இவன் நடிச்சா படம் பார்க்கலாம்ன்னு பேர் வாங்கனும்.: கிரண் ஆர்யா

இவன் நடிச்சா படம் பார்க்கலாம்ன்னு பேர் வாங்கனும்.: கிரண் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oru Kuppai Kathai villain Kiran Arya shares his Cinema entryதினேஷ், மனீஷா இணைந்து நடித்த ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் கிரண் ஆர்யா.

நந்தினி சீரியலில் நடித்து தமிழ் மக்கள் அனைவரது அன்பையும் பெற்றுள்ள கிரண் ஆர்யா தன் சினிமா அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.

சிறு வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை ஏன் என்றால் என் சித்தப்பா ஒரு இயக்குனர். அப்போதிலிருந்தே சினிமா மீது எனக்கு காதல்.

கல்லூரி முடித்து சொந்தமாக ஒரு தொழில் துவங்கி வேலை செய்து கொண்டிருந்தேன் அப்போது என் நண்பர் குறும்படத்தில் என்னை நடிக்க வைத்தார் அப்போதிருந்து என் சினிமா வாழ்க்கை ஆரம்பமாகி விட்டது.

பிறகு தகடு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். பிறகு பாலுமகேந்திரா ஐயா அவரது கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்று வந்தேன் அப்போது பார்த்த இயக்குனர் காளி ரங்கசாமி என்னை ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லன் காதபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

படத்தில் என்னை நம்பி பெரிய கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குனர். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்று படம் வந்த பிறகு தெரிந்து கொண்டேன்.

ஒரு குப்பைக்கதை படத்திற்கு பிறகு சுந்தர்சியின் அவுனி மூவீஸ் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலில் நடிக்க ராஜ்கபூர் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் அந்த நன்றியை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் 100 சதவீதம் லவ் பண்ணி உழைத்துக் கொடுக்கணும். நான் தமிழ் சினிமாவில் தான் நடிக்க வேண்டும் என்று எப்போதும் ஆசைப்படுவேன் காரணம் இங்கே உள்ள ரசிகர்கள் நடிகர்களுக்கு கொடுக்கிற வரவேற்பு, ஆதரவு எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்தது.

அதனால் தமிழ் கத்துக்கொண்டு நடித்தேன். நாம நடிக்கிற கதாபாத்திரம் எப்பவும் சரியானதாக இருக்கணும் கதையின் திருப்பு முனையாக இருக்கணும்.

ஹீரோ, வில்லன், காமெடி என எதுவாக இருந்தாலும் சும்மா மிரட்டணும். ரசிகர்களிடையே அப்பா இவன் செம்ம நடிகன் டா இவன் நடிச்சா பார்க்கலாம் என்ற பெயர் மட்டும் எனக்கு போதும்.

ஒரு குப்பைக் கதை என் சினிமா வாழ்கையில் பெரிய திருப்புமுணை. அதற்காக எனக்கு வாய்பளித்த படத்தின் தயாரிப்பாளர் அஸ்லாம் மட்டும் இயக்குனர் காளிரங்கசாமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போது இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறேன். மற்றும் பெயர் சூட்டப்படாத இரண்டு படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

தொடர்ந்து எனக்கு ஆதரவு தருமாறு அனைத்து பத்திரிக்கை, ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

Oru Kuppai Kathai villain Kiran Arya shares his Cinema entry

கன்னடத்தில் வில்லனாக கால் பதிக்கும் விஜய்சேதுபதி

கன்னடத்தில் வில்லனாக கால் பதிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi to make his Kannada debut in Akhaadaகார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தல் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இவையில்லாமல் தெலுங்கில் ‘சாய் ரா நரசிம்மரெட்டி’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இவையில்லாமல், கன்னடப்படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறாராம்.

ஷிவ்கணேஷ் இயக்கும் ‘அக்காடா’ என்ற அந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் சாண்டல்வுட்டிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி.

அந்த படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் நாயகனாக நடிக்க, விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi to make his Kannada debut in Akhaada

ராகுல் காந்தியுடன் ரஞ்சித்-கலையரசன் சந்திப்பு; பின்னணி இதுதானா.?

ராகுல் காந்தியுடன் ரஞ்சித்-கலையரசன் சந்திப்பு; பின்னணி இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The reason behind Rahul Gandhi Director Ranjith and Kalaiyarasan meetingஇந்தியாவே விரும்பிய இளைய பிரதமர் ராஜீவ்காந்தி 30 வருடங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களின் தண்டனை காலங்கள் முடிந்தபிறகும் விடுதலை செய்யப்படாததை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில், காலா இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இது தொடர்பாக சந்தித்து பேசியுள்னர்.

மேலும் அரசியல் மற்றும் திரைத்துறை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ராகுல் கூறியதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினி நடித்த காலா படத்தை தான் பார்த்ததாகவும் அப்படம் தன்னை கவர்ந்ததாகவும் ரஞ்சித்திடம் தெரிவித்தாராம் ராகுல் காந்தி.

இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தியும் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

The reason behind Rahul Gandhi Director Ranjith and Kalaiyarasan meeting

rahul gandhi ranjith meet

Exclusive : ரஜினியின் 2.0 பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஷங்கர்

Exclusive : ரஜினியின் 2.0 பட ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 release date confirmedஇந்திய சினிமாவையே மிரள வைக்கும் அளவுக்கு மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் 2.0.

சுமார் ரூ. 500 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையைமைத்துள்ளார்.

கிட்டதட்ட ஒரு வருடமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளே.

இது எப்போது முடியும்? என்பது ஷங்கருக்கே தெரியாத நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வழியாக கிராபிக்ஸ் பணிகளை சீக்கிரம் முடித்து தருவதாக அந்த குழு தெரிவித்துள்ளதால், இப்பட ரிலீஸ் தேதியை ஷங்கர் உறுதி செய்து ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

2.0 படத்தை இந்தாண்டு 2018 நவம்பர் 29ல் ரிலீஸ் செய்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

இது ரஜினி மற்றும் அக்சய்குமார் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என உறுதியாக நம்பலாம்.

Finally Director Shankar announced his 2poing0 movie release date

2point0 release date

டாப் ஹீரோஸ் வரிசையில் சிவா; அவருக்கே இது அதிர்ச்சிதான்.!

டாப் ஹீரோஸ் வரிசையில் சிவா; அவருக்கே இது அதிர்ச்சிதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivas Tamilpadam2 movie has special show at 5am on its release dateஒரு புதுப்படம் ரிலீஸ் என்றால் தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்படும்.

அதுவும் பண்டிகை நாட்கள் என்றால் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

டாப் ஹீரோக்களின் படங்கள் என்றால் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நடவடிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகாலை என்பதை விட நள்ளிரவு என்பதே சரியாக இருக்கும். 4 மணிக்கு எல்லாம் முதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்கள் இந்த வரிசையில் அடங்கும்.

இந்நிலையில் முதன்முறையாக மிர்ச்சி சிவா நடித்துள்ள தமிழ்ப்படம் 2 படத்தின் முதல் காட்சி சென்னையில் காலை 5 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சென்னை ரோகினி தியேட்டரில் இந்த காட்சி திரையிடப்பட உள்ளது.

சென்னையிலுள்ள ஜிகே. சினிமாஸ் தியேட்டரிலும் 5 மணி காட்சி திரையிடப்பட உள்ளது.

நிச்சயம் இந்த தகவல்கள் நடிகர் சிவாவுக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே கலாய்த்து உருவாகியுள்ள இப்படம் நாளை ஜீலை 12ஆம் தேதி வெளியாகிறது.

Sivas Tamilpadam2 movie has special show at 5am on its release date

ரஜினி-விஜய்க்கு ஆதரவு.? அன்புமணியுடன் விவாதிக்க சிம்பு சவால்!

ரஜினி-விஜய்க்கு ஆதரவு.? அன்புமணியுடன் விவாதிக்க சிம்பு சவால்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu challenge to PMK Anbumani Ramadoss to support Rajini and Vijayவெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார் சிம்பு.

இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

மாநாட்டில் நடிப்பது பற்றி சிம்பு வீடியோ ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது…

வெங்கட்பிரபு உடன் படம் பண்ண வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, அது நிறைவேறியிருக்கிறது. படத்தின் தலைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

படத்தில் அரசியல் இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வருவதற்காக இந்தப்படம் என்று சொல்வது உண்மையல்ல.

படத்தில் ஒரு விஷயத்தை பேச வேண்டும் என்று நினைக்கும்போது அதை பேசியே ஆக வேண்டும், அதற்காக பயந்து போக கூடாது.

பொதுவாக சினிமாவிற்கு நிறைய பிரச்னைகள் வந்து கொண்டு இருக்கின்றன. பாபா தொடங்கி இப்போது சர்கார் வரை தொடருகின்றன.

சர்கார் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் ஏன் வருகிறது என அன்புமணி ராமதாஸ் கேட்டிருந்தார். இதைப்பற்றி நான் இப்போது எது பேசினாலும் தவறாகிவிடும்.

ஆகவே, விவாத மேடையில் அன்புமணி இதுகுறித்து விவாதிக்க முன்வந்தால் நான் விவாதிக்க தயாராக உள்ளேன். எங்கு, எப்போது என்று அவரே சொல்லட்டும்.

ஒரு நடிகனாக பதில் அளிக்க தயாராக உள்ளேன்.

Simbu challenge to PMK Anbumani Ramadoss to support Rajini and Vijay

More Articles
Follows