தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் சென்னைவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதாவது கடந்த 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னை உருவானதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு சென்னை தினம் நாளை ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு சென்னையின் பெருமையை பேசும் அரிய படங்களை தன் கேமரா கண்களில் படமாக்கியுள்ளார் பிரபல ப்ளேபாய் போட்டோகிராபர் எல். ராமசந்திரன். இவர் சென்னையை சேர்ந்தவர்.
சென்னையின் அழகியல் பேசும் புகைப்படங்கள் கொண்ட ‘சென்னை டூ மெட்ராஸ்’ புகைப்பட புத்தக வெளியீட்டு விழாவை பிரபலங்கள் முன்னிலையில் நடத்தியுள்ளார்.
சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தி ஆர்ட் வளாகத்தில் இன்று நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கின் போது பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் எடுத்த புகைப்படங்கள் புத்தகமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் மூத்த பத்திரக்கையாளர் என்.ராம், நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பார்திபன், ஆகியோர் கலந்துகொண்டனர்.
புகைப்பட புத்தக தொகுப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் பெற்றுக்கொண்டார்.
இதில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது…
சென்னை பற்றிய போட்டோக்களை பார்கும்போது சென்னைக்கு இத்தனை பெருமை இருக்கிறதா? என வியக்கிறேன்.
அறிவுதான் கடவுள் எனவும் அறிவின் பார்வை முக்கியமானது எனவும் குறிப்பிட்டு பேசினார்.
மேலும் கொரோனா ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் இருந்து மீண்டும் மீண்டுவரவேண்டும் எனவும் பேசினார்.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில்…
இப்போது கொரோனா ஊரடங்கு அனைவருக்கும் பழகிவிட்டது.
நல்ல செய்தியை ஊடகங்கள் முந்தி தருவதில் தவறில்லை.
ஆனால் துக்க செய்தியை யார் முந்தி தருவது என போட்டி வேண்டாம்.
துக்க செய்திகளை நிதானமாக தரவேண்டும்.
ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் அருமையாக பயன்படுத்தியுள்ளார் எல் ராமசந்திரன். வாழ்த்துகள்.” என பேசினார் பார்த்திபன்.