தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியவர் கவிஞர் பிறைசூடன்
திரைத்துறையில் 2000 பாடல்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார்.
நடந்தால் இரண்டடி… ஆட்டமா தேரோட்டமா…
சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது.. பாடல்களை எழுதியிருக்கிறார்.
பக்தி பாடல்கள் 5000க்கும் எழுதியவரும், சிறந்த ஆன்மீகவாதியும், இலக்கியவாதியுமான , கவிஞானி பிறைசூடன் (வயது 65) இன்று (8.10.2021) மாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளனர்.
இவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக உள்ளார்.
முகவரி
எண்:1
ஜகதாம்பாள் தெரு
பெரியார்நகர்
நெசப்பாக்கம்
சென்னை 600078
போன்:
9840461666
8248500972
பிறைசூடன் பற்றிய தகவல்கள்…
1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர் பிறைசூடன்.
1985-ல் ‘சிறை’ என்ற படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு பாடல் எழுதினார்.
1991இல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘சோலப் பசுங்கிளியே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை வென்றவர் இவர் பிறைசூடன்’.
விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் பிறைசூடன் எழுதியதே.
‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலும் ‘கலகலக்கும் மணியோசை’ (ஈரமான ரோஜாவே), ’காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ (கோபுர வாசலிலே) என்ற பாடல்களின் பட்டியல் நீளும்.
பிரசாந்த் & ரோஜா நடித்த ‘செம்பருத்தி’ படத்தில் நான்கு பாடல்களை எழுதினார்.
ரஜினிக்கு ’ராஜாதி ராஜா’ படத்தில் ‘மீனம்மா மீனம்மா’ பாடலை எழுதினார் பிறைசூடன்.
‘பணக்காரன்’ படத்துக்காக பிறைசூடன் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ பாடல் திருமண மேடைக் கச்சேரிகளில் தவறாமல் இடம் பிடிக்கும்.
1990களில் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஆதித்யன் இசையில் அதிக பாடல்களை எழுதினார் பிறைசூடன். ‘அமரன்’ படத்தில் ஆதித்யன் இசையில் நான்கு பாடல்களை எழுதினார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தெனாலி’ படத்தில் ‘போர்க்களம் அங்கே’ என் காதல் ஏக்கப் பாடலை எழுதினார்.
திரைப் பாடல்களைத் தாண்டி நிறைய பக்திப் பாடல்களை எழுதியுள்ளார். அவருடைய கவிதைகள் ‘தாலாட்டு முதல் தாலாட்டுவரை’ என்னும் தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
Popular lyricist Pirai Soodan passes away