ரஜினிகாந்தின் புதிய படத்தில் இருந்து வெளியேறும் பிரபலம்

ரஜினிகாந்தின் புதிய படத்தில் இருந்து வெளியேறும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி, விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதற்கிடையில், ‘லால் சலாம்’ படத்தில் ஆடை வடிவமைப்பில் கையெழுத்திட்ட பூர்ணிமா ராமசாமி, அந்த திட்டத்தில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அவர் “முன் தயாரிப்பு நிலையில் உள்ள மாற்ற முடியாத வேறுபாடுகள் காரணமாக, நான் லால் சலாம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார் .

Popular celebrity announces walk out of Superstar Rajinikanth’s new movie

மனித ரூபத்தில் கடவுள்.; மலையாள மக்களை மயக்கிய ‘மாளிகப்புரம்’ தமிழில்..

மனித ரூபத்தில் கடவுள்.; மலையாள மக்களை மயக்கிய ‘மாளிகப்புரம்’ தமிழில்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ‘மாளிகப்புரம்’ பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது தமிழில் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகிறது. மக்களிடத்தில் இதன் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

‘மாளிகப்புரம்’ படத்தில் ஐயப்பனின் மார்கழி மாத வழிபாடு பிரதானம். ஆன்மீகமும், அறிவியலும், நம்பிக்கையும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதை சொல்லுவது தான் இப்படம்.

‘மாளிகப்புரம்’ படம், ஒரு குடும்பத்தின் பிரச்னையை ஆன்மீக வழியாக பார்க்கிறது.

‘கடவுள் மனித ரூபத்தில் வந்து மனிதர்களுக்கு உதவி செய்வான்’ என்பது ஆன்மீகம்.

‘தகுந்த நேரத்தில் சகமனிதர்களுக்கு உதவி செய்பவன் கடவுள்’ என்று சொல்கிறது நம்பிக்கை.

இரண்டுக்குமான இடைவெளி, ஒரு மெல்லிய நூலிழை அதன் வழியாக பயணிக்கிறது, ‘மாளிகப்புரம்’.

எட்டாம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து சென்று பந்தள நாட்டில் குடியேறிய பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களே ஐயப்பன் பிறந்த பந்தள ராஜவம்சத்தினர்.

ஒரு பக்தன் ஐயப்பனை வேண்டி தூய்மையாக விரதம் இருந்தால் சாமி ஐயப்பன் ஏதோ ஒரு உருவத்தில் நிச்சயம் அவர்கள் முன்பு தோன்றி வழித்துணையாக இருப்பார் என்பதே “மாளிகப்புரம்” திரைக்கதையின் கரு.

பெரிதும் வரவேற்பு இல்லாமல் சாதாரணமாக இப்படம் வெளியாகி, இப்போது பட்டி தொட்டியெங்கும் குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

படத்தை கமர்சியலாகவும்.. ஹீரோயிசமாகவும் உருவாகியதுதான் இதன் பலம்.

இப்படத்தை புதுமுக இயக்குனர் விஷ்ணு சசிசங்கர் இயக்கி பெரும் வெற்றிக் கண்டுள்ளார். இவர், AVM தயாரித்து, சூர்யா-ஜோதிகா நடித்த #பேரழகன் படத்தை டைரக்ட் செய்த சசிசங்கர் மகன் ஆவார்.

நாயகனாக உன்னி முகுந்தன் நடித்துள்ளார். இவர், தனுஷ் நடித்த #சீடன் படத்தில் அறிமுகமானவர். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த #யசோதா படத்தில் நடித்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரமாக குழந்தை நட்சத்திரம் பேபி தேவானந்தா நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இவர்களுடன் சம்பத்ராம், மனோஜ் கே.ஜெயன், மாஸ்டர் ஸ்ரீபத், டி.ஜி. ரவி,சைஜிகுருப், அஜய் வாசுதேவ், ஸ்ரீஜித்ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதில் இரண்டு பாடல்களை பிரபல இயக்குனர் R.V.உதயகுமார் எழுதியுள்ளார்.
ஒரு பாடலை இயக்குனர் யார் கண்ணன் எழுதியுள்ளார்.

KAVYA FILM COMPANY PRESENTS
IN ASSOCIATION WITH – AAN MEGA MEDIA

காவ்யா பிலிம் கம்பெனி வழங்கும், ஆன் மெகா மீடியா இணைந்து தயாரிப்பில்
#மாளிகப்புரம்.

இயக்கம் : விஷ்ணு சசிசங்கர்.
தயாரிப்பு : பிரியா வேணு – நீட்டா பிண்டோ.
கதை,திரைக்கதை: அபிலாஷ் பிள்ளை.
ஒளிப்பதிவு : விஷ்ணு நாராயணன்.
இசை: ரானின்ராஜ்.
எடிட்டிங் : சமீர் முகமது.
வசனம் : கலைமாமணி வி.பிரபாகர்
சவுண்ட் டிசைனர் : எம்.ஆர். ராஜாகிருஷ்ணன்
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,
நடனம்: ஷெரிப்
பாடல்கள்: இயக்குனர் R.V. உதயகுமார்,
இயக்குனர் கண்ணன், முருகானந்தம், பல்லவிகுமார், கோவை சிவா.

பாடியவர்கள் : பிரசன்னா/ வேல்முருகன் / பிரபாகர்/அஜீம்ராஜா / காயத்ரி/ ஏ.கே,ரமேஷ்/சி.அதிதீ

Tamil Nadu Release By #TridentArts Ravi.

Malayalam hit film Maalikappuram to release in tamil

சிம்புவின் 50வது படத்தை தயாரிக்கும் லைக்கா.?; இயக்குனர் இவரா.?

சிம்புவின் 50வது படத்தை தயாரிக்கும் லைக்கா.?; இயக்குனர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம்.

அண்மைக்காலமாக பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருகிறது.

ரஜினி கமல் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் ‘பொன்னியின் செல்வன் 1 & 2 படத்தையும் மிகப் பிரமாண்டமாக தயாரித்து இருந்தது.

இந்த நிலையில் சிலம்பரசனின் 50 வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்குவார் எனவும் சொல்லப்படுகிறது.

அஜித்தின் ‘பில்லா – ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Lyca to produce Simbu’s 50th film?

சமூகம் தந்த சம்பவம்..; மகளுக்காக போராடும் தகப்பன் யோகிபாபு

சமூகம் தந்த சம்பவம்..; மகளுக்காக போராடும் தகப்பன் யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘பொம்மை நாயகி’.

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது.

தந்தை மகள் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, நடித்திருக்கிறார்கள். யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார்.

எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின் உணர்வுப்பூர்வமான கதைதான் ‘பொம்மை நாயகி’.

யோகிபாபு இந்த படத்தில் தனது தனித்தன்மையான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

பிப்ரவரி 3 ம் தேதி தியேட்டரில் வெளியாகவிருக்கும் படம் யோகிபாபுவின் சிறந்த படங்களில் ஒன்றாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவு -அதிசயராஜ்,

இசை – சுந்தரமூர்த்தி

எடிட்டிங் – செல்வா RK

கலை- ஜெயரகு

பாடல்கள் – கபிலன், இளையகம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ,

ஸ்டண்ட் -ஸ்டன்னர் சாம்.
உடைகள் – ஏகாம்பரம்

Yogibabu is a father who fights for his daughter

ஓர் அதிரடி வெற்றி கொடுக்க இணையும் ஏஆர் முருகதாஸ் – சிவகார்த்திகேயன்

ஓர் அதிரடி வெற்றி கொடுக்க இணையும் ஏஆர் முருகதாஸ் – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ்.

இவர் விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி 7ஆம் அறிவு, விஜய் நடித்த கத்தி சர்க்கார் துப்பாக்கி, அஜித் நடித்த தீனா ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

இவரது படங்கள் பெரும்பாலும் சமூக கருத்துடன் கூடிய தரமான படங்களாகவே இருக்கும்.

இவர் கடைசியாக இயக்கிய மகேஷ்பாபுவின் ஸ்பைடர், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.

இதனையடுத்து விஜய் படத்தை இயக்க ரெடியானார். அந்த படமும் கைவிட்டுப் போனது.

எனவே ஒரு வெற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஏஆர். முருகதாஸ்.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாகவும் மதுவின் லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது ‘அயலான்’ & ‘மாவீரன்’ ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ரிலீசான ‘பிரின்ஸ்’ படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

எனவே தற்போது ஓர் அதிரடியான வெற்றியை கொடுக்க ARM & SK இருவரும் இணைவது குறிப்பிடத்தக்கது.

AR Murugadoss – Sivakarthikeyan join to deliver a blockbuster hit

யார் சூப்பர் ஸ்டார்.? ‘கவர்ச்சி பாம்’ ஷகிலா கொடுத்த ஷாக்கான பதில்

யார் சூப்பர் ஸ்டார்.? ‘கவர்ச்சி பாம்’ ஷகிலா கொடுத்த ஷாக்கான பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20 வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமாவில் ‘கவர்ச்சி பாம்’ என்று சொன்னால் அது நடிகை ஷகிலா தான்.

இவரது ஆபாச படங்கள் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மம்மூட்டிக்கு போட்டியாக கருதப்பட்டது.

எனவே ஷகிலா படத்திற்கு தடை விதிக்கவும் அப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தது தனிக்கதை.

ஒரு கட்டத்தில் கவர்ச்சி வேடங்களை துறந்து ஆபாச வேடங்களை மறந்து சின்ன சின்ன வேடங்களில் அடிக்க ஆரம்பித்தார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’யில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.

இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் யார் சூப்பர் ஸ்டார்? என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.

அதற்கு ஷகீலா பதிலளிக்கும் போது..

“ரஜினியை தான் சந்தித்தது பற்றிய அனுபவத்தை கூறியுள்ளார்.. எளிமையான மனிதர் அவர்.. என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகைகளில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு.? 20 வருடங்களுக்கு முன்பு ஆக்ஷனில் அசத்திய நடிகை விஜயசாந்தி தான் லேடி சூப்பர் ஸ்டார்.

இன்று அந்த இடத்திற்கு வந்துள்ளார் நயன்தாரா.. அவர்களெல்லாம் தண்ணீரை கூட அளவாகத்தான் குடிப்பார்கள்.

தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள்.. அதுபோன்ற அர்ப்பணிப்புக்கு கடின உழைப்புக்கு தான் அவர்களுக்கு இந்த அளவிற்கு பேரும் புகழும் கிடைத்துள்ளது.

என்னை எடுத்துக் கொண்டால் நான் எல்லாம் தினமும் பிரியாணி கொடுத்தால் கூட சாப்பிடுவேன்.. நானெல்லாம் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில்லை” எனவும் பதில் அளித்துள்ளார் ஷகிலா.

Actress Shakeela reply to Who is Super Star?

More Articles
Follows