தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆனால் நேற்றைய ட்வீட்களில், அரசை நேரடியாகவே எதிர்த்தார்.
முதல்வரை பதவி விலக சொல்ல எதிர்க்கட்சிகள் ஏன் சொல்லவில்லை.
எனது இலக்கு என்பது சிறப்பான தமிழகம். எனது குரலுக்கு வலிமை சேர்க்க யாருக்குத் துணிச்சல் உள்ளது? என்ற கேள்விகளை கேட்டு இருந்தார்.
இதுகுறித்து இயக்குநரும் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கூறியதாவது….
களத்திற்கு வாருங்கள். ட்விட்டரில் குரல் கொடுத்தால் போதாது.
நீங்கள் குரல் கொடுத்த உடன் ராஜினாமா செய்ய இங்கு யாரும் காமராஜர் இல்லை.
ஊழலை எதிர்த்து போராட்டம் செய்யப்போவதாக கமல் அறிவித்தால் நாங்கள் கலந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
அதே போன்று, சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். அதற்கும் நான் அவருடன் இணைந்து போராட தயார்.
ஆனால் அவரது பேச்சுக்கள் வெறும் பேச்சாகவே இருக்கிறது” என்றார் சீமான்.