ஆகஸ்ட் 18ல் ரிலீஸ் ஆகும் ஓவியாவின் புதிய படம்

ஆகஸ்ட் 18ல் ரிலீஸ் ஆகும் ஓவியாவின் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviya stills25 படங்களில் நடித்திருந்தாலும் எந்தப் படமும் தராத புகழை பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகை ஓவியாவுக்கு பெற்று தந்தது.

தற்போது இவர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் அவர் இல்லாத நிகழ்ச்சியை நாங்கள் பார்க்க மாட்டோம் என ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு இழுக்க பல்வேறு முயற்சிகளை அந்த டிவி நிறுவனம் செய்து வருகிறது.

இந்நிலையில் அவர் நடித்துள்ள தெலுங்கு படம் Idi Naa Love Story என்ற படம் ஆகஸ்ட் 18ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகவுள்ள படம் என்பதால் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தருண் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவார்களா? என்பதுதான் தெரியவில்லை.

Oviyas new movie Idhi Naa Love Story release date updates

Idi-Naa-Love-Story

செப்டம்பரில் மட்டும் இத்தனை படங்களா.? பார்க்க நீங்க ரெடியா.?

செப்டம்பரில் மட்டும் இத்தனை படங்களா.? பார்க்க நீங்க ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

15 tamil movie release in September 2017இதுவரை 2017 இந்தாண்டில் கிட்டதட்ட 100 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற செப்டம்பர் மாதம் மட்டும் கிட்டதட்ட 15 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சென்சார் செய்யப்பட உள்ள படங்கள் இதில் இணையலாம் என கூறப்படுகிறது.

இதில் ஒரு சில படங்கள் தியேட்டர் கிடைக்காமல் விலக நேரிடவும் வாய்ப்புள்ளது.

இதுவரை உறுதியாகிவிட்ட படங்கள்…

1. புரியாத புதிர்
2. மாயவன்
3. நெருப்புடா
4. கருப்பன்
5. கதாநாயகன்
6. சர்வர் சுந்தரம்
7. துப்பறிவாளன்
8. கொடி வீரன்
9. வேலைக்காரன்
10. ஸ்பைடர்
11. பலூன்
12. சதுரங்கவேட்டை-2
13. செம
14. சத்யா
15. அருவி

15 tamil movie release in September 2017

காஞ்சனா-3; சன் டிவியுடன் இணைந்து தயாரிக்கும் லாரன்ஸ்.?

காஞ்சனா-3; சன் டிவியுடன் இணைந்து தயாரிக்கும் லாரன்ஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lawrance will produce Kanchana 3 with Sun Picturesலாரன்ஸ் நடித்து இயக்கிய முனி படம் மாபெரும் ஹிட்டடித்தது.

எனவே இதன் இரண்டாம் பாகத்தை காஞ்சனா என்ற பெயரில் நடித்து இயக்கி தயாரித்தார்.

இப்படம் பேய் ஹிட்டடித்து வசூல் மழை பொழிந்தது.

இதுவும் மாபெரும் வெற்றி பெற அடுத்த படத்தை காஞ்சனா2 என்ற பெயரில் எடுத்தார்.

இந்நிலையில் இதன் 4ஆம் பாகத்தை காஞ்சனா3 என்ற பெயரில் நடித்து தயாரித்து இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் எனவும் செய்திகள் வந்துள்ளன.

Lawrance will produce Kanchana 3 with Sun Pictures

நாசாவுக்கு ஒரு வாயேஜர்; எங்களுக்கு ஒரே ரஜினி… – கபாலி செல்வா

நாசாவுக்கு ஒரு வாயேஜர்; எங்களுக்கு ஒரே ரஜினி… – கபாலி செல்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali selvaகபாலி செல்வா அவர்களின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ படம்.

இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் நேற்று தங்களது ‘வாயேஜர்’ விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் ஆகியுள்ளதை கொண்டாடியது.

இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து , விண்வெளியையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கபாலி செல்வா ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சூப்பர் ஸ்டாரின் புகழை பற்றியும் 40 ஆண்டு கால சாதனைகள் பற்றியும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கபாலி செல்வா. இது குறித்து அவர் பேசுகையில் , ”என்னை போன்ற கோடான கோடி தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ரஜினி சாரின் இந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளின் சாதனை ‘வாயேஜர்’ விண்கலம் செய்துள்ள சாதனையை விட மிக பெரியது.

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே எண்ணற்ற தடைகளையும் சோதனைகளையும் இவ்வளவு ஆண்டுகளாக கடந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும் ரஜினி சாரை பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும், ‘வாயேஜர்’ விண்கலத்தின் 40 ஆம் ஆண்டை கொண்டாடும் ‘நாசா’ விண்வெளி மையத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பற்றிய, அடுத்த மாதம் ரிலீசாக போகும் எனது படமான ‘12.12.1950’ உலகத்தில் உள்ள எல்லா ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சமர்ப்பணமாகும்.

ரஜினி சாரின் பிறப்பை, அவரது பிறந்த நாளன்று மட்டும் கொண்டாடாமல், தினந்தோறும் கொண்டாடும் ரசிகர்கள் நாங்கள் என்கிறார் கபாலி செல்வா.

தரமணி படத்தில் நடிக்க தயங்கினேன்… தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

தரமணி படத்தில் நடிக்க தயங்கினேன்… தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer JS Sathish Kumarதமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார்.

இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஆரோகணம் படம் மூலம் தயாரிப்பைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறது.

இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்ற தயாரிப்பாளர் இவர். ராம் இதற்கு முன் இயக்கி தேசிய விருதுகளை அள்ளிய தங்க மீன்கள் இவரது தயாரிப்புதான்.

இதுவரை ஜேஎஸ்கே தயாரித்ததிலேயே உச்சகட்ட எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய படம் ராம் இயக்கிய தரமணிதான். இந்தப் படத்தில் ஜேஎஸ்கே ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.

படத்தில் காவல் துறை கமிஷனராக வருகிறாரே… அவர் ஜேஎஸ்கேதான்.

ஒரு புதிய நடிகர் என்று யாருமே சொல்ல முடியாத அளவுக்கு மிகக் கச்சிதமாக நடித்திருந்தார். ஒரு காவல் அதிகாரியின் உடல் மொழி, உச்சரிப்பு அத்தனையும் கச்சிதமாக வெளிப்படுத்தி, ‘யார் இந்த நடிகர்?’ எனக் கேட்க வைத்திருந்தார்.

தனது நடிப்பு அனுபவம் குறித்து ஜேஎஸ்கே கூறுகையில், “இந்தக் கேரக்டருக்கு முதலில் நிறைய நடிகர்களை வரவழைத்துப் பார்த்தார் ராம். அவருக்கு திருப்தியில்லை.

கடைசியில் என்னையே நடிக்கச் சொல்லிவிட்டார். ‘எனக்கு புதுமுகமா இருந்தா இன்னும் பெட்டர்… தெரிந்த முகமாக இருந்தால் அவர் மீது கதை செல்வதாக பார்வையாளர்கள் யூகிப்பார்கள். புதுமுகம் என்றால் அதற்கு வாய்ப்பில்லை’ என்றார்.

இருந்தாலும் தயக்கத்துடன்தான் ஒப்புக் கொண்டேன். இந்தப் பாத்திரத்துக்காக நான் எந்த முன்தயாரிப்பும் செய்யவில்லை. யாரைப் பார்த்தும் ஒத்திகை செய்யவில்லை” என்றார்.

பிக்பாஸில் ஓவியா தற்கொலை முயற்சி; சம்மன் அனுப்பிய போலீஸ்

பிக்பாஸில் ஓவியா தற்கொலை முயற்சி; சம்மன் அனுப்பிய போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress oviyaகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதமாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இதில் கலந்துகொண்ட நடிகை ஓவியாவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர்.

ஆனால் அதில் கலந்துக் கொண்ட ஆரவ் மீது காதல். பின்னர் காதல் தோல்வி, தற்கொலை முயற்சி என பல அதிரடி திருப்பங்களால் அதிலிருந்து வெளியேறினார்.

எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலாஜி என்ற வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்க, ஸ்டேஷனில் ஆஜராகும்படி ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

ஆனால் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என ஓவியாவின் மேனேஜர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows