தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்கவுள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அவர் களம் காணவுள்ளார்.
இந்தாண்டு ஏப்ரல் மாதம் அவர் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு காரணமாக கட்சி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
எனவே நவம்பர் மாதம் ரஜினி கட்சி தொடங்குவார் என தெரிகிறது.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் ஆலோசர்களில் ஒருவரான தமிழருவி மணியன் தன் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில்…
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன்னிறுத்தி ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை விடுவிக்க நாம் ரஜினிகாந்த் அவர்களால் மட்டுமே அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற எதார்த்த நிலையை பூரணமாக உணர்ந்து அவர் முதல்வராக வேண்டும் என்ற ஒரே முடிவுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.
காந்தி பிறந்தநாளில் காமராஜர் மறைந்த நாளில் இந்த இருவருடைய கனவை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினி அவர்களின் முயற்சிக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு தமிழருவி மணியன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Only Rajini will give good service to the public says Tamilaruvi Manian