தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹிமாச்சல பிரதேசம் மணாலியிலிருந்து- லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு வரை, 9 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலை சுரங்கப் பாதை அமைக்க, கடந்த 2000-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது.
இப்பணிகளுக்கு 2002ம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பல்வேறு இயற்கை பேரிடர் சவால்களை கடந்து, “அடல்” நெடுஞ்சாலை சுரங்கப் பாதை வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது.
கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த சுரங்க பாதை அமைந்துள்ளது.
இந்த மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
PM Modi inaugurates world’s longest highway tunnel Atal in Himachal Pradesh