#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம்… ரஜினிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட்..; யார் பார்த்த வேலை இது..?

#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம்… ரஜினிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட்..; யார் பார்த்த வேலை இது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthபொதுவாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக விமர்சிப்பவர் சீமான்.

இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

அடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.

இந்த நிலையில் சற்றுமுன்.. ரஜினிக்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

#தமிழர்_நாட்டை_தமிழர்_ஆள்வோம் என பதிவிட்டு வருகின்றனர்.

NTK party twerts againt Rajinikant political entry ?

‘கன்னிராசி’ படத்தின் தடை நீங்கியது.; டிசம்பர் 4 முதல் தியேட்டர்களில் ரிலீஸ்.!

‘கன்னிராசி’ படத்தின் தடை நீங்கியது.; டிசம்பர் 4 முதல் தியேட்டர்களில் ரிலீஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanni Raasiகிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’.

இதில் விமல் கதாநாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே வெளியாக இருந்தது.

தியேட்டர்கள் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் விநியோக உரிமையில் பிரச்சனை ஏற்பட்டு தடை வழங்கப்பட்டது.

தற்போது மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னிராசி திரைப்படம் டிசம்பர் 4ம்தேதி (நாளை) தியேட்டரில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Official : Family drama Kanni Rasi to hit the screens tomorrow

JUST IN ரஜினி கட்சியில் முக்கிய பொறுப்புகள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

JUST IN ரஜினி கட்சியில் முக்கிய பொறுப்புகள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arjuna Murthyஅடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.

இந்த நிலையில் சற்றுமுன்..
அதிகாரப்பூர்வ அறிவிப்பு என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை ரஜினிகாந்த் சற்றுமுன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

யார் இந்த அர்ஜுனமூர்த்தி..?

அர்ஜூன மூர்த்தி திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர் ஆவார்.

ஆரம்ப காலத்தில் திமுக எம்.பி தயாநிதிமாறன் உடன் பணியாற்றி வந்தார்.

அதன்பின் பாஜகவின் அறிவுச்சார்பு தலைவராக இருந்தார்.

தற்போது ரஜினியுடன் சேர்ந்ததால், அர்ஜூன மூர்த்தியை பாஜக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Arjuna Murthy appointed as chief coordinator for Rajinikanth’s party

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய வேகமான உலகில் அடுத்து என்ன என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

அப்படியான வேகமான வாழ்க்கையால், பார்க்கும் கதையிலும் த்ரில்லர் வகை படங்களையே அதிகம் எதிர்நோக்குகிறோம்.

அதனாலே வித்தியாசமான த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது

அந்த வரிசையில் இணைகிறது ‘ரூபம்’. எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளித்து, அது கேட்கும் பிரம்மாண்டத்தை வழங்கி வரும் நிறுவனம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்.

அறம் தொடங்கி சமீபத்திய க/பெ ரணசிங்கம் வரையில் அந்நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, உடனே தயாரிப்பில் இறங்கியுள்ளது.

அடுத்த காட்சியை யூகிக்க முடியாத அளவுக்கு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் ‘ரூபம்’ தயாராகவுள்ளது.

இதில் பார்வதி நாயர் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

த்ரில்லர் படங்கள் என்றாலே தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரதானமாக இருக்க வேண்டும். ‘ரூபம்’ கதைக்கு அழகு சேர்க்க ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளராக ஜிப்ரான், சண்டைக் காட்சிகளுக்கு இயக்குநராக பீட்டர் ஹெய்ன், எடிட்டராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

‘ரூபம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் படக்குழு பணிபுரிந்து வருகிறது. இதில் பார்வதி நாயருடன் முன்னணி இந்தி நடிகர் ஃப்ரெடி டாருவாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

அவர் தமிழில் ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இதுவாகும். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2021ம் ஆண்டில் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்துக் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பலாம்.

KJR studios next film is titled Rubam

Rubam

புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்..; ரஜினிக்கு முக. அழகிரி வாழ்த்து

புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்..; ரஜினிக்கு முக. அழகிரி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Alagiri Rajinikanth2021ல் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ரஜினிகாந்த் இன்று அறிவித்தார்.

மேலும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்தார்…

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது… தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தியை தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார்.

தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.

ரஜினி ரசிகர்கள் கொட்டும் மழையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில்….

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, ரஜினிகாந்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு “புதிய கட்சிக்கு புதிய மாற்றத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்து கொண்டார்.

MK Azhagiri wishes to Rajinikanth on his political entry

MEGA BREAKING தமிழக தலையெழுத்தை மாத்தனும்.. என் வெற்றி மக்களின் வெற்றி.. என் உயிரை விட மக்கள் நலனே முக்கியம்..; கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன்.. – ரஜினி

MEGA BREAKING தமிழக தலையெழுத்தை மாத்தனும்.. என் வெற்றி மக்களின் வெற்றி.. என் உயிரை விட மக்கள் நலனே முக்கியம்..; கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன்.. – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அவர் பேசியதாவது…

என் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்

என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்.

அரசியல் மாற்றம் தேவை… கட்டாயம் நிகழும்.

Rajinikanth RARE PHOTOS

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது.

தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம்… கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை..

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Time has come to change the fate of TN says Rajinikanth

Rajinikanth

More Articles
Follows