தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத் திறமை கொண்டிருந்தாலும் பார்த்திபனுக்கு அடையாளமாக சொல்லப்படுவது அவரது நக்கல் நையாண்டி கலந்த கவிதைத்தனமான பேச்சு தான்.
இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
வாரிசு, துணிவு.. எந்தப் படத்தை முதலில் பார்ப்பீர்கள் ? என்ற கேள்விக்கு, “வாரிசு படத்தை பார்ப்பேன் என சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும்” என்றார்.
வாரிசு போன்ற பிரபலமான படங்களுக்கு பிரச்சினை வந்தால்தான் அந்தப் படம் இன்னும் பிரபலமாகும். பிரச்சினையை தாண்டி விஜய் எப்படி வருகிறார் என்பதும் ஒரு ஹீரோயிசம்.
அதன் பின்னர்..
‘வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக உதயநிதியை ஒதுக்கக் கூடாது. அவருக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறேன். அமைச்சர் வளர்ந்து முதலமைச்சர் ஆக வேண்டும்.
ஐஎம்டிபி ரேட்டிங்கில் தென்னிந்தியப் படங்கள் முதலிடத்தைப் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
விரைவில் பெண்களை மையமாக வைத்து பெண்களின் சக்தி குறித்து ஒரு படம் எடுக்கிறேன். தற்போது கதை ரெடியாகிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு பார்த்திபன் பதிலளித்தார்.