கொரோனா போர்: ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு லைட்டை ஆஃப் செய்ய மோடி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் மோடி,

இந்த உத்தரவு அமலுக்கு வந்து இன்று மார்ச் 3ஆம் தேதியோடு 10 நாட்கள் ஆகிவிட்டது.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு வீடியோ வாயிலாக மோடி நாடு மக்களுக்கு உரையாற்றினார்.

அதில், ‘ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்புக்கு நன்றி. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தி கொண்டிருப்பதற்கு நன்றி.

முன்னெப்போதும் இல்லாத கட்டுப்பாடு ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ளது.

நாம், எடுக்கும் நடவடிக்கைகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

வீட்டில் இருந்தாலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். கொரோனா தொற்றின் இருளை வெளிச்சம் கொண்டு விரட்ட வேண்டும்.

வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் உருவம்.

வருகிற ஏப்ரல் 5-ல் இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் உங்கள் வீட்டு விளக்கை அணையுங்கள்.

அதற்கு பதிலாக டார்ச், அகல்விளக்கை ஏற்றவேண்டும்.

யாரும் தெருவுக்கு வந்து இதனை செய்ய வேண்டாம். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

PM Modi asks people to light lamps on 5th April at 9 pm this Sunday

மேரேஜ் இப்போ இல்ல.. ஒன்லி டேட்டிங்.. விஷ்ணு லவ்வர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நட்ராஜ் என்ற பெண்ணை காதலித்து 2018ல் திருமணம் செய்துக் கொண்டார் விஷ்ணுவிஷால்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ஆனால் கருத்து வேறுபாட்டினால் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.

இதனையடுத்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இவர்களை நிறைய படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை..

இந்த நிலையில் ஜுவாலா கட்டா தன் சமீபத்திய பேட்டியில்…

நாங்கள் டேட்டிங் செய்து வருவது உண்மைதான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம். ஆனால் இப்போது இல்லை.” என தெரிவித்துள்ளார்.

பிரபுதேவாவுக்கு ஜோடியாக விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது பிரபுதேவா நடிக்கும் பகீரா என்ற படத்தை இயக்குகிறார்.

கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

பகீரா படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

ஒருவர் அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூர். தற்போது மற்றொரு நாயகியாக காயத்ரி நடிக்கிறாராம்.

விஜய் சேதுபதி நடித்த நடுவுல சொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காயத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

3வது ஹீரோயின் யார்? என்ற விவரம் விரைவில் தெரிய வரும்.

பால் & காய்கறிகளை இலவசமாக வழங்கும் தளபதி விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 9 நாட்களாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களை வீட்டிலேயே அடங்கி கிடக்க அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல கூட மக்கள் யோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் 250 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகளை வழங்கியுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து வடசென்னை விஜய் ரசிகர்கள் ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான பால் பாக்கெட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.

பால் இல்லாமல் கஷ்டப்பட்ட குழந்தைகளுக்கு விஜய் ரசிகர்கள் உதவி பேருதவியாக உள்ளது என அங்குள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Vijay fans helping poor those who suffer in Corona lock down

ஓவர் அலைச்சல்… இப்ப கொரோனாவால் அவஸ்தை படும் அஜித் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் வேதம் படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

அதன்பின்னர் அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கொரானா நோய் தடுப்பு காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வருவதற்கு முன்பு வரை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு படப்பிடிப்புக்காக விமானத்தில் பறந்து சென்று வந்தாராம்.

இந்த நிலையில் இவர் பயணித்து வந்த விமானத்தில் பயணித்த மற்றொரு பயணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாம்.

இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வீட்டிற்கு வந்து அவரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.

இதனால் இவர் தனி அறையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளாராம்.

Ajith movie NKP actress quarantine in her house

கொரோனாவுக்கு சிவகார்த்திகேயன் பன்ச் டயலாக்கை சொன்ன கலெக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொடர்பான மீம்ஸ், வீடியோக்கள் தினம் தினம் இணையத்தில் உலா வருகின்றன.

சில மீம்ஸ்கள் உண்மைக்கு புறம்பாக வருகின்றன. சிலர் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

எல்லாவற்றிற்கும் சினிமா சம்பந்தமான காட்சிகளும் டயலாக்குகளுமே பொருந்தி வருகின்றன.

பெரும்பாலானா வீடியோ மற்றும் படங்களில் வடிவேலுவே வருகிறார்.

இந்த நிலையில் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் சொன்ன டயலாக்கை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய் கார்த்திகேயன் பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு சிவகார்த்திகேயனும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த டயலாக்கை எழுதியவர் இயக்குனர் பொன்ராம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

அந்த டயலாக் தான் இது…

Thank you brother @Siva_Kartikeyan
“நீ யாரா வேணும்னா இரு
எவனா வேணும்னா இரு ; ஆனா
என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு “ #SocialDistancing

District Collector said Sivakarthikeyan punch dialogue for Corono

https://twitter.com/Vijaykarthikeyn/status/1245657044067049473

More Articles
Follows