தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஜெய் செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு மணீஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜி ரமேஷ் கவனிக்க, படத்தொகுப்பை லெனின் சந்திரசேகர் செய்துள்ளார்.
இதில் அர்ஷா மற்றும் சாரா ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுடன் அமர், பாண்டு, உசிலம்பட்டி கார்த்தி, வெளுத்துக்கட்டு அப்பு, பாத்திமா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து, படக்குழுவினர் கூறியதாவது…
கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதையை காமெடியுடன் தெரிவித்துள்ளோம்.
எங்கள் பட நாயகனுக்கு எதிர்பாராத விதமாக கீழே கிடந்த ஒரு செல்போன் கிடைகிறது.
அதன்பின்னர் அவருக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வருகிறது.
அதிலிருந்து எப்படி தன்னை காப்பாற்றிக் கொண்டான் என்பதுதான் இதன் திரைக்கதை என்றனர்.
இதன் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், ஏற்காடு போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.