தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்குமா? என கமல் மற்றும் விஜய்டிவியே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
சிட்டி முதல் பட்டி தொட்டி வரை பிக்பாஸ் பற்றியும் அதில் பங்கேற்றுள்ள ஓவியா பற்றியும் பலரும் விவாதித்து வருகின்றனர்.
இதில் சக பங்கேற்பாளரான ஆரவ் என்பவரிடம் காதல் வயப்பட்ட ஓவியா அவரிம் வெளிப்படுத்தினார்.
ஆனால், ஆரவ் ஓவியாவின் காதலை மறுத்து, அவரை ஒதுக்க தொடங்கினார்.
ஆனாலும் ஆரவ்வுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் சக போட்டியாளர்களே மத்தியில் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.
ஆனாலும் ரசிகர்கள் ஓவியாவை ஆதரித்து வந்தனர்.
இதனிடையில் கடந்த சில தினங்களாக கடும் மனவுளைச்சலுக்கு உள்ளான ஓவியா, பித்து பிடித்தவர் போல நடந்துக் கொண்டார்.
இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற ஓவியா திடீரென பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
சக பங்கேற்பாளர்கள் உடனே சென்று அவரை காப்பாற்றி மீட்டனர்.
இதையடுத்து மனநல மருத்துவர்களால் அவர் பரிசோதனை செய்யப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து காரில் வெளியேறுவது போன்ற ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிக் பாஸ் அரங்கில் இருந்து ஓவியா வெளியேறி விட்டதாக செய்திகள் வந்தன.
இதனை தொடர்ந்து ஓவியாவின் ரசிகர்கள் ஓவியா இல்லையென்றால், பிக்பாஸ் இல்லை, அந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைத்தான் என்றும் நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஓவியா தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 8.30 மணிக்கு ரசிகர்கள் முன்னிலையில் ஓவியாவுடன் கமல் பேச உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
Oviya attempted Suicide Bigg Boss House Controversay goes viral