தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டெல்லி சலோ என்ற அறவழிப் போராட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர்
விவசாய சங்கங்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு ஈடுபட்டும் உடன்பாடு ஏற்படவில்லை.
எனவே நாளை டிசம்பர் 8 பாரத் பந்த் (நாடு தழுவிய முழு அடைப்பு) நடக்கவுள்ளது.
அப்போது சாலை மறியல்களும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து பாரத் கிசான் அமைப்பு தெரிவித்துள்ளதாவது…
“நாங்கள் சாதாரண மனிதர்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை.
எனவே காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறோம். 3 மணிக்கு முடிக்கவேண்டும் என திட்டமிட்டுள்ளோம்” என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Peaceful Bharat Bandh From 11 AM to 3 PM Tomorrow, Say Farmers