தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு சென்னை கடலோரப் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக கூறி சில நபர்கள் மோசடி செய்துள்ளனர்.
அது பற்றிய விவரம் வருமாறு..:
பியூஸ் ஜெயின், மந்தன் ருபேரல் என்ற இருவர், `நாங்கள் வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் என பொய் சொல்லி நிலேஷா (21) என்ற மும்பை பெண்ணிடம் மோசடி செய்துள்ளனர்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி போலி ஆவணங்களை காண்பித்துள்ளனர்.
மேலும் பாஸ்போர்ட் சரிபார்ப்பு, அரசு அனுமதி போன்ற சட்டரீதியான காரணங்களை கூறி பணம் வேண்டும் என தெரிவித்து அப்பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை வாங்கியுள்ளனர்.
அதன்பின்னர் இரண்டு பேரும் தலைமறைவாகிவிடவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் நிலேஷா.
பண மோசடியால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
எனவே இந்த வழக்கை மும்பை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கூடுதல் தகவல்..
போலீசாரின் விசாரணையில்… “ஏற்கனவே வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற இதே பெயரில் உள்ள கம்பெனி பெயரை பயன்படுத்தி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இந்த கம்பெனி கடந்த 10 ஆண்டுகளாக பல தெலுங்குப் படங்களை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.