடுமுறையக் கொண்டாட பாடல் இல்லையே என்ற ஏக்கத்தை தங்களின் பாப் பாடல் நிறைவேற்றும் என்று அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

நான் ‘ரேணிகுண்டா’ படத்தில் அறிமுகமானேன். அந்தப் படம் எனக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தது. அதன் பின்னர் நிறைய படங்கள் நடித்துவிட்டேன்.

ஆனால், இயல்பில் நான் ஒரு நடனக்கலைஞர். எனது நடனத் திறமையை சினிமாத்துறையில் நிரூபிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.

ஆனால் அதற்கான வாய்ப்பு திரையில் இதுவரை அமையவில்லை.
அப்போதுதான் ஆல்பம் தயாரிக்கும் யோசனை வந்தது.
இசையமைப்பாளர் V2 விஜய் விக்கி மற்றும் பினு ஜேம்ஸுடன் பேசினேன்.

நானும், அண்டனியும், ரேமண்டும் வெறும் நடனமாக யோசித்து வைத்திருந்த ஒரு திட்டத்துக்கு இசையமைத்து உயிர் கொடுத்தார் V2 விஜய் விக்கி.

பினு ஜேம்ஸ் தயக்கமேதுமின்றி தயாரிப்பில் இறங்கினார். எங்கள் கூட்டு முயற்சியில் வீக் எண்ட் ‘கே பாப்’ ஸ்டைலில் ஆல்பம் உருவாகிவிட்டது.

பாப் ஆல்பம் வீடியோ உருவாக்க வேண்டும் என்பது எங்களின் கனவு. வீக் எண்ட் மூலம் அதை நிறைவேற்றியுள்ளோம்.

எல்லா பாப் ஆல்பங்களிலும் வெஸ்டர்ன் ஸ்டைல் உருவாக்கத்தின் தாக்கம் தான் இருக்கும். ஆனால், நாங்கள் ஆசிய ஸ்டைல் மேக்கிங் தாக்கத்தோடு ‘கே பாப்’ ஸ்டைலில் ஆல்பம் உருவாக்கியுள்ளோம்.

என்னுடன் இந்த ஆல்பத்தில் ஆண்டனி வாங், ரேமண்ட் இணைந்து நடனமாடியுள்ளனர். பாடல் வரிகளை கு.கார்த்தி இயற்றியுள்ளார்.

V2 விஜய் விக்கி இசையமைத்துள்ளார்.கவுசிக் கிரிஷ் பாடியுள்ளார். ஆண்டனி வாங் நடனத்தை வடிவமைத்துள்ளார்.

நான் தான் ஆல்பத்தை இயக்கியுள்ளேன். பினு ஜேம்ஸ் தயாரித்துள்ளார். அஷ்வந்த் தயாள் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலரிஸ்டாக சுரேஷ் ரவி பணியாற்றியுள்ளார்.

எடிட்டிங் வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் தீபக் துவாரக்நாத். இந்த ஆல்பம் உருவாக்கத்தில் இணைந்துள்ள நாங்கள் அனைவருமே நண்பர்கள். நட்பு என்ற ஒரு புள்ளி தான் எங்களை இணைத்து இன்று புதிய பரிமாணத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

நாங்கள் இனியும் இதுபோன்ற ஆல்பங்களில் இணைந்திருக்க முடிவு செய்திருக்கிறோம்.
எங்களின் WeekEnd வீக் எண்ட் ஆல்பம் நிச்சயமாக கொரோனா ஊரடங்கால் தவித்துவருவோருக்கு ஒரு ஸ்டரெஸ் பஸ்டராக இருக்கும்.

இவ்வாறு நிஷாந்த் கூறினார்.

இந்த பாடல் நேற்று சோனி மியூசிக்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாடல் : https://youtu.be/hUtk7fikG3s

Renigunta fame Nishanth releases new album

நல்லாத் தானே போய்ட்டு இருக்கு.. தமிழ்நாட்ட ஏன்யா பிரிக்கனும்..; தலை சுற்றிய வடிவேலு

நல்லாத் தானே போய்ட்டு இருக்கு.. தமிழ்நாட்ட ஏன்யா பிரிக்கனும்..; தலை சுற்றிய வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதல்வா் ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார் வடிவேலு.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வடிவேலு பேசியதாவது…

“ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கொரோனாவை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார்.

மக்களே வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.

நான் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு விட்டேன்.

தமிழகத்தை பிரித்து கொங்கு நாடு தனி நாடு பற்றிய சர்ச்சை கேள்விக்கு…

ராம் நாடு, ஒரத்தநாடு ஏற்கெனவே உள்ளன. தமிழ்நாடு நன்றாக உள்ளது.

அதை ஏன் பிரிக்கனும். இதையெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது.”

இவ்வாறு வடிவேலு பேசினார்.

Vadivelu donated Rs 5 lakhs to cm corona relief fund

வரி கட்டியாச்சு.. ரியலிலும் ஹீரோதான் விஜய்.. ஆதாரங்களை அடுக்கும் ரசிகர்கள்.; BEAST டைரக்டருக்கு REQUEST

வரி கட்டியாச்சு.. ரியலிலும் ஹீரோதான் விஜய்.. ஆதாரங்களை அடுக்கும் ரசிகர்கள்.; BEAST டைரக்டருக்கு REQUEST

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த தனது ரோல் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் அவர்கள் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பல தகவல்கள் வெளிவருகின்றன.

அதாவது நடிகர் விஜய் 8 ஆண்டுகளுக்கு முன்பு வரி செலுத்தியுள்ளார். அதற்கு தான் தற்போது வரி விலக்கு கேட்கிறார்.

அது தொடர்பான வரி கட்டிய ரசீதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காருக்கான ஆயுட்கால வரியை கட்டிய பிறகே வரியை குறைக்க விஜய் கேட்டுள்ளார் என்கின்றனர்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

எனவே ரோல்ஸ் ராய்ஸ் காரில் நடிகர் விஜய் வருவது போல காட்சியை வைக்க வேண்டும் என நெல்சனுக்கு விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Thalapathy Vijay fans support on Rolls Royce issue

Vijay-Ghost_2-1

லிங்குசாமியின் ‘RAP019’ சூட்டிங் ஸ்பாட் தளத்தில் ஷங்கர் திடீர் விசிட்

லிங்குசாமியின் ‘RAP019’ சூட்டிங் ஸ்பாட் தளத்தில் ஷங்கர் திடீர் விசிட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு திரை முன்னணி நாயகன் ராம் பொதினேனி நடிக்கும் #RAPO19 படப்பிடிப்பிற்க்கு திடீர் விசிட் அடித்தார் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் வருகை புரிந்தார்.

இயக்குநர் லிங்குசாமி, நாயகன் ராம் பொதினேனி, நாயகி கீர்த்தி ஷெட்டி, நடிகை நதியா மற்றும் நடிகர்கள், தொழில் நுட்ப குழுவினர் அனைவரும் இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில், படத்தினுடைய பாடலை கேட்டுவிட்டு, மிக அழகான மெலோடியான பாடல் என பாராடினார்.

மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

அரசு அறிவித்துள்ள கோவிட் சம்மந்தமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முறையாக கடைப்பிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விரைவில் திரைக்கு கொண்டுவரும் நோக்கத்தில், முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ், ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகும் RAPO19 படத்தின் படப்பிடிப்பு, வெகு தீவிரமான வேகத்தில் நடைபெற்றுவருகிறது.

Director Shankar’s surprise visit to Rapo19 shooting spot

More Articles
Follows