தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்தியாவில் உள்ள உயரிய விருதுகளில் பத்ம விருதுகளை சொல்லலாம்.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய இந்த பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
எனவே 2022 இந்தாண்டும் 2021ஆம் ஆண்டிற்கான விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த விருதுகள் வழங்கப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.
கல்வித் துறையில் தமிழகத்தை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், மருத்துவத்துறை மருத்துவர் வீராசாமி, கலைத்துறையில் கே.சி.நடராஜன், ஆர்.முத்துக்கண்மணி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று புதுச்சேரியில் தவில் இசைக்கலைஞர் ஏ.வி. முருகையனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.
பத்ம விபூஷண் : 4 பெயர்கள்
1) உ.பி..,முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்
2) மறைந்த முப்படை தலைமை தளபதி விபின் ராவத்
3) பிரபா அட்ரே (மஹாராஷ்டிரா) கலை.
4) ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி)
பத்ம பூஷண்: 17 பெயர்கள்
1) சுந்தர் பிச்சை (கூகுள் நிறுவனம்)
2) சத்ய நாதெல்லா
3) காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்
உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் தகவல்..
இந்த ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 34 பேர் பெண்கள், 10 பேர் வெளிநாட்டவர்.
இத்துடன் 13 பேருக்கு அவர்களது மரணத்துக்குப் பிறகு இந்த விருது வழங்கப்படுகிறது.
Padma Awards 2022 Full list of 128 recipients named for civilian honours