ஆரவ்விடம் காதல் முறிவு; தற்கொலைக்கு முயற்சித்த ஓவியா வெளியேற்றம்

ஆரவ்விடம் காதல் முறிவு; தற்கொலைக்கு முயற்சித்த ஓவியா வெளியேற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya bigg bossபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்குமா? என கமல் மற்றும் விஜய்டிவியே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

சிட்டி முதல் பட்டி தொட்டி வரை பிக்பாஸ் பற்றியும் அதில் பங்கேற்றுள்ள ஓவியா பற்றியும் பலரும் விவாதித்து வருகின்றனர்.

இதில் சக பங்கேற்பாளரான ஆரவ் என்பவரிடம் காதல் வயப்பட்ட ஓவியா அவரிம் வெளிப்படுத்தினார்.

ஆனால், ஆரவ் ஓவியாவின் காதலை மறுத்து, அவரை ஒதுக்க தொடங்கினார்.

ஆனாலும் ஆரவ்வுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் சக போட்டியாளர்களே மத்தியில் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.

ஆனாலும் ரசிகர்கள் ஓவியாவை ஆதரித்து வந்தனர்.

இதனிடையில் கடந்த சில தினங்களாக கடும் மனவுளைச்சலுக்கு உள்ளான ஓவியா, பித்து பிடித்தவர் போல நடந்துக் கொண்டார்.

இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற ஓவியா திடீரென பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

சக பங்கேற்பாளர்கள் உடனே சென்று அவரை காப்பாற்றி மீட்டனர்.

இதையடுத்து மனநல மருத்துவர்களால் அவர் பரிசோதனை செய்யப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து காரில் வெளியேறுவது போன்ற ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிக் பாஸ் அரங்கில் இருந்து ஓவியா வெளியேறி விட்டதாக செய்திகள் வந்தன.

இதனை தொடர்ந்து ஓவியாவின் ரசிகர்கள் ஓவியா இல்லையென்றால், பிக்பாஸ் இல்லை, அந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைத்தான் என்றும் நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஓவியா தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 8.30 மணிக்கு ரசிகர்கள் முன்னிலையில் ஓவியாவுடன் கமல் பேச உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Oviya attempted Suicide Bigg Boss House Controversay goes viral

Bigg boss oviya in car

2018ஆம் ஆண்டில் ரஜினியை இயக்கும் வெற்றிமாறன்

2018ஆம் ஆண்டில் ரஜினியை இயக்கும் வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vetrimaaranதனுஷின் ஆஸ்தான இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் வெற்றிமாறன்.

இவர் தற்போது தனுஷ், சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் ஆகியோர் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தை மூன்று பாகங்களாக இயக்கி வருகிறார்.

இதில் முதல்பாகத்தைன் சூட்டிங்கை மட்டும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், காலா சூட்டிங்கில் இருந்த ரஜினியை இரண்டு முறை சந்தித்து, கதை விவாத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்.

வெற்றிமாறன் கூறிய ஒன்லைன் ரஜினிக்கு பிடித்துவிட்டதாம்.

எனவே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போதுள்ள படங்களையும் இருவரும் முடித்துவிட்டு அடுத்த 2018ஆம் ஆண்டில் ரஜினியை இயக்குவார் வெற்றிமாறன் என எதிர்பார்க்கலாம்.

Vetrimaran going to direct Rajinikanth in 2018

ரசிகர்களுக்கும் பகத்பாசிலுக்கும் வேலைக்காரன் தந்த இன்ப அதிர்ச்சி

ரசிகர்களுக்கும் பகத்பாசிலுக்கும் வேலைக்காரன் தந்த இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan fahad fazilமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன்.

இப்படத்தில் நயன்தாரா, சிநேகா, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் வெளியாகி பலரின் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்ட்டரை வருகிற ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

அன்றைய தினம் பகத்பாசில் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மேலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்க வேலைக்காரன் பட டீசரை வெளியிடவுள்ளனர்.

இந்த இரண்டு செய்திகளும் பகத்பாசிலுக்கு ரசிகர்களுக்கும் இன்பஅதிர்ச்சி அளிப்பதாக இருக்கும் என நம்பலாம்.

Velaikkaran Second Look Poster on Fahad Fazil Birthday and Teaser on 14th August

24AM STUDIOS™‏Verified account @24AMSTUDIOS
#Velaikkaran2ndLook #8thAugustFahadhFaasilBirthday & #VelaikkaranTeaser 14Aug6pm @jayam_mohanraja @Siva_Kartikeyan @anirudhofficial #gif4u

ரஜினி-அஜித்-விஜய்-சூர்யா பட சாதனைகளை முறியடித்த தனுஷ்

ரஜினி-அஜித்-விஜய்-சூர்யா பட சாதனைகளை முறியடித்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vip 2 dhanushதமிழ் படங்களுக்கு மலேசியாவில் பெருமளவில் மார்கெட் உள்ளது.

எனவே ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் அங்கு அதிகளவில் ரிலீஸ் ஆகும்.

ரஜினியின் கபாலி படம் அதிக தியேட்டர்களில் வெளியாகி மலேசியாவில் பெரும் சாதனை படைத்தது.

இந்நிலையில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள தனுஷின் விஐபி2 படத்திற்கு அங்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம்.

மலேசிய வெளியீட்டு உரிமையை மாலிக் என்பவர் பெற்றுள்ளார்.

மலேசியாவில் மட்டும் 550 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.

இது மற்ற நடிகர்களுக்கு கிடைக்கும் தியேட்டர்களை விட மிக அதிகம் என தாணு தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் தாணுவும் இணைந்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIP2 movie release in 550 screens in Malaysia

Kalaippuli S Thanu‏ @theVcreations
V Creations & Malik Streams has secured 550 screens in Malaysia for #VIP2! No other actor movie has been screened in these many centers yet.

ரஜினி அரசியலுக்கு வருவது அபாரமான முடிவு – ஷாரூக்கான்

ரஜினி அரசியலுக்கு வருவது அபாரமான முடிவு – ஷாரூக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth Shahrukh Khanதமிழகத்தைப் போலவே இந்தி திரையுலகிலும் பல நட்சத்திரங்கள் ரஜினியின் ரசிகர்களாக உள்ளனர்.

அமிதாப், ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் உள்ளிட்ட பலரும் ரஜினியின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் ஆடி ரஜினியை கௌரவித்த ஷாரூக்கான், தன் சமீபத்திய பேட்டில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியுள்ளார்.

அதில்… எனக்கு அரசியல் ஒத்துவராது. எந்தக் கட்சிக்கும் நான் ஆதரவளிக்க போவதில்லை. பிரச்சாரமும் செய்ய போவதில்லை.

தன்னலமற்ற தொண்டு செய்ய நினைப்போர் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம். அது ஒரு அபாரமான முடிவு என தெரிவித்துள்ளார்.

Shahrukh Khan welcomes Rajinikant political entry decision

ரஜினி-ஷங்கர்-பாகுபலி கதாசிரியர் கூட்டணியில் முதல்வன்2

ரஜினி-ஷங்கர்-பாகுபலி கதாசிரியர் கூட்டணியில் முதல்வன்2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shankarராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் அவர்கள் பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்களுக்கு கதை எழுதியவர் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இவர் தற்போது மெர்சல் படத்திற்கும் கதை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல்வன் படத்தின் -2ம் பாகம் குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

என்னை சந்தித்து முதல்வன் படத்தின் 2ஆம் பாகத்திற்கு கதையை எழுதச் சொன்னார்கள்.

அதை எழுதிவிட்டேன். இப்படத்தை யார் இயக்கப் போகிறார்? எனத் தெரியவில்லை.

ஆனால், முதல்வன் முதல் பாகத்தை இயக்கிய ஷங்கரே இப்படத்தையும் இயக்க வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.

இதன் முதல் பாகத்தில் அர்ஜீன் நடித்திருந்தாலும் ரஜினியை வைத்தே கதையை உருவாக்கியிருந்தார் ஷங்கர்.
ஆனால் அப்போது அரசியல் சூழ்நிலையால் ரஜினி மறுத்தார்.

தற்போது அரசியலில் நுழைய ரஜினி ஆர்வம் காட்டி வருவதால், அவர் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

In Shankar direction Rajini may act in Mudhalvan sequel

More Articles
Follows