எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது..; பார்த்திபன-குறள்

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது..; பார்த்திபன-குறள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பார்த்திபன் ஒருவரே நடித்து இயக்கிய ‛ஒத்த செருப்பு சைஸ் 7′ படத்திற்கு பாராட்டுக்களும் இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன.

இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி வெளியானது.

இதனை அடுத்து ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்குகிறார் பார்த்திபன்.

இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து பார்த்திபன் அவரே நடிக்கவும் செய்கிறார்.

இந்த நிலையில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போது இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

அந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள பார்த்திபன், ‛‛எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது. ஆமாம், இரவின் நிழலுக்கு ரஹ்மான் இசையமைப்பது பெருமை.

இதுவரை அருமையான 3 பாடல்களை கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

Parthibans next film is titled Iravin Nizhal music by AR Rahman

பார்த்திபன் தன் ட்விட்டரில் ஏஆர்ஆர் பற்றி கூறியதாவது…

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது!

Yes SIR is IN (Iravin Nizhal)
பெருமை!
அருமையில் – 3 பாடல்கள் கைவசம்
அருகாமையில் இன்னொன்று-promotional song
So…
So hhaappppyy https://t.co/sj8tfZNoLG

‘அண்ணாத்த’ அப்டேட்..: தலைவர் கலக்குறாரு… பூரிப்பில் சூரி

‘அண்ணாத்த’ அப்டேட்..: தலைவர் கலக்குறாரு… பூரிப்பில் சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க தயாரித்து வருகிறது.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ், சூரி. சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘அண்ணாத்த’ 2021 தீபாவளியில் திரைக்கு வருகிறது.

2020 கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.

அப்போது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர்.

ரஜினிக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இருந்த போதிலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார் ரஜினி.

பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என திடீரென அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.

30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியுடன் நடித்து வரும் காமெடி நடிகர் சூரி அந்த அனுபவம் பற்றி தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில்… “Thalaivar shooting spotla kalakkuraru vera level energy..” என பதிவிட்டுள்ளார் சூரி.

Soori reveals Annatthe update and Rajinis Energy level

தனுஷின் ‘கர்ணன்’ படத்தை பார்த்த விஜய்சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

தனுஷின் ‘கர்ணன்’ படத்தை பார்த்த விஜய்சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ’கர்ணன்’.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பட பாடல்களும் ’கர்ணன்’ டீசரும் பெரும் வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் படம் ரிலீசாவதால் ‘கர்ணன்’ படத்திற்கு ஏதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், ‘கர்ணன்’ படம் நேற்று ஏப்ரல் 9ல் ரிலீசானது.

கர்ணனை பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் எப்போதும் ஜாதியை வைத்து படம் எடுப்பதே இவர்களின் வேலை என திட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று படம் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி “கர்ணன் எக்ஸலண்ட் படம். பார்க்கத் தவறாதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தன் விமர்சன கருத்தை தெரிவித்து பாராட்டியுள்ளார்.

vijay Sethupathis appreciation for Karnan movie

யோகிபாபுவின் ‘மண்டேலா’ படத்தை டிவியில் ஒளிப்பரப்ப தடை விதிக்க கோரிக்கை

யோகிபாபுவின் ‘மண்டேலா’ படத்தை டிவியில் ஒளிப்பரப்ப தடை விதிக்க கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோனா அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘மண்டேலா’.

இதில் முடிதிருத்தும் தொழிலாளியாக யோகிபாபு நடித்து இருந்தார்.

இந்த படம் தியேட்டரில் ரிலீசாகாமல் கடந்த ஏப்ரல் 4 அன்று தனியார் டிவியில் நேரடியாக வெளியானது மண்டேலா.

ஒய் நாட் ஸ்டுடியோ இப்படத்தை தயாரித்திருந்தது.

இந்த நிலையில் மண்டேலா படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் இப்படத்தை டிவியில் தொடர்ந்து ஒளிபரப்ப நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் யோகிபாபு, டைரக்டர் மடோனா அஸ்வின் மற்றும் ஒய்நாட் ஸ்டியோ நிறுவனம் மீதும் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

Mandela should be banned Case filed against movie team

விக்ரம் & இர்பான் பதான் இணைந்துள்ள ‘கோப்ரா’ படம் ஓடிடி ரிலீஸ்..?!

விக்ரம் & இர்பான் பதான் இணைந்துள்ள ‘கோப்ரா’ படம் ஓடிடி ரிலீஸ்..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான பல கெட்டப்புகளில் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.

விக்ரம் ஜோடியாக ‘கேஜிஎஃப்’ பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.

கடந்த வருடம் 2020 மே மாதமே இப்படம் ரிலீசாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போனது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது ‘கோப்ரா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்… அது ஒரு பொய்யான தகவல்.. என ‘கோப்ரா’ படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Vikrams Cobra movie in OTT release

நீட் தேர்வை ஏற்க முடியாது..; மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

நீட் தேர்வை ஏற்க முடியாது..; மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவிலுள்ள அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று ஏப்ரல் 10 காணொலி வாயிலாக நீட் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

இதில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது… “தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும் தமிழகத்திற்கு விலக்குத் தேவை எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரக்கூடிய இட ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து கடைபிடிப்போம் எனவும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை எனவும் விளக்கியுள்ளனர்.

இதனையடுத்து ஒரு எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

We cant not accept NEET exams in Tamilnadu says TN Govt

More Articles
Follows