தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதே சமயம் கொரோனா தொற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தியாவில் 1,250-க்கும் மேற்பட்ட வங்கியில் பணிபுரிபவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர்.
1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரசால் வங்கி பணியாளர்கள் மரணம் அடைந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.10 முதல் 15 லட்சம் வரை வழங்க தயாராக இருப்பதாக பெரும்பாலான வங்கிகள் அறிவித்துள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.
வங்கித் துறையை தொடர்ந்து மருத்துவ துறையிலும் மருத்துவர்கள் மரணம் அடைந்து வருவது இன்னும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்திய மருத்துவ கழகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்ட 422 மருத்துவர்கள் கொரோனா 2வது அலையில் இறந்துள்ளனர்.
இந்த மருத்துவர்களில் 100 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள் என்றும் 96 மருத்துவர்கள் பீகாரிலும் 41 மருத்துவர்கள் உத்தர பிரதேசத்தில் என இந்திய மருத்துவ கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Over 400 doctors died due to Covid during second wave