தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.
இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வந்தன.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் இந்த வதந்திகளை மறுத்துள்ளது.
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.
இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வந்தன.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் இந்த வதந்திகளை மறுத்துள்ளது.
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் இந்த தீபாவளியை மெர்சலாக்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபலமான காசி தியேட்டரிலும் இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இங்கு ரிலீஸ் அன்று முதல் நாள் வந்து ரசிகர்களின் பல்ஸ் பார்க்கும் வழக்கம் திரைத் துறையினருக்கு உள்ளது.
ஆனால் படத்தயாரிப்பு விதித்துள்ள சில நிபந்தனைகளை ஏற்க மறுத்த தியேட்டர் நிர்வாகம் இப்படத்தை திரையிட மறுத்துவிட்டதாம்.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Mersal will not be screened at Chennai Kasi theater
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்நிலையில் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரசாந்த்.
வெற்றிச் செல்வன் இயக்கும் இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து வருகிறார்.
இது தொடர்பான சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற உள்ளது.
இப்படத்தில் பிரசாந்துடன் நடித்துள்ள சஞ்சிதா செட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் சயாஜி ஷிண்டே, கலைராணி, தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் இதில் கலந்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.
இப்படத்திற்கு ஜானி என பெயரிட்டுள்ளனர்.
இதே பெயரில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ஜானி படம் கடந்த 1980 வெளியானது குறிப்பிடத்தக்கது.
Actor Prashanth in Rajini movie title Johnny
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படம் தலைப்பு வழக்கு உள்ளிட்ட பல பிரச்சினைகளை கடந்து திரைக்கு வரவுள்ளது.
ஆனால் இப்படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பிரச்சினையில் விலங்குகள் நலவாரியத்தின் சான்றிதழ் கிடைக்காமல் உள்ளதாம்.
இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்த விஜய் இது குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக விலங்குகள் நலவாரியத்தின் சர்ட்டிபிகேட் புதன்கிழமைதான் வழங்கப்பட்டு வருகிறதாம்.
ஆனால் புதன்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாப்படுவதால் அதற்கு முன்பே சர்ட்டிபிகேட் பெற மெர்சல் படக்குழு முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.
எனவே இதுகுறித்த அவரச கூட்டம் இன்று (அக். 16) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
Mersal movie Animal welfare department certificate issue
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதன் விபரம் வருமாறு :
மயில்சாமி : S.V. சேகர் அவருக்கு பிடித்த காமெடி நடிகராக என்னைக் குறிப்பிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்கள், எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே, நீ முதலில் நல்லவனாக இருந்து பார் என்று கூறியுள்ளார்.
இந்த சங்கம் நடிகர் சங்கத்திற்கு எதிரானது அல்ல. புதுமுக நடிகர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு மயில்சாமி பேசினார்.
S.V. சேகர் : சங்கங்களை அதிகப்படுத்துவதைவிட, இருக்கும் சங்கத்தை பலப்படுத்த வேண்டும். எனக்கும், ராதாரவிக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் மீண்டும் நட்பு கொள்பவர் ராதாரவி. சங்கம் எப்போதும் ஒரே நோக்கோடு செயல்பட வேண்டும். உங்களுடைய வேலைவாய்ப்பு உங்களுடைய உழைப்பாலும், திறமையாலும் மட்டுமே கிடைக்கும். சம்பள நிர்ணயத்தில் அனுசரிப்பு வேண்டும்.
J.K. ரித்திஷ் : 4 செங்கல் வைத்துவிட்டு ஏதோ சாதிக்க போவதாகக் கூறி யாரை நீக்கினீர்களோ, அவர்களை இன்றிலிருந்து மூன்று மாதத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைப்பேன். பழிவாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது. இன்னும் 11 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. வருகிற தேர்தலை உங்களுடைய தேர்தலாக கருதி எங்களைத் தேர்ந்தெடுங்கள் என்று தமிழ்நாடு புதுமுக நடிகர்கள் சங்க உறுப்பினர்களுக்கு J.K.ரித்திஷ் வேண்டுகோள் விடுத்தார்.
ராதாரவி : சினேகன் என்னைப் பள்ளிக்கூடம் என்றுக் கூறினார். ஆனால் நானும் புதுமுகம் தான். விமர்சனங்களைப் பற்றி கவலை கொண்டால் வெற்றியடைய முடியாது.
நக்கீரனில் கர்ஜனை என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறேன். 14 வருடம் தலைவர் பதவியிலும், இன்னும் சில பதவிகளிலும் இருந்திருக்கிறேன், கணக்கில் எம்.ஜி.ஆர், S.S.R. காலத்திலிருந்தே குளறுபடி இருக்கின்றது. அழகாக இருந்தாலும் நம்மூர் பெண்களை மதிக்கமாட்டார்கள்.
எங்கேயோ மும்பையிலிருந்து தேடிப்பிடித்து தமிழ்த்தாயின் கற்பைப் பறிக்கக்கூடிய அளவில் தமிழ் பேசும் நடிகைகளைக் கூட்டி வருவார்கள். இதுதான் உங்களுக்கு தாய் வீடு என்று வலியுறுத்தினார்.
மேலும், இது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு போட்டியான சங்கம் அல்ல.
‘நாடகம் ரசிகனை உருவாக்கும்; சினிமா வெறியனை உருவாக்கும்’. உங்கள் பெயர்களை நீங்கள் தான் மாற்ற வேண்டும். ஒன்று நினைத்து விட்டால் அதை முடிக்காமல் விடமாட்டார் ரித்திஷ்.
எவ்வளவு பெரிய மாளிகையாக இருந்தாலும் முதலில் செங்கல் தான். மைசூர் மஹாராஜாவே இருந்தாலும் பிறக்கும் போது குழந்தை தான்.
அதேபோல் இக்கூட்டத்திலும் ஒரு எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி, ராதிகா இருக்கிறார்கள். எல்லா பொதுக்குழு கூட்டத்திற்கும் இந்தளவு கூட்டம் இருக்க வேண்டும். சந்தா முறையாக செலுத்த வேண்டும். நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன்.
தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள். உறுப்பினர்களில் யாராவது இறந்துவிட்டால் வேலை இல்லாதவர்கள் இறுதி வரை செல்ல வேண்டும் என்று ‘டத்தோ’ ராதாரவி வலியுறுத்தி பேசினார்.
மாற்று திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மிஸ்டர் இந்தியா ராஜேந்திரன் சங்கத்தை வாழ்த்தி பேசினார்.
எங்களையும் மதித்து இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்ததற்கு நன்றி தெரிவித்து, நன்றியுரையாற்றினார் திருநங்கை நமிதா.
கிச்சா ரமேஷ் இவ்விழாவை ஏற்பாடு செய்தார். விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இறுதியாக, புதுமுக நடிகர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
Radha Ravi speech at Tamilnadu Pudhumuga Nadigargal Sangam at Chennai
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கவிஞர் சிநேகன் பேசியதாவது…
“எல்லோரும் பள்ளிக்கூடத்தில் கற்பார்கள், ஆனால் பள்ளிக்கூடமே ராதாரவிதான். அன்பு, அரவணைப்பு அவரிடம் உண்டு. வாய் சொல் அல்லாமல் செயலிலேயே காட்டுவார்.
S.V. சேகருக்கு ஸ்விட்ச் எங்கிருக்கிறது என்று தெரியும். கலை மானுடத்தின் சொந்தம், யாருடைய உரிமையையும் பறிக்கக்கூடாது. எல்லோருக்கும் அடையாளம் ரொம்ப முக்கியம்.
3000 பாடல்கள், 72 விருதுகள், 6 புத்தகங்கள், இவை யாவும் என்னை அடையாளப்படுத்தவில்லை. பிக் பாஸ் தான் அடையாளம் காட்டியது. கலைஞர்கள் விமர்சனங்களை தூக்கியெறிய வேண்டும்.
அப்படி எறிந்ததால் தான் ராதாரவி இன்று ‘ராஜாரவி’யாக இருக்கிறார். இவ்வாறு சினேகன் பேசினார்.
Lyricist Snehan speech at New Nadigar sangam meeting