சிவகார்த்திகேயனை அடுத்து மீண்டும் சூர்யாவை இயக்கும் பாண்டிராஜ்

சிவகார்த்திகேயனை அடுத்து மீண்டும் சூர்யாவை இயக்கும் பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pandiraj plans to direct Suriya again for his new movieகார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

தற்போது சன் டிவி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் பாண்டிராஜ்.

இந்த நிலையில் சூர்யாவுக்காக ஒரு பக்காவான கிராமத்து கதையை உருவாக்கி வைத்திருக்கிறாராம் பாண்டிராஜ்.

இதற்கு முன்பே சூர்யா நடித்து தயாரித்து பசங்க 2 படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pandiraj plans to direct Suriya again for his new movie

எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் கோமாளி

எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் கோமாளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)ஜெயம் ரவியின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, பிரதீப் ரங்கநாதன் போன்ற இயக்குனர்களும் கூட இதை எதிர்பார்த்திருந்தனர் போல இருக்கிறது. முந்தைய படமான “அடங்க மறு” உட்பட தொடர்ந்து கோபக்கார இளைஞர் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த ஜெயம் ரவி, அடுத்து வரவிருக்கும் கோமாளி படத்தை காமெடி மற்றும் எமோஷன் கலந்த முழுநீள பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, “ஆம், நாங்கள் நகைச்சுவை அம்சங்களை கொண்ட குடும்பத்துடன் ரசிக்கும் முழுநீள பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே, ஜெயம் ரவி சார் தனி ஒருவன் மற்றும் அடங்க மறு போன்ற திரைப்படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடிப்பதையே பார்த்து வந்திருக்கிறோம். இது காமெடி மற்றும் எமோஷன் கலந்த ஒரு குடும்பப் படம். இது சமூக ஊடகங்களில் பரவி வரும் எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் படம், இறுதியில் நல்ல ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயம் ரவி சார் 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுவார், 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிகுமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் ஆகியோர் படத்தின் நகைச்சுவை காட்சிகளை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கிறார்கள். YouTube பரிதாபங்கள் புகழ் RJ ஆனந்தியை இந்த படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவர் ஒரு தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஜல் அகர்வால் ஒரு நல்ல அனுபவமுள்ள நடிகை, அவர் எப்போதும் நடிப்பை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருப்பார். ஒவ்வொரு முறையும், ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் ஜோடியை நான் பார்க்கும் போது, ஒரு மேஜிக்கை உணர்வேன். ரசிகர்களும் அதை உணர்வார்கள் என நம்புகிறேன். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரம் இந்த கதைக்கு தேவைப்பட்டது. அத்துடன் அவர் சிறப்பாக நடிப்பவராகவும் இருக்க வேண்டும். எனவே கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே அதை சரியாக செய்வார் என்று நினைத்து அவரை நடிக்க வைத்திருக்கிறோம். கன்னட படமான கிரிக் பார்ட்டி மூலம் தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான நடிகையாக புகழ் பெற்றவர் அவர். அவரது நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும், பாராட்டப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழாவை பற்றி அவர் கூறும்போது, “அவர் இளைஞர்களின் இசை சின்னமாக மாறிவிட்டார், மேலும் இந்த படத்தில் மிகவும் சுவாரஸ்யமான பாடல்களை எங்களுக்கு வழங்கியிருக்கிறார். குறிப்பாக ‘பைசா நோட்டு’ பாடல் அதன் இசைக்காகவவும், தயாரிப்புக்காகவும் நிச்சயம் பேசப்படும். இது ஒரு கற்பனை பாடல், காஜல் அகர்வால்க்கு கோயில் கட்டப்பட, அது ஒரு பப்பாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதாக இருக்கும். பாடல்கள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது, ரசிகர்கள் அதை கேட்டு ரசிப்பதை எதிர்நோக்கியிருக்கிறோம்” என்றார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ள இந்த கோமாளி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

“இந்தியத்தாயின் பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” – இயக்குனர் அமீர்.!

“இந்தியத்தாயின் பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” – இயக்குனர் அமீர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், தேச ஒற்றுமைக்குப் பாடுபட்டவருமான சர் முகமது இக்பால் என்பவர் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா’ எனும் பாடலை, தமிழ்க் கவி வேந்தர் மு.மேத்தா அவர்கள் மொழிபெயர்த்து, இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்து, நித்யஸ்ரீ மகாதேவன் பாடிய “தாயே, இந்தியத் தாயே …” எனும் பாடலை கவிக்கோ மன்ற நிறுவனரும் சிங்கைத் தமிழருமான எம்.ஏ.முஸ்தபா அவர்கள் தயாரித்திருக்கிறார்.

இவ்வளவு நாட்கள் ஒரு இசையமைப்பாளராக நாம் பார்த்துவந்த தாஜ்நூர் இந்த பாடல் மூலமாக ஒரு சிறந்த இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.. ஆம்.. இன்றைய சூழலில், ஒரு பாடல் இசையால் மட்டும் பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர்ந்துவிடாது.. அந்த பாடலுக்கு ஏற்றாற்போல் காட்சியமைப்பும் சிறப்பாக இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த பாடல் முழு வெற்றி அடையும் என்பதில் தாஜ்நூர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.. அந்தவிதத்தில் இந்தப்பாடலுக்கு இசையமைத்ததது மட்டுமில்லாமல், 6 மாதங்களுக்கும் மேலாக பாடலுக்கான காட்சி வடிவத்தையும் இயக்கி, ஒரு இயக்குனராகவும் தனது பங்களிப்பை செய்துள்ளார். இதன் மூலம் திரையுலகில் தன்னுடைய அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த இசைப்பாடலை ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் வெளியிட இயக்குனர் அமீர் பெற்றுக்கொண்டார் பாடல் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மு.மேத்தா, தாஜ்நூர், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், இயக்குனர் மீரா கதிரவன், எம்.ஏ.முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்..

இதில் இயக்குனர் அமீர் பேசும்போது,

“இந்த விழாவுக்கு கிளம்பும்போது இந்தியத்தாயை வாழ்த்த கிளம்பி விட்டீர்களா..? அப்படியென்றால் தமிழ் தேசியம் என்னாயிற்று என்று சிலர் கேட்டார்கள்.. நானும் இந்தியத்தாயின் பிள்ளையாகத்தான் இருக்க ஆசைப்படுகிறேன்.. பாரத மாதாவின் காலடியில் இருக்கிறோம் என்றாலும் தாயின் காலடியில் தான் சொர்க்கம் என்பது போல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.. ஆனால் முகத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை காலுக்கு கொடுப்பதில்லை.. பாரத மாதாவின் காலாக இருக்கும் தமிழகத்தை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஆனால் கால் இல்லாமல் வாழவே முடியாது என்பதை மறந்து விடுகின்றனர்.

இன்று செய்வதற்கே அஞ்சுகின்ற பஞ்சமா பாதகச்செயலை செய்பவர்கள் கூட ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷமிட்டுக் கொண்டு செல்கிறார்கள்.. தேசத்தை நேசிக்காமல் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செல்லும் அவர்களை விட, இந்த தேசத்தை யார் உண்மையாக நேசிக்கிறோம் என்பது மற்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த பாடல் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் எண்ணமாகவும் தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என” கூறினார் அமீர்.

ராஜமௌலி இயக்கும் RRR படத்தின் விரிவாக்கம் இதுதானா..?

ராஜமௌலி இயக்கும் RRR படத்தின் விரிவாக்கம் இதுதானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)பாகுபலி 2 படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படங்களை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இவர் தற்போது ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஆனால் படத்தின் ஒரு ஹீரோயின் யார் என்பதை படக்குழுவினர் முடிவு செய்யவில்லை.

மேலும் ‘ஆர்ஆர்ஆர்’ என்பதற்கான விளக்கத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

‘ஆர்ஆர்ஆர்’ என்பதன் விரிவாக்கத்தை ரசிகர்கள் அனுப்பலாம் என தெரிவித்தனர்.

எனவே அனைத்து மொழி ரசிகர்களும் பதிலளிக்க தொடங்கினர்.

தற்போது அந்த தலைப்புகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற தலைப்பை ஹைலைட்டாக காட்டியுள்ளனர்.

படத்தின் கதைக்களமும் சுதந்திர காலத்துக்கு முன்பு உள்ளதால் இதுவே தலைப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஜியோ நிறுவனம் தயாரிப்பில் இணையும் ஷங்கர்-விஜய்-விக்ரம்..?

ஜியோ நிறுவனம் தயாரிப்பில் இணையும் ஷங்கர்-விஜய்-விக்ரம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectநடிகர் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாகி விட்டதால் இந்தியன் 2 படம் அப்படியே நிற்பதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ஷங்கர்.

இதனால் பொறுமையிழந்த ஷங்கர் வேறு ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது-

நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரம் ஆகிய இருவரிடமும் 2 ஹீரோ கதையை சொன்னதாகவும அவர்கள் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பைனான்ஸ் உதவி செய்ய முன்வந்திருக்கிறதாம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம்.

விரைவில் இப்பட அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கலாம்.

ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கும் யோக(கி) பாபு

ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கும் யோக(கி) பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actor Yogi Babu Salary Will Makes You Shockதமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் காமெடி நடிகர் யோகி பாபு காட்டில் மழை பெய்து வருகிறது.

இவர் இல்லாமல் படங்கள் இல்லை என்னுமளவுக்கு ஒவ்வொரு படத்திலும் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விடுகிறார்.

விஜய்யுடன் சர்கார், அஜித்துடன் விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் தற்போது ரஜினியுடன் தர்பார் படத்திலும் இணைந்துள்ளார்.

தர்பார் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள நிலயில் யோகிபாபு 40 நாட்கள் கொடுத்துள்ளாராம்.

யோகிபாபு தற்போது எல்லாம் ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் என கமிட் ஆகாமல் ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் என கமிட்டாகி நடித்து வருகிறாராம்.

மேலும் நயன்தாராவும் யோகிபாபுக்கு சிபாரிசு செய்வதாக சொல்லப்படுகிறது-

அப்போ இனி யோகி பாபுவை யோக பாபு என்றே அழைக்கலாம் தானே.. வாழ்த்துக்கள் ப்ரோ…

Comedy Actor Yogi Babu Salary Will Makes You Shock

More Articles
Follows