‘லவ் டுடே’ பட கதையை கேட்டதுமே ஹிட்டுன்னு தெரியும்.; யூகித்த யுவன்

‘லவ் டுடே’ பட கதையை கேட்டதுமே ஹிட்டுன்னு தெரியும்.; யூகித்த யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்த ‘லவ் டுடே’ பட 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில்… இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது…*

“இந்த படத்தின் இசையை பொறுத்தவரை எனது குழுவிற்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியர் பிரதீபிற்கும் எனது நன்றி. இந்த படத்தின் கதையை கேட்டவுடன், இது ஹிட் என்று நான் முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த படம் AGS-க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறது, அதற்கு வாழ்த்துகள். இதுபோன்ற பல வெற்றிகளை அவர்கள் அடைய வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.” என்றார்.

Once heard Love Today story i knew its hit says Yuvan

பிரதீப் பலருக்கு இன்ஷ்பிரேசன்.; ‘தனி ஒருவன்’ மோகன் ராஜா பாராட்டு

பிரதீப் பலருக்கு இன்ஷ்பிரேசன்.; ‘தனி ஒருவன்’ மோகன் ராஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்த ‘லவ் டுடே’ பட 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில்… இயக்குநர் மோகன்ராஜா கூறியதாவது…*

“AGS எனது குடும்பம் போன்றது. AGS உடன் நான் 16 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். எனது வாழ்கையில் மிகமுக்கியமான தனி ஒருவன் படம், AGS-ஆல் தான் தயாரிக்கப்பட்டது.

லவ்டுடே திரைப்பட வெற்றிக்கு படக்குழுவினர் மிகவும் தகுதியானவர்கள். இந்த படத்திற்காக இயக்குநர் பிரதீப்பிற்க்கு நன்றி கூறி கொள்கிறேன். பிரதீப் பலருக்கு இன்ஷ்பிரேசன். இதுபோன்ற பல படங்களை AGS-தர வேண்டும்.” என்றார்.

*நடிகர் சதீஷ் கூறியதாவது…*

AGS தொடர்ந்து இரண்டு புதுமுக கதாநாயகர்களை வைத்து திரைப்படம் எடுத்தார்கள். அதற்கு அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். இதுபோன்று அவர்கள் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.

பிரதீப் உடைய இந்த வெற்றி உண்மையான வெற்றி. அவர் இதை தாண்டுவதற்கே அடுத்து கடினமான உழைப்பை கொடுக்க வேண்டும். மிகச்சிறந்த வெற்றியை அவர் பதிவு செய்து இருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள்.” என்றார்.

லவ் டுடே

Pradeep is inspiration for youth says Raja

பிரதீப் இன்னொரு தனுஷாக வருவார்..; ஆர்வி உதயகுமார் ஆருடம்

பிரதீப் இன்னொரு தனுஷாக வருவார்..; ஆர்வி உதயகுமார் ஆருடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AGS Entertainment சார்பில் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்து தரப்பினரும் கொண்டாடிய இப்படம், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு, 100வது நாளை கடந்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.

இப்படம் 100 நாட்களை கடந்ததை அடுத்து படக்குழுவினரை கௌரவிக்கும் விதமாக மிகப்பிரமாண்ட விழா பிப்ரவரி 14ல் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னனி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு ஷீல்ட் வழங்கினார்கள்.

இந்நிகழ்வினில்..

*இயக்குநர் RV உதயகுமார் பேசியதாவது…*

“நூறு நாட்கள் விழா நடந்து பல ஆண்டுகள் ஆகிறது. லவ்டுடே திரைப்படம் 100 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. இயக்குநருடைய முதல் படமே எனக்கு மிகப்பிடித்தமான ஒன்றாக இருந்தது.

இந்த படத்தை அதிக பொருட்செலவில், அதிக அர்ப்பணிப்பில், அதிக சிரத்தையில், அதிக உழைப்பில் உருவாக்கியுள்ளனர். பிரதீப் இன்னொரு தனுஷாக வருவார், இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

Pradeep will be next Dhanush says RV Udhayakumar

ரோபோ சங்கர் வீட்டில் கிளிகள் வளர்ப்பு.; வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

ரோபோ சங்கர் வீட்டில் கிளிகள் வளர்ப்பு.; வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் ரோபோ சங்கர்.

அஜித்துடன் விசுவாசம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.

அண்மையில் வெளியான கொடை படத்தில் ஓவர் ஆக்டிங் செய்து ரசிகர்களை கொலை செய்தும் இருந்தார்.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி இரு கிளிகளை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது

இதனை அறிந்த சென்னை கிண்டி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரிய வகை கிளிகளை பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள் கிண்டியில் உள்ள நேசனல் சிறுவர் பூங்காவில் ஒப்படைப்பு..

மேலும் இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

Parrot at Robot Shankar home Forest department took action

விக்ரம் – ரஞ்சித் பட சூட்டிங் அப்டேட் : கே ஜி எஃப் இடத்திற்கே வந்த ‘தங்கலான்’

விக்ரம் – ரஞ்சித் பட சூட்டிங் அப்டேட் : கே ஜி எஃப் இடத்திற்கே வந்த ‘தங்கலான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கி வரும் படம் ‘தங்கலான்’. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்க நாயகிகளாக பார்வதி மற்றும் மாளவிகா இருவரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்காக பார்வதி தன் உடல் எடையை குறைத்து சமீபத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

மேலும் நடிகை மாளவிகாவும் இந்த படத்திற்காக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு அந்த வீடியோக்களை பகிர்ந்து இருந்தார்.

இதன் படப்பிடிப்பு சென்னை, கர்நாடகா பகுதிகளில் நடந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது கேஜிஎஃப் (கோலார் தங்கம்) பகுதியில் இதன் படப்பிடிப்பை படக்குழு தொடங்கியுள்ளது.

இங்கு ஒரு மாதத்திற்கு மேலாக ஷூட்டிங் நடைபெறும் என தெரிய வந்துள்ளது. ‘தங்கலான்’ படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

Thangalaan Film Shooting Update

நான் லேடி விஜய் சேதுபதி.? தமிழ் இயக்குனர்கள் மீது கடுப்பான வரலட்சுமி

நான் லேடி விஜய் சேதுபதி.? தமிழ் இயக்குனர்கள் மீது கடுப்பான வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வழக்கமான நாயகி போல இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

சமீபத்தில் இவர் நடித்த வீ3, யசோதா, மைக்கேல் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள ‘கொன்றால் பாவம்’ என்ற படம் விரைவில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் வரலட்சுமி, சந்தோஷ், ஈஸ்வரி, ராவ் சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தன் சமீபத்திய பேட்டியில் வரலட்சுமி பேசும்போது..

“என்னை லேடி விஜய் சேதுபதி என்கிறார்கள். இது எனக்கு கிடைத்த பாராட்டாக நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே கிடைத்துள்ள சிறந்த நடிகர் விஜய் சேதுபதி.. அவருடன் என்னை ஒப்பிட்டு பேசும்போது அது எனக்கு கிடைத்த பாராட்டாகவே நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழக ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டுகிறார்கள். வரவேற்கிறார்கள். ஆனால் தமிழ் இயக்குனர்கள் எனக்கான வாய்ப்பை சரியாக வழங்குவதில்லை.

தெலுங்கு சினிமாவில் என்னை கொண்டாடுகிறார்கள்.. கடந்த வருடத்திலேயே நிறைய படங்கள் வந்தன. தற்போது நிறைய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன்” என ஓப்பனாக பேசினார் வரலட்சுமி.

Varalakshmi explains about Lady Vijaysethupathi title

More Articles
Follows