டிசம்பர் 8 பாரத் பந்த்..; மக்கள் நலனுக்காக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே கடையடைப்பு என அறிவிப்பு

டிசம்பர் 8 பாரத் பந்த்..; மக்கள் நலனுக்காக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே கடையடைப்பு என அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharat Bandhடெல்லி சலோ என்ற அறவழிப் போராட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர்

விவசாய சங்கங்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு ஈடுபட்டும் உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே நாளை டிசம்பர் 8 பாரத் பந்த் (நாடு தழுவிய முழு அடைப்பு) நடக்கவுள்ளது.

அப்போது சாலை மறியல்களும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து பாரத் கிசான் அமைப்பு தெரிவித்துள்ளதாவது…

“நாங்கள் சாதாரண மனிதர்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை.

எனவே காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறோம். 3 மணிக்கு முடிக்கவேண்டும் என திட்டமிட்டுள்ளோம்” என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Peaceful Bharat Bandh From 11 AM to 3 PM Tomorrow, Say Farmers

குழந்தைகள் உரிமை விழிப்புணர்வு..; த்ரிஷாவை போல மற்றவர்களும் முன்வர வேண்டும் என UNICEF வேண்டுகோள்

குழந்தைகள் உரிமை விழிப்புணர்வு..; த்ரிஷாவை போல மற்றவர்களும் முன்வர வேண்டும் என UNICEF வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

unicef trishaUNICEF யுனிசெப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதராக இருந்து வருகிறார் நடிகை த்ரிஷா.

எனவே இந்த அமைப்பு தொடர்பான விழிப்புணர்வு செயல்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

கடந்த 2017ல் திருப்போரூர் அருகே திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்கும் வகையில் நடைபெற்ற கழிப்பறை கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தானே செங்கற்களை அடுக்கி கழிவறை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்

இந்த நிலையில், திரிஷாவின் செயலை மேற்கோள்காட்டி மற்ற நடிகர், நடிகைகளுக்கும் UNICEF அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தன் சமூக வலைத்தள பக்கத்தில் UNICEF அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி ஜாப் சக்காரியா பதிவிட்டுள்ளதாவது…

“கிராமங்களில் கழிப்பறையின் அவசியத்தை உணர்த்த திரிஷா, கழிப்பறை கட்டுமானத்தை அவரே தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு ரூபாய் கூட நடிகை திரிஷா சம்பளமாக வாங்கவில்லை.

திரிஷாவைப் போன்று குழந்தைகள் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மற்ற நடிகர், நடிகைகள் முன் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

UNICEF ceo praises actress Trisha

ஸ்டாலினை முதல்வராக்குவோம்..; கொரோனா காலத்தில் விவசாயிகள் போராட்டத்தை கண்டுக்காமல் புதிய நாடாளுமன்ற பூமி பூஜை தேவையா? – நடிகர் விஜய் வசந்த்

ஸ்டாலினை முதல்வராக்குவோம்..; கொரோனா காலத்தில் விவசாயிகள் போராட்டத்தை கண்டுக்காமல் புதிய நாடாளுமன்ற பூமி பூஜை தேவையா? – நடிகர் விஜய் வசந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vasanth MK Stalinநாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அவரது நினைவு நாளான இன்று மரியாதை செலுத்தினார் நடிகரும் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான விஜய் வசந்த்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார் அவர்.

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதை கண்டுகொள்ளாமல், புதிய நாடாளுமன்றத்திற்கு பூமி பூஜை போடுவதில் மத்திய அரசு குறியாக உள்ளது.

புதிய நாடாளுமன்றம் கட்ட ஒதுக்கப்பட்டுள்ள தொகையை கொரோனா தடுப்பு பணிக்கும், எம்பி நிதிக்கும் பயன்படுத்தலாம்.

ஆனால், மத்திய அரசு பூமி பூஜை போடுவது வேடிக்கையாக உள்ளது.

காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக உள்ளது.

முக. ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் தீவிரமாக பாடுபடும் என பேசினார்.

Vijay vasanth supports DMK leader MK Stalin

வேளாண் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி கொடுப்பேன்… – விஜேந்தர் சிங்

வேளாண் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி கொடுப்பேன்… – விஜேந்தர் சிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijendar singhமத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஹரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 2 வாரங்களாக அதாவது கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு சார்பில் விவசாயிகளிடம பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் விவசாயிகளுக்கு குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஆதரவு கொடுத்துள்ளார்.

வேளாண் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இவர் 2008 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலமும், உலக சாம்பியன்ஷிப், காமென்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

Boxer Vijender Singh joins protesting farmers, says he will return Rajiv Gandhi Khel Ratna

சூரப்பா இன்னொரு நம்பி நாராயணனா? நேர்மைக்கு இதான் நிலையா.? கமலின் ஆதரவுக்கு சூரப்பா நன்றி

சூரப்பா இன்னொரு நம்பி நாராயணனா? நேர்மைக்கு இதான் நிலையா.? கமலின் ஆதரவுக்கு சூரப்பா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan soorappaஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டார்.

சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் முறைகேடு, கல்லூரிக்கு பொருட்களில் முறைகேடு, தனது மகளை பணிக்கு அமர்த்தியது, என அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனால் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்தும் இருந்தது.

இதனால் சூராப்பாவை பணியிடை நீக்கம் செய்யவேண்டுமென எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சூராப்பிவிற்கு ஆதரவாக வீடியோ பதிவிட்டார்.

அந்த ட்வீட்டில்… சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா? நேர்மையாக இருந்தால் இது தான் நிலையா..? அநீதிகளுக்கு எதிராக நான் கேள்வி கேட்பேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

தற்போது தனக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசனுக்கு சூரப்பா நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், என் நேர்மை, என் சேவை கருத்தில் கொண்டு கமல்ஹாசன் ஆதரவளித்திருப்பது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான ஆதரவு.

நான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் எனக்கு நற்பெயரே உள்ளது.” என கூறியுள்ளார் சூரப்பா.

Kamal Haasan supports Soorappa slams TN government

கடமையை முடிக்க பெங்களூர் புறப்பட்ட ரஜினிகாந்த்..; அடுத்த ப்ளான் என்ன..?

கடமையை முடிக்க பெங்களூர் புறப்பட்ட ரஜினிகாந்த்..; அடுத்த ப்ளான் என்ன..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth annaattheரஜினிகாந்த் நடிக்க சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.

ரஜினிகாந்துடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

ஹைதராபாத்தில் இப்பட சூட்டிங் நடைபெற்று வந்தது.

அப்போதே ரஜினிகாந்தின் 60% காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம்.

இதன் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி தன் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த சமயத்தில் ‘அண்ணாத்த’ பட 40% படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை எனவும் தெரிவித்திருந்தார்.

எனவே ‘அண்ணாத்த’ சூட்டிங்க்கு ரஜினி புறப்பட போகிறார் என்று கூறப்பட்ட நிலையில் இப்பட இயக்குநர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் உயிரிழந்தார்.

இதனாலும் சூட்டிங் தொடங்க தாமதம் ஆனது.

இன்னும் சில தினங்களில் (டிசம்பர் 12-ம் தேதி) தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார் ரஜினிகாந்த்.

அப்போது சென்னையில் இருக்கமாட்டாராம்.

ஏனென்றால் இன்றே பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் டிசம்பர் 15-ம் தேதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

Super Star Rajinikanth’s Annaatthe shooting to resume on December 15

More Articles
Follows