OLD IS GOLD மீண்டும் சினிமா சரித்திரத்தை புரட்டிப்போட்ட ‘விக்ரம்’.; இதாண்டா கமல்!

OLD IS GOLD மீண்டும் சினிமா சரித்திரத்தை புரட்டிப்போட்ட ‘விக்ரம்’.; இதாண்டா கமல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் ‘விக்ரம்’.

அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படம் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி வெளியானது.

இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி பகத் பாஸில் நரேன் சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் உலகளவில் மாபெரும் மசூலை எட்டி ரூ. 400 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமையை தேடித் தந்தது.

பான் இந்தியா படங்களாக கன்னடம் மலையாளம் தெலுங்கு ஹிந்தி படங்கள் தமிழகத்தில் சக்கை போடு போட்ட நிலையில் விக்ரம் படத்தின் இமாலய வெற்றி ரசிகர்களால் பெரிதும் போற்றப்பட்டது.

மேலும் திரையுலகினருக்கும் அதிக உற்சாகத்தை கொடுத்தது.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் 100வது நாள் வெற்றி விழா கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 -12 வருடங்களாக பெரும்பாலான படங்கள் 100 நாட்கள் தியேட.டரகளில் ஓடுவதில்லை. ஆனால் 1970 – 1980 – 90களில் படத்தின் 100-வது நாள் 150 வது நாள் வெள்ளி விழா என பிரம்மாண்டமான விழாக்கள் கொண்டாடப்பட்டது.

தற்போது மீண்டும் பழைய சினிமா சரித்திரத்தை கமல்ஹாசன் சாத்தியமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொன்னின் செல்வன்’ எனக்கு மிகவும் பிடித்த ஆல்பம் – செல்வராகவன்..

‘பொன்னின் செல்வன்’ எனக்கு மிகவும் பிடித்த ஆல்பம் – செல்வராகவன்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கி தயாரித்திருந்த படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்த திரைப்படம் ஒரு வரலாற்று காவிய நாடகம் மற்றும் கதை சோழ வம்சத்தின் எழுச்சியை மையமாகக் கொண்டது.

‘பொன்னியின் செல்வன்’ இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் மொத்த ஆல்பமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் ‘பொன்னியின் செல்வன்’ தான் தனக்கு மிகவும் பிடித்த இசை ஆல்பம் என்று கூறினார்.

மேலும், தனது ட்விட்டரில், “எனது அனுபவத்தில் பிடித்த சிறந்த இசை ஆல்பம் இப்படம் என்பதில் சந்தேகமில்லை” என பதிவிட்டார்.

ponnyin selvan is my fav album says selvaragavan

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமண தேதி அறிவிப்பு..

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமண தேதி அறிவிப்பு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவித்தார்.

இந்நிலையில், தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் அறிமுகப்படுத்தினார்.மேலும், நர்மதா உதயகுமார் புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்நிலையில், நாளை அக்டோபர் 28-ம் தேதி சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறும் என்று ஹரிஷ் கல்யாணின் தந்தை தெரிவித்தார்.

மேலும், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஹரிஷ் கல்யாண், திருமணத்திற்கு அனைவரையும் அழைத்தார்.

Actor Harish Kalyan wedding date announcement

அக்டோபர் 31ல் மாஸ் சம்பவம்.; ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு மூவி அப்டேட்

அக்டோபர் 31ல் மாஸ் சம்பவம்.; ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு மூவி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடுவின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் ஞானசாகர் துவாரகா இயக்கத்தில் தயாராகும் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபுவின் 18 ஆவது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு வித்தியாசமான ஜானரிலான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மைக்காக உடலமைப்பில் மாற்றங்களையும் செய்து நடிக்கிறார்.

ஒவ்வொரு படத்திற்கும் அவரின் உடல் மொழி மற்றும் தோற்றப்பொலிவில் மாறுபாட்டை நாம் காணலாம்.

இந்நிலையில் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிக்கும் 18 வது படம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‌

செஹரி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ஞானசாகர் துவாரகாவுடன் அவர் இணைகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சுப்பிரமணியேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இதற்கான அறிவிப்பு, வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டருடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் தெற்கு மும்பையை சேர்ந்த அருண் கோலி என்பவரிடமிருந்து சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு எழுதிய உள்நாட்டு கடிதமும், அதில் ” அவசரம்: உங்களது வருகை அவசியமானது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த கடிதத்துடன் துப்பாக்கி, தோட்டாக்கள், பழைய ரூபாய் நோட்டு, தொலைபேசி மற்றும் சுருட்டு ஆகியவைகளும் இடம்பெற்றிருக்கிறது. இதனுடன் கிராமத்து சூழலின் பின்னணியில் ஆலயம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ‘அக்டோபர் 31ஆம் தேதி மாஸான சம்பவம்’ என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு நடிப்பில் தயாராகி வரும் அவரது பதினெட்டாவது திரைப்படம், ஒரு தெய்வீக அம்சம் கொண்ட காலகட்டத்தை சார்ந்த அதிரடி நாடகம்.

மேலும் இதன் கதைக்களம் 1989 ஆம் ஆண்டில் குப்பம் எனும் ஊரில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இது மண் மனம் கமழும் படைப்பு.

இதுவரை ரசிகர்கள் கண்டிராத வித்தியாசமான தோற்றத்தில் சுதீர் பாபு நடிக்கிறார். இதற்காக தற்போது அவர் தன்னை முழுவீச்சில் தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.

மேலும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பட நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானில் ஜூனியர் என்டிஆர் மற்றும் எஸ் எஸ் ராஜமௌலியுடன் தீபாவளியை கொண்டாடிய ராம் சரண்

ஜப்பானில் ஜூனியர் என்டிஆர் மற்றும் எஸ் எஸ் ராஜமௌலியுடன் தீபாவளியை கொண்டாடிய ராம் சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரண் தனது குடும்பத்தினருடன் தீபாவளியை வீட்டில் கொண்டாடத் தவறிவிட்டார், அதைப் பற்றி அவர் பெரிதாக வருத்தப்படவில்லை.

காரணம் அவர் ஜப்பானில் ஜூனியர் என்டிஆர் மற்றும் எஸ்எஸ் ராஜமௌலியுடன் சேர்ந்து ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை விளம்பரப்படுத்துகிறார்.

சமீபத்திய ட்வீட்டில், என்டிஆர் மற்றும் ராஜமௌலியுடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“தீபாவளிக்கு வீட்டில் இருப்பதைத் தவறவிட்டேன், ஆனால் ஜப்பானிய பார்வையாளர்களிடமிருந்து RRR மீதான அன்பை காண நேர்ந்தது என பதிவிட்டுள்ளார்.

மீண்டும் இணையும் விஜய் – அட்லீ கூட்டணி..

மீண்டும் இணையும் விஜய் – அட்லீ கூட்டணி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய்.

விஜய்யை வைத்து ‘தெறி’ , ‘மெர்சல்’ , ‘பிகில்’ என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ.

அட்லீ தற்போது ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி மற்றும் பலர் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

அட்லீ அடுத்த விஜய்யின் ‘தளபதி 68’ படத்தை இயக்க உள்ளதாக ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது விஜய் – அட்லீ இணையும் நான்காவது படமாகும்.

vijay atlee joins for a new flim

More Articles
Follows